Wednesday 2 October, 2013

வாய்க்கு எட்டியது கைக்கு எட்டவில்லையே ஏன்?



(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ )
இந்திய திருநாட்டில் மைனாரிட்டி சமூகம் என்றால் முதலில் 72 விழுக்காடு கொண்ட முஸ்லிம்களும், இரண்டாவது இடத்தில் 12.71 விழுக்காடு கொண்ட  கிருத்துவர்களும், மூன்றாவது இடத்தில் 10.13 விழுக்காடு கொண்ட சீக்கியவர்களும் உள்ளனர்.
நீதி அரசர்கள் சச்சாரும், ரங்கநாத் மிஸ்ராவும் உயர் சாதியினராக இருந்தாலும் நெறி தவறாது முஸ்லிம்கள் வாழ்க்கைத் தரத்தின் கடைகோடியில் இருப்பதாக தங்களது உண்மை கண்டறியும் அறிக்கையில் வெளியிட்டனர்.
அந்த அறிக்கையினை கையிலெடுத்து சமூதாய இயக்கங்கள் இட ஒதுக்கீடுகளுக்குப் போராடின. பாராட்டக் கூடிய செயல் என்பதால் மெச்சலாம், போற்றலாம். ஆனால் அந்த இயக்கங்கள் அரசு மைனோரிட்டி மக்கள் சுய வேலை திட்டங்களுக்காக ஒதுக்கிய பணத்தினை தங்களுடைய மக்களுக்குப் போய் சேர்ந்து அவர்கள் வாழ்க்கைக்கு ஒளியேற்றி வைத்தார்களா என்றால் மிகவும் குறைவே என்ற புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன. அவற்றினை கீழே காணலாம்:
மைனாரிட்டி சமூகத்தினவர் சுய வேலை கடன் திட்டத்தில் பயன் பெற ரூ 1,83,072.45 கோடிகள் ஒதுக்கப் பட்டன. இந்திய நாட்டில் 72 விழுக்காடு கொண்ட முஸ்லிம் மைனாரிட்டி மக்கள் பெற்ற கடன் வெறும் ரூ.87,603 கோடிகள் தான். அவை வெறும் 50 விழுக்காடு தான்.
ஆனால் 12.71 விழுக்காடு கொண்ட கிருத்துவ மக்கள் அடைந்த பலன் 23.35 விழுக்கடுகளும், சீக்கிய மக்கள் 10.13 விழுக்காடு இருந்தாலும் ரூ. 47.577 கோடிகள் பெற்று இரண்டாவது இடத்தில் பலன் அடைந்துள்ளார்கள்.
ஆனால் முஸ்லிம்கள் 72 விழுக்காடு ஜனத்தொகை மைனாரிட்டியாக இருந்தாலும் மிகக் குறைவாகவே 50 விழுக்காடு கடன் உதவிப் பெற்றுள்ளனர். இதிலிருந்து அரசு பணம் மக்களுடையது. அதனைப் பெற்று நமது வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வு வரவில்லையே அது யாருடைய குறை?
பல்வேறு அரசியல், சமூகப் போராட்டங்களுக்காக மைனாரிட்டி மக்களைத் திரட்டிப் போராடும் சமூதாய இயக்கங்கள், தேர்தல் நேரத்தில் ஓரிரு இடத்திற்காக தன்மானத்தினை விட்டுக் கொடுக்கும் தலைவர்கள் ஏன் ஏழை மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை?
வாரந்தோறும் பள்ளி வாசல் முன்பும், வணிகத் தளங்களின் முன்பும், செல்வந்தர்கள் வீடு முன்பும் கையேந்தி யாசகம் செய்யும் ஏழை முஸ்லிம் மக்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்ற, சுயமாக சம்பாதிக்க, சொந்தக் காலில் நிற்க  ஏன் முஸ்லிம் சமூதாய இயக்கங்கள் முன் வரவில்லை?
மைனாரிட்டி சமூகத்தினருக்காக ஒதிக்கிய லக்ஷம் கோடி ரூபாயில் ஏன் தங்களது மக்கள் தொகைக்கு ஏற்ப பெற்று வழங்க வில்லை?  என்று சுய சிந்தனை செய்ய வேண்டாமா?
தங்கள் இயக்கங்கள் வளரக் கொடிப் பிடிக்க முஸ்லிம் மக்களை எதிர் பார்க்கும் இயக்கங்கள் ஏன் அந்த புண் பட்ட கைகளுக்கு மருந்து போட, குழந்தைகள் படிப்பினிக்கு கல்விக் கடன் பெற, குடியிருக்க வீடு லோன் கிடைக்க, விவசாயம், தொழில் தொடங்க கடன் பெற, திருமண, முதியோர், ஊனமுற்றோர், விதவையினர் வாழ்க்கையில் ஒளியேற்ற ஏன் இயக்கங்கள் அதன் தொண்டர்கள் செயல் படக்கூடாது என்று சுய சோதனை செய்ய வேண்டும் என்று உங்களுக்குக் கேட்கத் தோணவில்லையா என் சமூதாய உள்ளங்களே!

மூடு மந்திரங்களும், மாயாஜாலங்களும்!



2003 ஆம் ஆண்டு ஈராக்கினை அமெரிக்காவின் ஆதரவு படைகள் பிடித்து அதன் ஜனாதிபதியான சதாம் ஹுசைனை கைது செய்யும்போது என்ன சொல்லப் பட்டது என்று உங்களுக்கு பலருக்கு தெரிந்து இருக்கும். இருந்தாலும் மனிதன் எதனையும் விரைவில் மறக்கக் கூடியவனானதால் ஞாபகப் படுத்துவது நல்லது என நினைக்கின்றேன். சதாம் ஹுசைன் தனது சொந்த ஊரான டிக்ஹிரிடில் உள்ள பண்ணை வீட்டில் மறைந்து இருந்ததாகவும், அமெரிக்காவின் கூட்டுப் படைக்குப் பயந்து ஒரு பதுங்கு குழியில் எலிபோல ஒளிந்து இருந்ததாகவும், அவரை வெளியே இழுத்து, பரட்டைத் தலையுடன் காட்சி தந்த அவர் வாயினைத் துறந்து பல்லினை சோதனை போடுவது போலவும், அதன் பின்பு அவரை சதாம் ஹுசைன் தான் என உறுதி செய்து கழுவில் ஏற்றி நாடகம் அரங்கேற்றியது யாவரும் அறிந்ததே!
அதே போன்று தான், லிபியா நாட்டின் மாவீரன் கடாபியினை ஒரு கழிவு நீர்க் குழாயில் ஒளிந்திருப்பதுபோலவும், அவரைப் பிடித்து அவர் நாட்டவரே கொண்டது போலவும் கபட நாடகம் ஆடப் பட்டது.
ஒசாமா பின் லேடன் வேட்டையிலும் பாக்கிஸ்தானிலுள்ள அபேட்டபாட்டில் அதிரடி நடவடிக்கை எடுத்து சுட்டுக் கொல்லப் பட்டு கடலில் அடக்கம் செய்யப் செய்யப் பட்டதாகவும் கூறப்பட்டது.
உடனே நமது மேதாவி சென்னை அண்ணாசாலை இமாம் ஒருவர் ஜனாசாவே இல்லாமல் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு மாறுபட்டு தொழுகை நடத்தினார். அதில் அனுதாபத்துடன் பலர் கலந்து கொண்டதாகவும் கூறப் பட்டது.
பல மக்களுக்கு புதிராத, மற்றும் புரியாத கேள்வியினை என்னிடம் சிலர் கேட்டனர்.
அவைகள்:
1) ஒரு குற்றவாளி என்றால் ஏன் சதாம் ஹுசைன்போல விசாரணை நடத்தி பாகிஸ்தானில் தண்டனை தரவில்லை?
2) மிகக் கொடியவர் என்றால் புரட்சிப் படையால் கடாபி போல கொல்லப் பட்டிருக்க வேண்டும், அது நடக்க வில்லையே ?
3) சர்வதேச குற்றம் புரிந்து இருந்தால், சர்வதேச குற்றங்களில் ஈடுபட்டவர்களை விசாரிக்கும் நீதி மன்றத்தில் லைபீரியா ஜனாதிபதி மார்க் டைலர் போலோவோ, செர்பியாவின் கொடுங்கோலன் மில்சொவிக் போலோவோ, ருவாண்டா நாட்டில் இனப் படுகொலை நடத்தி தண்டனை பெற்ற தலைவர் போலோவோ சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்தி ஏன் தண்டனை வழங்க வில்லை?
அதற்கு விடையாக உயர்ந்த புளிட்ஸ் பரிசு வென்ற பத்திரிக்கையாளர் செமோர் ஹேர்ஸ் என்பவர் எழுதியிருக்கும் தேசிய பாதுகாப்பு என்ற புத்தகத்தில், 'பாகிஸ்த்தானின் அபேட்டபாட்டில் அமெரிக்காப் படையினரால் கொல்லப் பட்டதாக கூறுவது வெறும் கப்சா என்று கூறுகிறார். அந்தத் தகவலை நியூ யார்க் டைம்ஸ் என்ற பத்திரிக்கையும் வெளியிட்டுள்ளது. ஒரு வேலை அதுவே உண்மையாக இருந்தால் ஜனாசா இல்லாமலிலேயே  ஜனாஸா தொழுகை நடத்தியவர்கள் தான் பிற்காலாத்தில் பதில் சொல்லியாக வேண்டும். அவர்கள் யாருடைய தூண்டிதல் மேல் அவ்வாறு செய்தார்கள் என்று எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம். ஏனென்றால் சில மாதங்களுக்கு முன்பு அந்த இமாமை வெளிநாட்டு தூதர்கள் சந்தித்தார்கள் என்றும் கூறப் பட்டது.
ஆகவே தான் நான் தலைப்பில் சொன்ன, இந்த நவீன உலகத்தில் மூடு மந்திரங்களும், மாயாஜாலங்களும் சகஜம் என்றால் சரியா?