Tuesday 15 January, 2013

தும்பிக்கையில்லா யானை சச்சார் கமிட்டி அறிக்கை?


யானை விலங்குகளில் மிகப் பிரமாண்டபமானது என்பது அனைவருக்கும் தெரியும். அதன் தும்பிக்கை யானையின் தற்காப்பிற்கும், உணவினை அள்ளி உயிர் வாழ்வதற்கும் இன்றியமையானது என்பதினை யாரும் மறுக்க மாட்டார்கள்.
அதேபோன்று இந்திய துணைக் கண்டத்தின் விடுதலைக்காக பாடுபட்டு பரங்கியரை விரட்டிவிட்டு, பரங்கியரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் நாடு துண்டாடப் பட்டு, இந்திய முஸ்லிம்கள் மைனாரிட்டி என்ற நிலைக்குத் தள்ளபட்டனர்.
நாடு சுதந்திரம் அடைந்து அறுவதினைத் தாண்டிய பிறகு முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி ஆகியவற்றில் நிலை என்ன என்று ஆராய புது டெல்லி முன்னாள் உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் ஆறு போர் கொண்ட குழுவினை பாரதப் பிரதமர் 2005 ஆம் ஆண்டு நியமித்தார்.
அந்தக் குழு சுமார் இருபது மாதங்கள் கழித்து 403 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையும் 30.11.2006 யில் பாராளுமன்ற மக்களவையில் சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில் பதினெட்டு சதவீத முஸ்லிம் மக்கள் கொண்ட அமைப்பு இந்தியாவில் பதினெட்டு சதவீத சலுகையுடன் இருக்கும் தலித் மக்கள், பழங்குடியினரைவிட கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சமூகத்தில் பின் தங்கி உள்ளனர் என்ற அதிர்ச்சி தரும் உண்மையினை தெரிவித்தது.

ஒரு உண்மை அறியும் குழு அறிக்கை கிடைத்ததும் அதனை உடனே நிறைவேற்றும் கடமை அரசுக்கு உண்டு என்று எந்த ஜனநாயக, மத சார்பற்ற நாட்டில் உள்ள அனைவரும் ஒத்துக்கொள்வார்கள். ஆனால் இங்கே நடப்பது என்ன என்று பார்ப்போமேயானால் மத்திய அரசில் மைனோரிட்டி அமைச்சராக இருந்து இன்று வெளிநாட்டு அமைச்சராக இருக்கும் மதிப்பு மிகு சல்மான் குர்ஷித் அவர்களே புலம்பும் அளவிற்கு இருப்பது வெட்ககேடு என்றால் அனைவரும் ஒத்துக் கொள்ளத்தானே செய்வார்கள்!
மாண்பிமிகு மத்திய அமைச்சர் ராஜேந்தர் சச்சார் கமிட்டி 2006 இல் அமைத்ததிற்குப் பிறகு முஸ்லிம்கள் சமூகம், பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பில் அடைந்த முன்னேற்றம் பற்றி நடந்த கருத்தரங்கில் பேசும்போது, பல்வேறு துறைகளில் ஏற்பட்ட குளறுபடிகளால் சச்சார் குழுவினால் பரிந்துரைக்கப் பட்ட சிபாரிசுகள் நிறைவேற்றப் படமுடிய வில்லை எனச் சொல்லி இருக்கிறார்.
அவர் கூறும் குளறுபடிகள் பின் வருமாறு:
 ஆந்திரா மாநிலம் முஸ்லிம்களுக்கு நாலு சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்ததை உச்ச நீதி மன்றம் தடுத்து இடைகால உத்தரவு வழங்கப் பட்டதினை காரணமாக கூறுகிறார்.
இதேபோன்று உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் முன்பு ஆட்சி செய்த மாயா தேவி தலித் மக்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை தர சட்டம் கொண்டு வந்தபோது உச்ச நீதி மன்றம் தடை செய்தது. அப்போது மத்திய அரசு மாயா தேவி கட்சியின் ஆதரவினைப் பெற பாராளு மன்றத்தில் மாநிலங்களவையில் வரிந்து கட்டிக் கொண்டு சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றவில்லையா? ஏன் அதுபோன்ற ஒரு சட்டத் திருத்தம் மத்திய அரசோ அல்லது எந்த ஒரு தனி முஸ்லிம் எம்.பியோ தனி பில்லாக கொண்டு வரவில்லை என்று உங்களுக்குக் கேட்கத் தோணவில்லையா?
தமிழகத்தில் பிற்பட்டோர் இட ஒதிக்கீடு 69 சதவீதம் என்று கொண்டு வந்தபோது உச்ச நீதி மன்றம் வரை சென்று அவ்வாறு கொண்டு வந்தது செல்லும் என்று மாநில அரசு வாதாடிப் பெற்றதுபோல் மத்திய அரசு ஏன் செய்ய வில்லை என்று உங்களுக்குக் கேட்கத்தோனுவது நியாயம்  தானே!
சச்சார் கமிட்டி சமர்ப்பித்த அறிக்கைக்குப் பின் முஸ்லிம்கள் நிலை பற்றி பொருளாதார நிபுணர் அபுசலே ஷரிப் கூறுவதாவது:
1) முஸ்லிம்கள் கல்வியில் மற்ற பிற்பட்டவரின் பிள்ளைகள் மெட்ரிகுலேசன் பள்ளி அனுமதியினைக் காட்டிலும் பின் தங்கி உள்ளார்கள். உயர் கல்வியில் இந்து மத மாணவர்கள் மட்டுமின்றி மற்ற மைனோரிட்டி மாணவர் அட்மிசனைக் காட்டிலும் பின் தங்கி உள்ளார்கள் என்றும் கூறுகிறார்.
2) உங்களுக்கு அனைவருக்கும் தெரியும் மகாத்மா காந்தி கிராம வேலை வாய்ப்பு திட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ரூ.நூறு கொடுக்கப் படுவதும் அது இப்போது பாங்க் மூலம் வழங்கப் படுவதும். அந்த கிராம வேலை வாய்ப்பு திட்டத்தில் முஸ்லிம்கள்  ஆரவே  பயன் பெறவில்லை என்று கூறுகிறார். 
ஏன் முஸ்லிம்கள் இந்த நாட்டு மக்களில்லையா என்று உங்களுக்குக் கேட்கத்தோன்றும். இது அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் புறக்கணிக்கும் வேலைதானே! எத்தனை முஸ்லிம்கள் மாட, மாளிகைகளில் வசிக்கின்றனர். வெள்ளிக் கிழமை பள்ளி தோறும் சென்று பார்த்தால் காலணா, அறையனாவிற்காக கையேந்தும் முஸ்லிம் வயோதிகர், பெண்கள், நோயாளிகள் போன்றோரைப் பார்க்கும் போது நெஞ்சில் ரத்தம் கசிவது இயற்கைதானே! ஏன் அவர் இந்த நாட்டு குடிமக்கள் இல்லையா? அவர்கள் கிராம வேலை வாய்ப்பு திட்டத்தில் பயன் பெறக் கூடாதா?
3) முஸ்லிம்களுக்கு கடன் கொடுத்து உதவ ரிசர்வ் வங்கியால் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைகள் திறக்காத கடிதங்களாகவே உள்ளன. அதனால் தான் முஸ்லிம் மாணவர் கல்விக் கடன் பெறவும், தொழில் முனைவோர் கடனுக்காகவும் வங்கிகளின் கதவுகளில் நாட்கணக்கில் காத்துக் கிடக்கும் பரிதாபமான நிலை ஏற்படுகிறது அன்றாட வாடிக்கையாக உள்ளது.
4) இந்தியாவில் முஸ்லிம்கள் உள்பட மைனாரிட்டி மக்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களாக 93 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் அந்த மாவட்டங்கள் முன்னேற ரூ 37,800 கோடிகள் நிதி ஒதிக்கீடு செய்யப் பட்டுள்ளன. ஆனால் 
அதனில் ரூ. 856 கோடிகள் தான் மாநில ஆரசுகளால் செலவழிக்கப் பட்டுள்ளன. 
மேற்கூறிய எடுத்துக் காட்டு மூலம் மாநில அரசுகள் எந்த விதத்தில் மைனாரிட்டி மீது கருணை காட்டுகிறது என்று விளங்க வில்லையா உங்களுக்கு? ஏன் மத்திய அரசு மைனாரிட்டி திட்டங்களுக்கு செலவழிக்க ஒரு கண்காணிப்பு குழவினை அமைத்து நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உங்களுக்கு கேட்கத் தோனவில்லையா?
தலித்துகளுக்கு வேலை வாய்ப்பில் பதவி உயர்வுக்கு மாநிலங்களவையில் கட்சி வேறுபாடு அல்லாமல் சமதாக் கட்சியினைத் தவிர ஆதரவுக் கொடுத்தனர். ஏன் தெரியுமா வருகின்ற பாராளுமன்றத்தில் தலித் மக்கள் ஓட்டுகள் இல்லையென்றால் கிடைக்காது என்பதால்தான்.
ஆனால் முஸ்லிம் அமைப்புகள் ஒற்றுமை இல்லாததால் பல்வேறு பிரிவுகளாக தனித் தனியாக இட ஓதிக்கீடுக்கான ஆர்பாட்டங்கள், மறியல்கள் ஈடுபட்டன. காரணம் அந்த  அமைப்புகள் பலத்தினைக் காட்டுவதிற்குதான். ஒதிங்கு இருந்த 
கண்ணியமிகு காயிதே மில்லத்தால் வளர்க்கப் பட்ட இயக்கம் பாராளுமன்ற தேர்தல் வருகின்றது என்று தெரிந்தவுடன் அவசர அவசரமாக  இட ஒதிக்கீடு ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிக்கை வெளியிட்டது  வரவேற்கப்பட வேண்டியது ஒன்றுதான் காலதாமதமானாலும்.
1971 ஆம் ஆண்டு காயிதே மில்லத் அலிகார் நகரில் பேசும்போது, முஸ்லிம்கள் வேறுபட்டு இருந்தால் வெற்றியினை பெறமுடியாது மாறாக ஒன்று பட்டால் வெற்றி காண முடியும் என்றார். அதனையேதான் ரசூலல்லாஹ் அவர்களும், 'முஸ்லிம்கள் ஒற்றுமை என்ற கயிறினை கட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள் என்றார்கள்'.
தலித்துகளுக்கு வேலையில் பதவி உயர்வுக்கு வரிந்து கட்டிக் கொண்டு மாநிலங்களவையில் கைகலப்பு வந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து மசோதா நிறைவேற மாயாதேவி பாடுபட்டார். இன்று ஆளும் கட்சியில் இருந்தாலும், உயர்  பதவிகள் வகித்தாலும்
முஸ்லிம்களுக்காக உரிமையினை பெற மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து பாடு படவேண்டும். இல்லை என்றால் நாளை எதிர் கட்சியில் அமர வேண்டிய நிலை வரும் என்று பயப் படவேண்டும். பேரறிஞர் அண்ணா சொன்னது போன்று, 'பதவி என்பது மேலில் போட்டிருக்கும் துண்டாகக் கருத வேண்டும்'. முஸ்லிம்களுக்கு சாதகமான சச்சார் மற்றும் மிஸ்ரா குழு அறிக்கைகள் நிறைவேற்றப் படவில்லை என்றால். பதவியினை உதறித்தள்ள தயாராக வேண்டியது தானே என்று உங்களுக்கும் எனக்கு கேட்கத் தோணுவது நியாயம்  தானே!
கவிஞர் ஆதிரைத் தாகா சொன்னதுபோல், 'துணிவில்லாத சமுதாயம் பட்டுப் போகும்'.
அதேபோன்று கட்டுக் கோப்பு இல்லாத சமூதாயமும் வீழ்ச்சி அடையும் என்று முட்டையினை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
முட்டை கெடாமல் இருப்பதிற்க்கும், குஞ்சு போரிப்பதிர்க்கும் எப்படி வெள்ளைக் கருவினையும்,மஞ்சள் கருவினையும் இணைக்கும் பாலமாக ஓடு இருக்கின்றதோ அதேபோன்று சமூதாய இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் முஸ்லிம்கள் நலனில் அக்கறையினை தங்களது மேலான கொள்கைகளாக கருதி ஒற்றுமைப் பட்டு குரல் கொடுத்தால் காணக் கிடைக்காத கமிசன் அறிக்கைகளுக்கும் காலம் வழி வகுக்கும். இல்லை என்றால் யானை தன் தலையில் மண்ணை அல்லைப் போட்ட கதையாகுமென்பது சரிதானே!


Tuesday 1 January, 2013

பாலியல் குற்றங்களும் பொது மக்கள் கருத்துகளும்!



16.12.2012 அன்று புது டெல்லியில் மருத்துவப் படிப்புத் மாணவி அம்ருதிக்கு நேர்ந்த பாலியல் கொடுமையும், அந்தப் பெண் லண்டன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பிறகும் பிழைக்க வைக்க முடியவில்லை என்ற ஆதங்கமும் நெஞ்சை உருக்கிய சம்பவம் தான். அதேபோன்ற சம்பவங்கள் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகர் காவல் நிலைய எல்கைக்குள்ளும், திருவாரூர் மாவட்டம் வேதாரண்யத்தில் பள்ளி மாணவிகளுக்கும் தமிழ் நாட்டில் நடந்து அதனால் கண்டனங்கள் எழுப்பி , கவலையும் மக்கள் அடைந்திருக்கிறார்கள் என்றால் மறுக்க முடியாது.
ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுத்த சிலர் அதுவும் குறிப்பாக மகளிர், துபாய், சௌதி அரேபியா மற்றும் இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் கடுமையான சட்டங்கள் போன்று  இயற்றப் பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஒரு பெண்மணி கூறும்போது, 'தான் துபையில்  பல ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், அங்கே குற்றம் செய்தவர்களுக்கு மக்கள் மத்தியில், குற்றவாளிக்கு கசையடியும், மரண தண்டனையும் நிறைவேற்றுவதினைப் பார்த்ததாகவும் கூறினா' கூறினார். 
அது மட்டுமல்லாமல் சில அரசியல் தலைவர்கள் குறிப்பாக இந்திய நாட்டு ஜனாதிபதி மகனும், பாராளுமன்ற உறுப்பினரானவரும், ஆந்திர மாநில காங்கிரஸ் மந்திரியும், மதுரை ஆதீனமும் பெண்கள் கண்ணியமான உடை அணிந்தால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கலாம் என்று கூறி முற்போக்கு மகளிரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டனர். இன்னும் சிலர், பெண்கள் இரவு நேரத்தில் கணவரில்லாத ஆண்களுடன் செல்வதால் இதுபோன்ற குற்றம் நடக்கின்றது என்றனர்.
மதுரை ஆதீனம் ஒருபடி மேல் போய் பெண்கள் முஸ்லிம் மத பெண்கள் போல் உடை அணிய வேண்டும் என்று கருத்துக் கூறி இருக்கிறார். அப்போது தான் இசை முரசு நாகூர் அனிபா பாடிய பாட்டு, 'முக்காடு போட்டிடு முஸ்லிம் பெண்ணே, முகத்தினை மறைத்திடு முஸ்லிம் பெண்ணே' என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
ஒரு மத்திய சமூக நலத் துறை அமைச்சர் பாலியல் குற்றம் செய்யும் மைனர் சிறுவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இன்னும் சிலர் சினிமா, தொலைக் காட்சியில் வரும் பாலியல் தூண்டும் செய்திகள் தான் இளைஞர்களை குற்றம் செய்யத் தூண்டுகிறது என்று கூறுகின்றனர்.
மத்திய அரசும் இதுபோன்ற குற்றம் வராது தடுக்க அல்லது தண்டனை வழங்க என்ன செய்ய வேண்டும் என்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வர்மா அவர்கள் தலைமையில் ஒரு கமிட்டி நியமித்துள்ளது.
நான் கூறிய அனைத்து தகவல்களும் தீ பற்றிய பின்பு அணைக்கும் செயலாக உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைகின்றேன்.
ஆனால் இஸ்லாமிய சரியாத் சட்டம் வருமுன் காக்கும் சட்டம் என்றால் மிகையாகாது.
ஏக அல்லாஹ் இறக்கி வைத்த திருக் குறானும், மனித வாழ்விற்கு நன்னெறி போதித்த நபி பெருமானாரின் நற்போதனைகளும் மனிதனை மாக்காளாக மாறாது பாதுகாத்துக் கொள்ளும் கேடையமாக அமைந்திருக்கின்றது என்றால் மிகையாகாது. போதை தலைக்கேறிவிட்டால் தாயென்றும், தாரமென்றும் குடிகாரர்கள் பார்ப்பதில்லை என்பதால் குடியினை தடை செய்து உள்ளது, உடல் அங்கங்கள் கணவருக்கு மட்டும் தான் காட்டவேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பதினால் பெண்கள் கண்ணியமாக இருக்க வழி  செய்துள்ளது, தனக்குத் திருமணமானவளைத் தவிர அடுத்தப் பெண்களைப் பார்க்கும்போது தலை தாழ்த்திக் கொள்ளுங்கள் என்றும், பெண்களிடம் கண்ணியம் தவறும் மிருக குணம் படைத்தவர்களுக்கு அவர்கள் உணரும் படி கடுமையான சட்டங்கள் வரையறுக்க பட்ட சட்டப் பொக்கிஷம் தான் சரியத் சட்டம். 
அது சரி நமது நாட்டிலும் கற்பழிப்பிற்கு கடுமையான சட்டங்கள் குற்றவியல் சட்டத்தில் உள்ளதே பின் எப்படி இந்தத் தவறுகள் நடக்கின்றது எனக் கேட்கலாம்.  நமது நாட்டில் பாலியல் குற்றவாளிகளை முகத்தினை மறைத்து நீதி மன்றத்திற்கு அனுப்பும் செயலினைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் சரியத் சட்டத்தில் குற்றம் செய்யும் நபர் வெட்கி தலை குனியும் அளவிற்கு பொது மக்கள் முன்னிலையில் தண்டனை வழங்குவதால் அவன் எங்கு என்றாலும் அவனை சமூக புறக்கணிப்புக்கு ஆளாக நேருடுகிறது. அவ்வாறு செய்யாததினால் ஆழ்வார் திருநகரில் பள்ளிச் சிறுமியினை கற்பழித்து கொன்ற கயவன் ஏற்கனவே அதுபோன்ற குற்றம் செய்து ஜாமீனில் விடுதலையாகி மறுபடியும் குடி வெறியில் அதே தவறினைச் செய்திருக்கின்றான்.
மனிதனால் இயற்றப் பட்ட சட்டத்தினுக்கும், இறைவனால் வழங்கப் பட்ட சரியத் சட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளை உங்கள் முன் வைக்கலாம் என நினைக்கிறேன்:
1) மனிதனால் இயற்றப் பட்ட சட்டம் பாராளுமன்றம், சட்டமன்றம் போன்றவைகளின் கைப்பாவையாகி உள்ளது.அது காலப் போக்கில் தேவைக்கேற்ப வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது.
ஆனால் சரியத் சட்டம் ஏக அல்லாஹ் அருளால் இறக்கி வைக்கப் பட்டுள்ளது. அது ஒரு நிலையான சட்டம். மனிதன் வாழ்வில் அத்தனை தேவைகளுக்கும் வழி காணப்பட்டுள்ளது.
2) மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் நிலையானதல்ல. உதாரணத்திற்கு மது காங்கிரசு தமிழகத்தில் ஆண்டபோது திறந்து விடப் படவில்லை. ஆனால் அதற்குப் பின் வந்த அரசுகள் மதுவினை ஒரு வருமானம் வரும் துறையாக கருதினர். இன்றைக்கு மது விற்பனையால் ஆண்டுக்கு பதினெட்டாயிரம்  கோடி வருமானம் என கணக்குக் காட்டப் படுகிறது.
ஆனால் சரியத் சட்டத்தில் மதுவினைக் குடிப்பதிற்கும், விற்பனை செய்வதிற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. அந்தக் கட்டுப் பாடு நேரத்திற்கு, அரசுக்கு ஏற்ப மாறுபட்டதில்லை.
3) மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் வருங்கால சந்ததி பற்றி சிந்திப்பதில்லை. ஏனெறால் அந்தச் சட்டத்தினால் பயன் பெறுபவர் பெரும்பாலும் அரசியல் வாதிகள் என்பதால்.
ஆனால் அல்லாஹ்விற்கு வருங்கால சந்ததியினைப் பற்றிய சிந்தனை இருப்பதால் அவர்கள் பயன்படும் படி சட்டங்கள் உள்ளன. உதாரணத்திற்கு பெண்கள் தங்கள் அங்க அடையாளங்கள் தன்னால் கைப்பிடிக்கும் கணவனுக்கு மட்டும் தெரிய வேண்டும் என்ற அளவிற்குத் தான் உடை உடுத்த வேண்டும் என்ற கட்டுப் பாடு உள்ளது. கணவனுடன் தான் பெரும்பாலும் பயணம் செய்யவேண்டும் அல்லது பெற்றோர் அல்லது உடன்பிறந்தோர் ஆகியோருடன் தான் பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப் பாடு உள்ளது. அதுபோன்று செய்யது தனிப் பட்ட ஆணுடன் இரவு நேரத்தில் பயணம் செய்ததால் டெல்லியில்  துரதிஷ்டமான சம்பவம் நடந்தது என்றால் மிகையாகாது.
4) மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் குறிப்பிட்ட ஒரு நாடு, அதன் மக்களைச் சார்ந்து இருக்கும்.
ஆனால் இஸ்லாமிய நாடு அனைத்திற்கும் பொதுவான சட்டமாக சரியத் சட்டம் அமையும். இஸ்லாமில்லாத நாடுகளிலும் சரியத் சட்டம் இந்திய தண்டனைச் சட்டத்தினைத் தவிர கடைப் பிடிக்கப் பட்டு வருவதினைக் காணலாம்.
5) மனிதனால் இயற்றப் படும் சட்டம் பொது இடத்தில் நன்னடத்தையும், நாகரியத்தினை தடுப்பதாக அமைந்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி அமைவதில்லை.
சரியத் சட்டம் நன்மையினைக் காத்து, தீமையினை தடுப்பதாக அமைந்துள்ளது. உதாரணத்திற்கு ஜினா என்ற விபச்சாரம் இஸ்லாத்தில் தடை செய்யப் பட்டுள்ளது. ஆனால் மனிதனால் ஏற்படுத்திய சட்டம் விபச்சாரத்திற்கு லைசென்ஸ் வழங்கும் அளவிற்கு உள்ளது.
6) மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் நீதிப் படிப்பினை போதிக்கும் சட்டமாக அமையவில்லை.
ஆனால் சரியத் சட்டம் நீதி படிப்பினை போதிக்கும் சட்டமாக அமைந்துள்ளது.
7) மனிதனால் வடிவமைக்கப் பட்ட சட்டம் பொது அமைதிக்குப் பங்கம் வராதவரை அல்லது அந்தக் குற்றம் வெளி உலகிற்கு தெரியாதவரை குற்றமாகாது. திருமணமாகாத இருவர் ஒப்புதலுடன் உடல் உறவு கொள்வது குற்றமில்லை. 
ஆனால் மறைவானவற்றை அறியும் திறன் கொண்ட அல்லாஹ்வால் இயற்றப் பட்டச் சட்டம் மறைவான தீய செயலிலிருந்தும் மனிதனை காக்கின்றது. கணவன் அல்லாத வேறு ஒருவருடன் உடல் உறவு கொள்வதினை சரியத் சட்டம் ஏற்றுக் கொள்வதில்லை.
8) மனிதனின் சுயக் கட்டுப் பாடு தளரும்போது தவறுகள் நடக்கின்றன. இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு மனிதனும் சந்தர்ப்பம் கிடைக்காத பாலியல் குற்றவாளியாகத் தான் இருக்கின்றான். ஆனால் சரியத் சட்டமும், நபி பெருமானாரின் போதனைகளும் மனித ஒழுக்கத்தின் நீரூட்டாகும். ஆகவே தான் தனி மனிதனும் சந்தர்ப்பம் கிடைத்தாலும் நிதானம் இழப்பதில்லை.


இஸ்லாமிய சரியத் தண்டனை என்று சிலவற்றினைப் பார்க்கலாம்:
1) ஜினா: மனவியினைத் தவிர கள்ள உடல் உறவு கொண்டவனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் அவன் வெக்கித் தலை குனியும் அளவிற்கு நூறு கசையடிகள் தரப்படும்.
ஹோமோசெக்ஸ் என்ற புணர்விற்கு மரண தண்டனை உண்டு. ஆனால் உலகில் பல நாடுகள் அதனை அங்கீகரிக்கின்றன என்பது வெட்ககேடு என்றால் மிகையாகாது.
2) மது குடித்தால் இருபது முதல் நாற்பது வரையிலான கசையடி.
3) சரிக்: திருடளுக்கு வலது கை வெட்டப் படும். நான் மக்க மாநகருக்கு 1999 முதல் தடவையாக சென்றபோது சில வலது கை வெட்டப் பட்ட கருப்பினத்தவரினைக் கண்டேன். விசாரித்ததில் அவர்கள் திருடியதால் கை வெட்டப் பட்டதாக சொன்னார்கள். அதுபோன்ற தண்டனை கொடுத்ததால் தான் இன்றும் ஹரம் சரிப்பில் தொழுகைக்கு பாங்கு சொன்னதும் தங்கள் வியாபாரம் செய்யும் நகைக் கடையினை கூட மூடாமல் விட்டு விட்டு தொழுகையினை முடித்து வரும்போது திருடு போகாமல் இருப்பதினைக் காணலாம். 
ஆனால் நமது நாட்டில் திருடர்கள் தனி சாம்ராஜ்யம் நடத்தும் சிறைச் சாலைகள் தான் அதிகம்.
4) காத் அல் டாரிக்: நெடுஞ்சாலைக் குற்றங்களுக்கு இடது கை, வலது கால் வெட்டப் படும்.

ஆகவே இஸ்லாமியர் மற்றவர்களுக்கு வழி காட்டும் நன்னடத்தை உள்ளவர்களாக திகழ வேண்டும். ஆனால் நம்மிடையே சிலர் மது குடிப்பிதினை பெருமையாகவும், ஜினா செய்வதினை உயர்ந்த அந்தஸ்து மனிதர் செய்யும் செயலாகவும், படித்த, பணக்கார இளைஞர்கள் மற்றவர்கள் போல் கண்ணியம் தவறும் உடை அணிவதும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எந்த விதத்திலும் பெருமை சேர்க்காது.
மாற்று மதத்தினவர் கூட இஸ்லாமிய மார்க்க நற்பண்பு, ஒழுக்கக் கட்டுப்பாடு பற்றி புகழும் பொது இஸ்லாமியர் முறை தவறி நடக்காது காக்கும் பொறுப்பு ஒவ்வொரு இஸ்லாமியருடைய கடமை என்பது சரிதானே தோழர்களே!