Tuesday 25 November, 2014

எத்தனை நாள் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!


இந்திய நாட்டில் நலிவடைந்த, பிற்படுத்தப் பட்ட  சமூதாயத்தின் மக்களை ஏமாற்றி தங்களைக் கடவுளின் மறு அவதாரம் என்று கூறிக்கொண்டு, மழைக் காலத்தில் முளைக்கும் காளான்கள் போல போலி பகவான்கள் உருவாகுவதிற்கு அரசுகளின் விஞ்ஞான முறையான அணுகுமுறை குறைவாக இருப்பதே காரணம் என்று சமீப கால   சம்பவங்கள் உணர்த்துகின்றன.
ஒரு நாட்டின் உயர் பதவி வகித்த ஜனாதியான அப்துல் கலாம், உச்சநீதி மன்ற நீதிபதி பகவதி போன்றோர் புட்டபர்த்தி சாமியார் ஆசிரமம் சென்று சாமியார் அரியணையில் அமர்ந்திருக்கும் போது முக்கிய பிரமுகர்கள் அவர்முன் தரையில் பய பக்தியுடன் அமர்ந்து இருப்பது போன்ற படங்களும், மத்திய- மாநில மந்திரிகள் தேர்தல் நேரத்தில் அவர்களிடம் சென்று ஆசி பெறுவதும் பத்திக்கைகள் படம்போட்டுக் காட்டுகின்றன., அந்த பகவான்கள் ஆசிரமங்களில் சில சட்டத்திற்கு புறம்பான சம்பவங்கள் நடக்கும்போது அப்படிப் பட்ட  முக்கியப் பிரமுகர்கள்  மக்களிடையே தவறான பேச்சுக்கு ஆளாக வேண்டியுள்ளது. சாதாரண பாமரனும் முக்கிய பிரமுகர்களே அப்படிப் பட்ட பகவான்களை  தரிசனம் செய்யும் போது  அவர்களிடம் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக எண்ணி அவனும் அந்த சாமியார்களுக்கு அடிமையாகி விடுகிறான். அந்த பகவான்களும் சாமானியர்களிடம் இருப்பதினை எல்லாம் கறந்து படோபடமாக வாழ்வதோடு சில சட்டத்திற்கு புறம்பான காரியங்களிலும் ஈடு  படுகிறார்கள்  என்பதினை சில சம்பவங்கள் மூலம் உங்கள் முன் வைக்கலாம் என எண்ணுகிறேன்.
1) முன்னாள் பிரதம மந்திரிகள் நரசிம்ம ராவ் மற்றும் அவரது மந்திரி சகாபாக்கள் மற்றும் முன்னால் பிரதமர் சந்திர சேகர் ஆகியோர்களுக்கு மிக நெருக்கமாக சந்திரசாமி  என்ற சாமியார் இருந்ததினை பலர் அறிந்து இருப்பீர்கள். 1994 ஆம் ஆண்டு சந்திராசாமி பிறந்த தின விழாவிற்கு நரசிம்ம ராவ் மற்றும் பெரும்பாலான மத்திய மந்திரிகள் அவருடைய ஆசிரமத்தில் ஆஜரானார்கள். அதன் பின்பு அவர் அரசு பவர் புரோக்கராகி ஆயித பேர ஊழலில் ‘அதான் கஸ்ரோகிக்கு’ உதவி செய்ததாகவும், லண்டன் தொழில் அதிபர் ‘பதக்’ இந்தியாவில் தொழில் சம்பந்தமாக சந்திராசாமியினை அணுகி ரூ 6/ கோடி கையூட்டு கொடுத்ததாகவும் அப்போது புகார் கொடுத்து, சந்திராசாமி ஜெயிலுக்குச் சென்றதும், அந்த வழக்கு   உச்ச்சமன்றத்திற்கும் சென்றது உங்கள் பலருக்குத் தெரிந்து இருக்கும்.
2) மகராஷ்டிரா மாநிலம் நாக்பூர் என்ற இடத்தில் ஆசிரம் நடத்தி கற்பழிப்பு, வன்கொடுமை மூலம் 170 பேர்கள் காணாமல் போனது குறித்தக் குற்றச் சாட்டுக்கு ஆளான ‘கிரிப்பால் மகாராஜ்’ என்ற பகவான் அந்த வழக்குகள் சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை என்றுக் கேள்விப்பட்டதும் தலைமறைவானவர் இன்றுவரை என்னானார் என்று தெரியவில்லை.
3) இலங்கை அகதி  'பிரேம்குமார்' என்ற பிரேமானந்தா திருச்சி-புதுக்கோட்டை எல்லை அருகில் உள்ள விராலிமலை ஓரம் ஆசிரம் அமைத்து, ஆதரவு தேடி வந்த சிறுமிகளையும், பெண்களையும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதகவும், அதனைப் பார்த்த ஒரு இளைஞரை கொலை செய்ததாகவும் குற்றம் சுமத்தப் பட்டு இரட்டை ஆயுள் தண்டனை அனுபவிக்கும்போது ஜெயிலில் இறந்தது அனைவரும் அறிந்ததே! அதோடு  மட்டுமல்லாது தமிழக  பதவியில் இருந்த ஆட்சியாளர்களும் அவரிடம் ஆசி வாங்கியது பத்திரிக்கைகள் படம் போட்டுக் காட்டின.
4) 1980-1984 ஆண்டுகளில் பஞ்சாபிற்கு தனி மாநிலம் வேண்டும் என்று கோஷமிட்டு, சீக்கியர் பொற்கோவில் வளாகத்தினையும் கோட்டையாக அமைத்து, காலிஸ்தான் என்ற படையினை அமைத்துப் இந்திய ராணுவத்தினையே எதிர்த்துப் போரிட்டு மடிந்த, 'பிந்தரன்வாலா' போன்றோரையும் சில சீக்கிய மக்கள் தியாகி என்று போற்றுகின்றனர். சீக்கிய மத குரு 'லோங்கோவால்' கூட ஆரம்பத்தில் 'பிந்தரன்வாலாவினை' ஒரு 'ஸ்கௌன்றல்' (போக்கிரி) என்றவர்  பிற்காலத்தில் அவரே 'பிந்தரன்வாலே ஒரு 'ஞானி' என்று அழைத்தார் என்றால் பாருங்களேன்.
5) பஞ்சாப்-ஹரியானா மாநிலங்களில் 'தேரா சச்சா' என்ற அமைப்பினை ஏற்படுத்தி ராமும், ரஹீமும் ஒன்றுதான் என்ற கோசத்தினை எழுப்பி மக்களைக் கவர்ந்து அவர்கள் தங்கள் கொள்கைக்காக வாளும், துப்பாக்கியும் ஏந்தி மற்ற சீக்கியர்களுடன் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சண்டையிட்டது நீங்கள் தொலைக்கட்சியில் பார்த்தும், பத்திரிக்கையில் படித்தும் இருப்பீர்கள். அதன் தலைவர் 'குர்மீத்' பத்திர்க்கையாளர் ராமச்சந்ராவினை கொலை செய்தது சம்பந்தமாக, 'தெகல்கா மற்றும் 'இந்தியா டி.வி.' சேகரித்த ரகசிய தகவல்கள் மூலம் வெளியிட்டது.
6) 6) 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பரபரப்பாக பேசப் பட்டவர் 'ராம்பால்' என்ற பகவான். இவர் இன்ஜினியரிங் டிப்ளமா பட்டதாரி. ஹரியானா மாநிலம் நீர்பாசான துறையில் பணியாற்றி முறைகேட்டால் பணி நீக்கம் செய்யப் பட்டவர். ஹிசார் என்ற இடத்தில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு அனுமதியில்லாத ஆசிரமம், 30 உயரம் கொண்ட கோட்டை போன்ற சுற்றுசுவர் எழுப்பி 'ராம்-ரஹீம்' என்ற கோசத்தின் மூலம் பாமரர்களை  ஏமாற்றி ஹரியானா அரசுக்கே ஒரு சவாலாக இருந்தது உங்களுக்குத் தெரியும். இவ்வளவிற்கும் அவர் மீது ஒரு கொலைவழக்கு நீதி மன்றத்தில் 2006 ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருப்பதும், உயர் நீதி மன்றம் அவரை ஆஜராகும்படி 48 தடவை உத்திரவிட்டும் அவர் ஆஜராகாததால் அவரை ஆஜர் படுத்தும் படி காவலர்களுக்கு கட்டளை இட்டும், அவரது தனிப்பட்ட பாதுகாவலர்கள் அதனை துப்பாக்கி, பெட்ரோல் எறிகுண்டுகள் மூலம் எதிர்கொண்டு, பின்பு ஆறுபேர்கள் இறப்பிற்குப் பின்பு அவரை கைது செய்ய முடிந்தது என்றால் என்ன தைரியம் என்று நீங்கள் கேட்கலாம். சமீபத்தில் அந்த மாநிலத்தில் நடந்த தேர்தலில் அரசியல் பிரபலங்கள் தங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற அந்த பகவானிடம் ஆசி பெற்றதனால் அவர்கள் காப்பற்றுவார்கள் என்ற எண்ணத்தில்  அந்த பகவானின் கமாண்டோக்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று சொல்லப் படுகிறது.
7) புது டெல்லி அருகில் ரிசர்வ் பாரஸ்ட் இடத்தில் ஆக்கிரமித்து ஆசிரம் அமைத்து பக்தர்களைக் கவர்ந்த 72 வயது 'ஆசாராம் பாப்பு' என்ற பகவான் தற்போது கற்பழிப்புக் குற்றச் சாட்டிற்கு ஆளாகி சிறையில் இருக்கிறார். அப்படி ஆக்கிரமித்த இடத்தினை இடிக்கும்படி, 'தேசிய பசுமை ஆணையம்' கட்டளையிட்டும் இன்றும் கூட இடிக்கவில்லை.
இவையெல்லாம்  எதைக் காட்டுகின்றது என்றால் நலிவடைந்த பிற்பட்ட மக்கள் ஏழ்மையில் வாடும்போது ஏதாவது ஒரு வழிமூலம் ஏழ்மைக்கு விடிவெள்ளி கிடைக்காதா என்ற ஏக்கம் ஒரு புறம் இருந்தாலும், அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய பிரமுகர்கள் அப்படிப் பட்ட பகவாங்களிடம் ஆசி பெற வரும்போது நாமும் அவர்களை ஏன் பின்பற்றக் கூடாது என்ற எண்ணம் தான் அவர்களிடம் மேலோங்கி உள்ளது என்றால் மிகையாகாது.
21.11.2014 தேதியிட்ட ஹிந்து நாளிதழில் ஒரு செய்தியினை வெளியிட்டுள்ளார்கள். அதில் 'சில மாதங்களுக்குமுன்பு  பிரதமர் நரேந்தர மோடி  அவர்கள் மும்பையில் நடந்த விஞ்ஞானிகள் கருத்தரங்கில்  பேசும்போது, 'இந்திய நாட்டில் உள்ள விநாயகர் என்ற கணேச பெருமான் தலை தும்பிக்கையுடன் கொண்ட யானை முகம் மனித உருவத்தில் உள்ளதால், அந்தக் காலத்தே மனித உடலில் யானை முகத்தினைப் பொருத்தும்   பிளாஸ்டிக் சர்ஜெரி விஞ்ஞானிகள் இருந்ததினால் தான் அதுபோன்ற சாதனை நிகழ்த்த முடிந்திருக்கின்றது' என்று சொன்னதினை சுட்டிக் காட்டி மத நம்பிக்கை வேறு, விஞ்ஞானம் வேறு, அப்படி இருக்கும்போது மத நம்பிக்கையினை விஞ்ஞானிகள் கருத்தரங்கில் பேசியது தவறான முன் உதாரணம் ஆகிவிடும் என்று ஹிந்துப் பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளது எதனை காட்டுகின்றது என்றால் பதவியில் இருப்பவர்களும், படித்தவர்களும் பாமர மக்களுக்குப் அறிவுப் பூர்வமாக பாது காப்பு கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஏழை எளிய பிற்படுத்தப் பட்ட மக்கள் மோசடி பகவான்களிடம் தஞ்சம் அடைவதினைத் தடுக்க முடியாதல்லவா?
மோசடி பகவான்கள் ஒரு மதத்திற்கு மட்டும் சொந்தமில்லை. எல்லா மதத்திலும், ஏன் சில சீர் திர்த்த மார்க்கங்களிலும்  இருக்கின்றார்கள். அவர்கள் தான் பில்லி, சூனியம், காற்று, கருப்பு, அதனை விரட்ட தாயத்து, பல நிறங்களில்  கயிறுகள்,விற்றும், பேய் விரட்டும் தந்திரங்கள் கையாண்டும், களிப்பு எடுக்க வேண்டும், ஆவி விரட்ட வேண்டியும் என்ற புருடா விட்டும், நரபலி கொடுக்கச் சொல்லியும் இளகிய மனங்களை மேலும்  பலவீனப் படுத்தி நாலு காசு சம்பாதித்து தங்களை சீமான்களாக மேம்படுத்தி, நம்பிய மக்களை மூடர்களாக்கும்  பகவான்கள் நம்மிடையே பலர் உள்ளனர். அவர்கள் முகத்திரையினைக் கிழிப்பது ஒவ்வொரு படித்த, பகுத்தறிவாளர் கடமையல்லவா?


Wednesday 12 November, 2014

காகிதப் பூ மணக்காது, கள்ளிப்பாலும் சுவைக்காது !


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
2014, நவம்பர் மாதம், கொச்சிக் கடக்கரையிலும், புது டெல்லியிலும் 'லவ் கிஸ்' என்ற அமைப்பு ஒன்று கூடி ஒருவருக்கொருவர் நேசத்தினைத்தினை பரிமாற ‘கிஸ்’ செய்வது என்று அறிவிப்பு வந்து, அதனால் எதிர்ப்பும், போலிஸ் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு சென்று விட்டது ஒரு செய்திக் குறிப்பு. அதுவும் ஒரு ஆணுக்கு இன்னொரு ஆணும் ஓரினை சேர்க்கையினை வெளிப்படுத்தும் அளவிற்கு உதட்டில் முத்தமிடும் காட்சிதான் உச்ச்சகாட்டம். ஏனென்றால் அறையில் நடக்க வேண்டிய செயல்கள் அந்தரத்திற்கு வந்து விட்ட அதிசயம் தான்.
சிறார்கள் உணவுப் பழக்க வழக்கங்களால் சமீப காலங்களில் இளம் வயதிலேயே பாலுணர்வு உச்சக் கட்டத்தினை எட்டும் நிலைக்குத் தள்ளப் படுகின்றனர். அதன் வடிகாலாய்’ லவ்’ என்ற ஒரு ஆயிதத்தினை கையில் எடுக்கின்றனர்.  பாலுணர்வு ஆராச்சியாளர் டாக்டர் நாராயண ரெட்டி கூறும்போது, 'பாலுணர்வு தவறல்ல, ஆனால் அவற்றினை அறிவுடன் கட்டுப் படுத்துவது புத்திசாலித் தனம்' என்று சொல்கிறார். சமீபகால சினிமாவும்,டிவியும் பாலுணர்வைத் தூண்டக் கூடிய பாடல்களையும், தொடர்களையும், படங்களையும் வெளியிடுவதால், அதனை பெரியோரும், சிறார்கள் ஒருங்கே அமர்ந்து வீடுகளில், தியேட்டர்  போன்றவற்றில் அமர்ந்து பார்த்து ரசிப்பதால் பாலுனர்வினை மேலும் தூண்டுவதிற்கு வழி விடுகிறோம். பீச், தியேட்டர், பூங்கா, போன்ற பொது இடங்களில் சிறார்கள் தங்கள் பள்ளி, கல்லூரி சீருடையினைக் கூட மாற்றாமல் மெய்மறந்து அமர்ந்து லவ்வினைப் பரிமாறிக் கொள்வதினை நீங்களும் கண்டு மனம் வெதும்பி இருப்பீர்கள். பார்வை, சிரிப்பு, கடித பரிமாற்றம்,பரிசு அன்பளிப்பு என்றுத் தொடங்கி உரசுதல், அணைத்தல், முத்தமிடல், பின்பு பெண் சிறார்கள் தங்களையே உடல் ரீதியாக 'தியாகம்' செய்யுதல் என்று எல்லை மீறிப் போகும். அதால் பாதிக்கப் படுவது பெற்றோரும், உடன் பிறந்தவர்களும், அவர்களுடைய மான, மரியாதையும் தான். அதில் பாதிக்கப் பட்டவர்கள், 'கௌ ரவக் கொலை'என்ற ஆயுதத்தினைக் கடைசியாக கையாள்கின்றனர். அவையெல்லாம், 'கண் கெட்டதும் சூரிய நமஸ்காரம்' என்பது போன்ற செயலாகும்.
சிறார்கள் பாலுனர்விற்கு அடிமையாவதிற்கு என்ன முக்கியமான காரணம்:
1)    குடும்பத்தில் பெற்றோர் நல்ல சுமுகமான இணக்கமின்மை சிறார்களை பெற்றோர்களிடமிருந்து விலகி நிற்க வழிவிடுகிறது.பெற்றோர்கள் சிறார்களில் பராமரிப்பிளிருந்தும், வழி நடத்துவதிலிருந்தும் கவனம் செலுத்தாதது சிறார்கள் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இல்லாமல் வளர்கிறார்கள். சில வீடுகளில் பெற்றோர்களின் ‘கூடா ஒழுக்கம்’ குழந்தைகளை வழிக்கேட்டுக்கு இழுத்துச் செல்கிறது.
வளரும் சிறார்களுக்கு வெளியிடங்களில் தங்களுடைய பாலுனர்விற்கு அடிமையாகி விட்டு வாழ்க்கையினை பாழ்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று அறிவுரை சொல்லும் பெற்றோர், உற்றார், உறவினர் மிகக் குறைவே. சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் வரும் செயல்முறைகள் அலங்காரமானது மட்டுமல்ல மாறாக அபாயகரமான பொய்யானது, பாதுகாப்பற்றது  என்று சிறார்களுக்குச் சொல்ல வேண்டும். அதன் உதாரணமாக 10.11.2014 அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். சென்னை கொடுங்கையூரில் வினோத் என்ற 28 வயது வாலிபர் ஒரு மோட்டார் சைக்கிள்  மெக்கானிக். அவர் வித்யா(27) என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து நான்குமாத கர்ப்பிணியாக்கி உள்ளார். அதன் பின்பு காதல் மனைவி மீது உள்ள பாசம் விலகி, அருகில் உள்ள பள்ளி சிறுமிகள் பக்கம் பார்வையினை செலுத்தியிருக்கின்றார். அவர் வலையில் பிளஸ் 1 படிக்கும் மாணவி நக்மா, 'காதல்' படத்தில் வரும் கதாயகி போன்று  விழுந்திருக்கின்றார். இருவரும் பொழுது போக்கு இடங்களில்  சுற்றியிருக்கின்றார்கள். இதனை அறிந்த நக்மாவின் பெற்றோர் நக்மாவினை சொந்த ஊரான டெராடூனுக்கு   அழைத்துச் சென்று இருக்கின்றார்கள். இதனை அறிந்த வினோத்தும்  டெராடூனுக்குச் சென்று பெற்றோருக்குத் தெரியாமல் சென்னையில் திருமணம் செய்ய ஜி.டி. ரயில் மூலம் அழைத்து வந்துள்ளார். வினோத் டெராடூனுக்குச் சென்றதினை அறிந்து மனைவி வித்யா சென்னை சென்ரல் ரயில் நிலயத்தில் உறவினர்களுடன் காத்து அந்த இருவரும் சென்னை வந்து சேர்ந்ததும் கையும் களவுமாகப் பிடித்து போலீசில் ஒப்படைத்து உள்ளார். போலீசாரும் நக்மாவின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார்கள் என்ற செய்தி எவ்வளவு சிறார்கள் பாலுணர்வுக்குப் பழியாகி விடுகிறார்கள் என்று தெரிந்திருக்கும்.
2) சுய மரியாதை, கவுரவம் இல்லாமை:
சுய மரியாதை மற்றும் கவுரவம் இல்லாத சிறார்கள், பெண்கள் மனோ இச்சைகளுக்கு காட்டுப் பட வேண்டியதுள்ளது. குழந்தைகள் வளரும் போதே வேற்று ஆடவர் கொடுக்கும் இனிப்புப் பண்டங்கள், அன்பளிப்பு போன்றவைகளை இலவசமாகப் பெறக் கூடாது என்று பெற்றோர் அறிவுரை வழங்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் சிறார்கள் பெரியவர்களாக வளரும்போது வேற்று ஆடவர் கொடுக்கும் செல்போன், பாக்கெட் மணி, பிறந்த நாள் பரிசுப் பொருள்கள் வாங்க மாட்டர்கள். அவ்வாறு சுய கவுரவுத்துடன் வளர்க்கப் பட்ட பெண் சிறார்கள் ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருக்கும்போது பாலுணர்வுக்கு உந்தப் பட்டு தங்களது கற்பினை இழக்க மாட்டார்கள் என்றும், சுய கவுரவமில்லாது இருக்கும் பெண் சிறார்கள் தங்கள் கற்பினையும் இழந்து பால் வினை நோய்களையும் பெற்றுக் கொள்கிறார்கள் என்று டாக்டர் நாராயண ரெட்டி சொல்கிறார். அது மட்டுமா, காதலன் பெண் சிறார்களின் கற்பினை சூறையாடி கரு உண்டாக்கி விட்டு அதனைக் கலைக்க யோசனைகளான கடுகுச்சாறு குடித்தல், கள்ளிப் பாலை பெண் உறுப்பில் செலுத்துதல், ஹேர்பின் மற்றும் குத்தூசி கொண்டு கற்பபையினை குத்துடல், போலி டாக்டர் உதவியுடன் கொடூரமான முறையில் கருக்கலைப்பது போன்ற கொடூரமான யோசனைகளுக்கும் அவர்களை வற்புறுத்துகிறான். அந்த விசப் பரிட்சையில் பெண் சிறார்கள் உயிர் இழக்கவும் நேருடுகிறது  உங்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். அது மட்டுமல்லாமல் ஒரு பூவினில் தேனெடுத்து சுவை கண்ட காதலன்  தன் காதலியினைப் பார்த்து, 'நீ திருமணத்திற்கு முன்பு என்னுடன்  உறவு கொண்டது போல வேறு ஆண்களுடன் உறவு கொண்டிருப்பாய்' என்று சந்தேகமும் காதலியினை விட்டு ஒதுங்கும் பேர்வழிகளைப் கண்டுள்ளோம்.
3) நேசமும், பாசமும்:
காதலர்கள் காதலியின் உடல் உறவிற்காக நேசத்துடன் பழகுவர். ஆனால் காதலிகள் பாசத்திற்காக உடல் உறவினை ஒப்புக் கொள்கிறார்கள். என்று 1999 ஆம் ஆண்டு அகமதாபாத் நகரில் இயங்கும், 'பவுண்டேசன் ஒப் ரிசர்ச் அண்ட் ஹெல்த் சிஸ்டம்' என்ற நிறுவனத்தில் பணிபுரியும், நிர்மலா மூர்த்தி மற்றும் அகிலா வாசன் ஆகியோர் கூறுகின்றனர். அவர்கள், 'பெண்கள் ஆண்களின் மேல் உள்ள பாசத்தினை  'பியார்,பிரேம்' என்று நவுன் ஆன பெயர் சொல்லைப் பயன் படுத்துகின்றனர். ஆனால் ஆண்கள் அதனை வினைச் சொல்லாக மாற்றி தங்களின் நேசம் வேண்டுமென்றால் அதற்கு பரிகாரமாக காதலியின் கற்பைத் தரவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். புது டெல்லியின் ஒரு ஆய்வு அறிக்கையில், 'ஆண்களின் தோற்றத்தில் மயங்கும் பெண்கள் 57 சதவீதம்' என்று கூறுகிறது. சென்னையில் சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கும் இளைஞர்கள் ஜீன்ஸ் பேன்ட், காதில் வலயம், கழுத்தில் கவரிங் செயின், கையில் வெள்ளி பிரேஸ்லெட், போன்று அணிந்து பெண்கள் பள்ளி, கல்லூரி, பஸ் ஸ்டாண்ட், ஷாப்பிங் மால்ஸ் போன்ற வற்றில் வளம் வந்து தங்கள் வலையில் சிக்கும் கன்னிகள் சுற்றி  வட்டம் போடுவதினை நீங்கள் காணலாம். அதுபோன்ற வல்லூருகளிடமிருந்து பெண் சிறார்களை கண்மணியினை காக்கும் இமைகளைப் போல் பாதுகாப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.
4) ஆணாதிக்கம்:
காதலில் ஆண்களின் ஆதிக்கமே மேலோங்கி உள்ளது. ஒரு ஆய்வுக் கட்டுரையில், 'பெண்கள் சுகமில்லாது இருந்தாலும் ஆண் காதலர்கள் உடலுறவு கொள்ள வற்புறுத்தலுக்குப் பணிவதாக' சொல்கிறது. அதே அறிக்கையில் ஆண்கள் காதலிகளிடம் உடலுறவு கொள்ளும்போது தற்காப்பிற்கான ஆணுறைகளை 75 சதவீதம் பேர்கள் தவிர்ப்பதாக கூறுகிறது. இதன் மூலம் கள்ளத்தனமாக காதலர்களை கர்ப்பிணியாக்கி விட்டு தப்ப நினைக்கும் கயவர்களிடமிருந்து பெண் குழந்தைகளை காப்பது பெற்றோர்களின் கடமையல்லவா?
5) உற்றார், உறவினர், ஆலோசகர் கடமை:
மும்பையினைச் சார்ந்த ஆராய்ச்சியாளர் ராக்கி ஜெயின் கூறும் பொது, 'பெண் சிறார்களுக்கு உடலுறவிற்கும், கற்பமாவதிற்கும் உள்ள வித்தியாசம் தெரியாததால் 98 சதவீத காதலர்கள் பாதுகாப்பற்ற உடலுறவிற்கு தள்ளப் படுகிறார்கள்'.
ஆகவே பெற்றோர், உற்றார், உறவினர் மற்றும் ஆலோசகர்கள் பெண் சிறார்களுக்கு பருவமடைடல், அதனால் உடலில் மற்றும் மன அளவில் ஏற்படும் மாற்றங்கள், கற்பு பிறழா ஒழுக்கம், பாலுணர்வு அதனை பாதுகாக்கும் விதம் ஆகியவற்றினை தன் நண்பர்களுக்கு சொல்லும் புத்திமதி போல் எடுத்துச் சொல்லி, குழந்தைகள் தேவைகள் குறிப்பறிந்து ஆடம்பரமில்லா செலவினங்களுக்கு உதவி செய்து அவர்களை காதல்  என்ற மாய வலையில் விழாமல், வாழ்க்கையில் வெற்றிகாண ஒவ்வொருக்கும் ஒரு குறிக்கோள் வேண்டும் எனச் சொல்லி நல்வழியில்,  வாய்க்காலில் ஓடும் தண்ணீர் வீணாகாமல் நெல்லுக்குப் பாய எப்படி வழிவகை செய்கிறோமோ அதனைப் போன்று சமூதாய மக்களும்செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகுமல்லவா? 


Monday 3 November, 2014

பரபரப்பு மத மாற்ற பேச்சும், பத்திரிக்கை செய்திகளும்!

பரபரப்பு மத மாற்ற  பேச்சும், பத்திரிக்கை செய்திகளும்!
(டாக்டர் .பீ .முகமது அலி, .பீ.எஸ்()  
பத்திரிக்கைகள் இஸ்லாமிய மத மாற்றம் பற்றி சமீப காலமாக  தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது அனைவரும் அறிந்ததே! அதற்குக் காரணம் சினிமா பிரபலங்கள் மற்றும் பத்திரிக்கை பிரபலங்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதுதான். சமூக, சமூதாயத்தில் புரையோடி இருக்கும் மூடப் பழக்க வழக்கங்களை நீக்கி, ஏக இறைக் கொள்கையினை பரப்பி, மனிதனைப் புனிதனாக்கக் கூடிய மார்க்கம் தான் இஸ்லாம் என்று அறியாத பலர் தான் இன்னும் இஸ்லாமிய மதமாற்றம் என்று சொல்கிறார்கள்.
இஸ்லாம் இந்தியாவில் இரண்டாவது பெரிய மார்க்கம். 2011 ஆய்வுப்படி 18 கோடி இஸ்லாமியர் கொண்ட மார்க்கமாக திகழ்கிறது. இஸ்லாமியர்  அஸ்ஸாம், மேற்கு வங்கம், .பி , பிகார்  மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் அதிகமாக வாழ்கின்றனர். ஏழாம் நூற்றாண்டில் மலபார் கடற்கரை ஓரம் வர்த்தகத்திற்கு வந்த இஸ்லாமியர் மூலமாகவும், 11 மற்றும் 12 ஆம்  நூற்றாண்டில் வந்த துருக்கிய வம்ச படையெடுப்புகளால் இஸ்லாமிய மார்க்கம் வட இந்தியாவிற்கு தெரிய வந்தது. படைஎடுப்பிற்காக வந்தாலும், இந்திய நாட்டின் பண்பாடு, பொருளாதாரம், கல்வி, அரசியலில் பெரும் பங்காற்றினார் என்று பல்வேறு இந்திய மற்றும் பன்னாட்டு வரலாற்று ஆசிரியர்கள் விவரமாக நூல்களில் எடுத்து இயம்பி உள்ளனர்.
இஸ்லாமிய மார்க்க மாற்றம் ஏழாம் நூற்றாண்டில் மலபார் மன்னர் சேரமான் பெருமாள் மூலம் மனமாற்றம் ஏற்பட்டு இஸ்லாமியத்தினை தழுவினர். அதன் பின்பு பல்வேறு காரணங்களால் இஸ்லாமிய மார்க்கத்தினை தழுவியதாகக் கூறப்படுகிறது வரலாறு. அவைகளில் சில பின் வருமாறு:

1) துருக்கிய வம்சா வழியினர் இந்திய மண்ணில் ஆட்சி செய்தபோது இஸ்லாமியர் இல்லாதவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதிற்காக வரி விதிக்கப் பட்டது. அந்த வரியிலிருந்து தப்பிப்பதிற்காக சிலர் இஸ்லாமிய மார்க்கத்தினை தழுவி உள்ளனர்.
2) இஸ்லாமிய ஏகத்துவ கொள்கைகளை சூபி மற்றும் சுன்னி மகான்கள் மூலம் அறிந்து பலர் இஸ்லாமிய மார்க்கத்திற்கு வந்துள்ளனர்.
3) இந்திய நாட்டு ஜாதி துவேசத்தில் மனம் நொந்த தலித் மக்கள் புத்தமதத்திலிருந்து அம்பேத்கார் மறைவிற்குப் பின்பு இஸ்லாத்திற்கு வந்துள்ளனர்.
இந்திய அரசியல் வாதிகள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் சிலராலும் இஸ்லாமிய மார்க்கம் வாளால் பரப்பப்பட்டுள்ளது என்றக் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் இந்திய நாட்டினை 12ஆம் நூற்றாண்டிலிருந்து முதலாம் இந்திய விடுதலைப் போர் நடந்த 1857 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த இஸ்லாமிய மன்னர்களால் இந்திய மக்களில் பெரும்பாலோரை முஸ்லிமாக கட்டாயப்படுத்தி மாற்றவில்லையே அது எப்படி! இன்னும் இந்திய நாட்டு மக்கள் தொகையில் 15 சதவீதம் தானே இஸ்லாமியராக உள்ளனர்! அது மட்டுமா? இஸ்லாமியர் படையெடுக்காத பங்களா தேஷ்இலங்கை, பர்மா, தெற்கு தாய்லாந்து , மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இஸ்லாமியர் அதிகமாக வாழ்வதிற்கு  மன மாற்றம் தானே காரணம்.
உலகில் சமீபகால  இஸ்லாமிய மார்க்கத்தினைத் தழுவிய பிரபலங்கள் என்றால் அமெரிக்காவின் மால்கம் எக்ஸ்குத்துச்சண்டை சாம்பியன்கள் முகமது அலி, மைக் டைசன், எழுத்தாளர் ரிட்லே, விளையாட்டு வீரர்கள் ஜிடேன், யாயாடோரே, பிராங் போன்றவர்கள் முக்கிய மாணவர்கள்.
உலகில் பெரும்பாலான நாடுகளில் இஸ்லாமியர் ஆட்சி நடக்கவில்லை. இருந்தாலும் 10 வருடத்தில் இஸ்லாமியர் 137 சதவீதம் அதிகரித்துள்ளனர். அதிக நாடுகளில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள கிருத்துவர்கள் 46சதவீதம் தான் அதிகரித்துள்ளனர். இதனைப் பார்க்கும்போது இஸ்லாம் வாளால் பரவவில்லை என்ற உண்மைப் புலப்படுகின்றது அல்லவாஒரு வருடத்தில் அமெரிக்காவில் ஒரு லட்சம், ஜெர்மனியில் 4000, இங்கிலாந்தில் 25,000 பேர்கள் இஸ்லாத்திற்கு மாறி உள்ளனர்.


தமிழகத்தினைப் பொருத்தமட்டும் இஸ்லாமிய மார்க்கத்தில் மாற்றம் என்ற பேச்சு 1981ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் மீனாக்ஷிபுரம்  கிராமத்தில் ஜாதி துவேசத்தில் இணைந்தாதால் இந்திய அரசியல் வாதிகளையும் பத்திக்கையாளர்களையும் பரபரப்பாக்கியது. அதனையடுத்து இராமநாதபுரம் மாவட்டத்தில் கூரியூர் கிராமத்தில் மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்ததால்  அது போன்ற பரபப்பு ஏற்பட்டது. அப்போது சிலர் பக்கத்து ஊரில் உள்ள முஸ்லிம் செல்வந்தர்கள் அந்த மக்களுக்கு வளைகுடா நாடுகளில் வேலை தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறியதினால் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தினைத் தழுவி உள்ளனர் என்று கூப்பாடு இட்டனர்.
1979 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இஸ்லாத்தினை ஏற்று பரபரப்பக்கினார். ஏனென்றால் அவர் ஏற்கனவே பிரகாஷ் கௌர் என்ற பெண்ணை திருமணம் செய்தவர். ஹிந்து திருமண சட்டப் படி முதல் மனைவி இருக்கும்போது இரண்டாம் மனைவி திருமணம் செய்ய வழியில்லை. தர்மேந்திரா நடிகை ஹேமமாலினியை திருமணம் செய்ய முற்படும்போது ஹிந்து திருமணச் சட்டம் தடங்கலாக இருந்தது. ஆகவே முஸ்லிம் மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு ஹேமமாலினியை திருமணம் செய்தார். இஸ்லாமிய மார்க்கம்  வசதி, மற்றும் உடல் வாகு திடமாக இருந்தால்  நான்கு மாணவி வரை திருமணம் என்ற விதி விலக்கு இருந்ததால் அவருக்கு வசதியாகப் போய் விட்டது.
தமிழகத்தில் ஆஸ்க்கர் விருது பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உண்மைப் பெயர் ஏ.ஆர். திலிப் குமார். அவர் இஸ்லாமிய மார்க்கப் பெயரான ரஹ்மான் என்பதினை தன் பெயருக்குச் சூட்டிக் கொண்டார். அதன் பின்பு இஸ்லாமிய குடும்பத்தில் திருமணமும் செய்து கொண்டார். இதுபோன்று தமிழகத்தில் 2006 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை இஸ்லாமிய மார்க்கத்தில் இணைத்துக் கொண்டவர்கள் எண்ணிக்கை 2500 என்று புள்ளி விபரம் கூறுகிறது.
தமிழகத்தில் இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்த  மூன்று பிரபலங்கள் பற்றி கேள்விப்பட்டதினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். முன்னாள் திராவிட இயக்க பத்திரிக்கையாளர் இஸ்லாமிய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பல்வேறு நாடுகளுக்குச் சென்று புகழோடு வந்தார். ஒரு தடவை சென்னை பர்மா பஜார் சங்கக் கட்டிடத்திற்கு வருகை தந்து அங்குள்ள நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருந்தாராம். அதன் பின்பு சங்க நிர்வாகிகளிடம் தான் கஷ்டப் படுவதாகவும் தனக்கு ரூ.10 லக்ஷம் வேண்டும் என்று கேட்டாராம். அதற்கு சங்க செயலாளர் சாகுல் ஹமீது , ' ஆமா,இஸ்லாத்தில் நீங்க மட்டும் தானா மாறினீர்கள் அல்லது உங்க குடும்பமும் மாறியதா என்று கேட்டாராம்'. அதற்கு அந்த பத்திரிக்கையாளர், 'நான் மட்டும்தான் மாறி இருக்கின்றேன், குடும்பத்தினர் இஸ்லாமியத்திற்கு மாறுவது அவர்கள் விருப்பம் என்றாராம்'. உடனே சாகுல் ஹமீது ஒரு முஸ்லிம் முஸ்லிம் அல்லாத பெண்ணுடன் வாழ்வது எங்கள் மார்க்கத்தில் அனுமதியில்லை, ஆகவே உங்கள் மனைவியும் இஸ்லாத்தில் மாறிய பின்பு வாருங்கள் உதவி செய்கிறோம்' என்றாராம். அதன் பின்பு அவர் வரவே இல்லையாம்.
 நான் 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்றிருந்தேன். அப்போது மெல்போர்ன் நகருக்குச் சென்று விக்டோரியா பள்ளியில் ஜும்மா தொழுகைக்காக சென்றிருந்தேன். அங்கே தமிழ் முஸ்லிம் சங்க நிர்வாகி முஜிபுர் ரஹ்மானை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தில் இணைந்த பேராசிரியருக்கு வரவேற்ப்புக் கொடுத்து பட்ட சிரமத்தினை சொன்னார். அந்தப் பேராசிரியருக்கு அழைப்பு விடுக்கும்போது அவர் விதித்த நிபந்தனை அவருடன் மேலும் இருவர் வரவேண்டும் என்பது. அதற்கு ஒத்துக் கொண்டு அதற்காக செலவு செய்து வர வழைத்தார்களாம். அங்குள்ள பள்ளியில் அன்று அவர் பேச அழைத்தார்களாம். மேலை நாடுகளில் தமிழ் முஸ்லிம்கள்  வளைகுடா நாடுகளைத் தவிர குறைவாகவே உள்ளனர். அவர் பேசச் சென்ற இடத்தில் சுமார் 30 பேர்கள் இருந்தார்களாம். அப்போது அந்தப் பிரமுகர் வானத்திற்கும் பூமிக்கும்க் குதித்து, 'தான் 1000 பேர்கள் இல்லாத கூட்டத்திலே பேசியதே இல்லை ஆகவே நான் தங்கி உள்ள ஹோட்டலுக்குப் போகிறேன் என்று அடம் பிடித்தாராம்'. அதன் பின்பு சமாதானம் செய்து 50 பேர்கள் கூடிய பின்பு ஒரு வழியாக பேசி விட்டுச் சென்றாராம். அந்த நிர்வாகிகளுக்கே இவரை ஏன் கூப்பிட்டோம் என்றாகி விட்டதாம்.
சில நாட்களாக தமிழகத்தில் இசைக் குடும்பத்தில் உதித்து, இரு திருமண வாழ்வினைத் துறந்து இருந்த  இசை அமைப்பாளர் ஒருவர் மூன்றாவதாக ஒரு இஸ்லாமிய பெண்ணைத் திருமணம் செய்யப் போவதாகவும் அதற்கு அந்தப்  பெண்ணின் பெரிய தாயார் துவாச் செய்யுங்கள் என்ற  ஆடியோவும், அதனைக் கேலி செய்து மற்ற ஆடியோக்களும் வாட்சப்பில் வலம் வந்த வண்ணம் உள்ளன அனைவரும் அறிவர்.
இஸ்லாமியர் மத்தியில் எழுப்பப்படும் சிலக் கேள்விகளை உங்கள் முன் வைத்து அதற்கு விடை காணலாம் என்ற நோக்கத்தில் இந்தக் கட்டுரை வரையப்பட்டுள்ளது:
1) ஒருவர் இஸ்லாமிய மார்க்கத்தில் சேர்ந்தார் என்றால் அவர் முழுமையாக தன்னை இணைத்துக் கொண்டு அதற்கான அரசு  ஆவணங்களை பூர்த்தி செய்து நிறைவேற்றி உள்ளாரா என்று கவனிக்கத் தவறி விடுகிறோம்.
அதனால் அவர் பெயர் அளவிற்கு முஸ்லிமாக இருந்து வருகிறார். ஒரு பிரமுகர் இறந்தபோது அவர் தன் சட்டக் கடமைகளை சரிவரச் செய்யாததால் அவரை எரிப்பதா அல்லது புதைப்பதா என்ற வீணான  சர்ச்சை ஏற்பட்டது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே!.
2) சிலர் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்வதிற்காகவே இணைவதாக தர்மேந்திரா போன்றவர் திருமணத்திலிருந்து தெரிகிறது. அதுவும் புகழ் பெற்ற வீடுகளில் திருமணம் செய்து பெயரும் புகழும் அடைய விரும்புவதாகவும் பேசப் படுகிறது. ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து செய்தவர்கள் மறுமணம்  செய்பவர்கள் ஒரு விதவைக்கு அல்லது விவாகரத்தான ஒரு பெண்ணுக்கு  வாழ்வு கொடுத்தால் அல்லது தன்னைப் போன்று இஸ்லாத்தில் இணைந்த ஒரு வேற்று மதப் பெண்ணையோ மணமுடித்தால் நலமாக இருக்கும் என்ற ஆதங்கம் இஸ்லாமியரிடையே இல்லாமல்லில்லை.
3) சிலர் இஸ்லாத்தில் இணைந்தால் வலைகுடா நாடுகளில் வசூல் செய்யலாம், வேலை செய்யலாம் என்ற எண்ணமும் உள்ளது.
4) சிலர் இஸ்லாத்தில் இணைந்து மக்கா, மதினா சென்று அங்கு அச்வத்க் கல்லினைத் தொடும் சடங்குபோல சில சடங்குகளை இஸ்லாமியர் அல்லாதவர் கேள்வி எழுப்ப வேண்டிய செய்திகளை சொல்லி அதனைப் பூதாகரமாக்க முயல்வதாகவும் கூறப்படுகிறது.

இஸ்லாமிய மார்க்கத்தினை முழு மனதுடன் ஏற்று, அதற்கானக சட்ட சம்பந்தமான காரியங்களை நிறைவேற்றி, புகழ் வாய்ந்த மதராசாக்களில் மாணவராக இருந்து  மார்க்கக் கல்வியினைக் கற்று  அதன் பின்பு முழு அளவு இஸ்லாமியர் ஆனால் போற்றப்பட வேண்டியக் காரியமாகும். அதனை விட்டு விட்டு ஏற்கனவே இரண்டு திருமண வாழ்வு நடத்தி, இரண்டு பெண்களையும் விவாக ரத்து செய்து, பின்பு  மார்க்கத்தினைத்  தழுவி சில நாட்கள் சென்று திருமணத் தகவல் தெரிவிப்பதால், ஒரு இஸ்லாமியப் பெண்ணை  திருமணம் செய்வதிற்காக மார்க்கத்தில் இணைந்ததாக வீணான பேச்சுக்கு ஆளாக நேரிடுகிறதல்லவா?