Saturday 13 June, 2015

மாப்பிள்ளை டே, புது மாப்பிள்ளை டே, யோகா டே!


12.6.2015 அன்று யோகா டே என்ற யோகா தினம் கொண்டாடப் பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என உத்திரவிடப் பட்டது அனைவரும் பத்திக்கை வாயிலாக அறிந்திருப்பீர். அதனை முஸ்லிம் அமைப்பினரும், கிருத்துவ அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததும், நீங்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டாம் என்றும், அல்லாஹு நாமத்தினை சொல்லலாம் என்றும் கூறப்பட்டது.
கிரிராஜ் என்ற சர்ச்சையான பாராளுமன்ற உறுப்பினர் யோகா வேண்டாம் என்பவர்கள் வேறு நாட்டுக்குச் செல்லுங்கள் என்றும், இல்லை என்றால்  குதித்து மூழ்குங்கள் என்றும் சொல்லி சர்ச்சை எழுப்பி உள்ளார். தமிழ் சினிமா படத்தில் புது மாப்பிள்ளையினைப் பார்த்து 'மாப்பிள்ளை டே,புது மாப்பிள்ளை டே' என்று பாடும் பாடலை கேட்டிருக்கின்றோம். அதே போன்று தான் இந்த யோகாவினையும் கூவிக் கூவி மைனாரிட்டி சமூகத்தினரிடம் விற்கப் பார்க்கின்றார்கள்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகத் அவர்களோ, 'இந்தியா ஒரே ஹிந்து நாடு என்பது பற்றி யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை, ஏன் பாக்கிஸ்தானும், பங்களாதேசும் ஹிந்து நாடு தான்' என்று பேசி அதனால் சர்ச்சையினை கிளப்பியிருப்பது  13.6.2015 தினமணி பத்திரிக்கையில் வந்துள்ளது. இவை எல்லாம்  எதனைக் காட்டுகின்றது என்றால் எப்படியாவது முஸ்லிம்களை தங்கள் கட்டுப் பாடுகள் கொண்டு வந்து விடவேண்டும் என்று 2014 ஆண்டிலிருந்து கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றன என்று முஸ்லிம்கள் எண்ணுவது சரி என்று நினைக்கவில்லையா ?
யோகா என்ற சொல் 'யுஜ்' என்ற சான்ஸ்கிரிட் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. அதன் பொருள் தனி மனிதனின் உள்ளத்தினை(ஜிகாத்மா) இறைவனிடம்(பரமாத்மா) ஒப்படைப்பது ஆகும். இந்தியாவின் குடிமக்களை மதம், மனம், உடல், ரீதியாக இணைக்கும் பல்வேறு செயல்கள் 2014 புதிய ஆட்சிக்கு வந்த பிறகு நடை பெற்று வருகிறது. அதில் ஒன்றே யோகா ஸ்லோகனாகும். இந்த யோகா முறை ஹிந்து, புத்த, ஜைன மத வழிபாடுகளில் ஹதா யோகா மற்றும் ராஜ் யோகா போன்ற செயல் முறைகளில் பின்பற்றப் பட்டு வருகிறது. ஹிந்து மத 'உபநிசாத்' மற்றும் புத்த 'பாலி கேனான்' மூன்றாம் நூற்றாண்டு பி.சி யிலிருந்து செயல் முறையில் இருந்தாலும் மேற்கித்திய நாடுகளுக்கு இருபதாம் நூற்றாண்டில் சுவாமி விவேகானந்தா அமெரிக்கா சென்ற பின்பு தான் தெரிய வந்தது. தற்போது பரபரப்பாக பேசப் பட்டு வரும் யோகா உடற் பயிர்ச்சி ஒரு காலத்தில்  அதனையே தற்போது பழைய தியானம், இறையருள் போன்றவற்றிக்குத்தான் முக்கியம் கொடுக்கப் பட்டது. அவைகள் அனைத்தும் ஹிந்து மத 'சம்கிய' தத்துவத்தினை  ஒட்டியதேயாகும். பழைய வேதங்களிருந்து பதாஞ்சலி யோகா சூத்ரா பாடல்களை வாழும் கலைஞர் என்று அழைக்கப் படும் ரவி சங்கர் போதிக்கிறார்.
கீழேக் கொடுக்கப் பட்ட யோகா முறைதான் தியான முறையினைச் சார்ந்தது
அதன் செயல் முறைகள் 'கியான் யோகா'(தத்துவம்), பக்தி யோகா ( இறைபாதை அடைதல்), கர்ம யோகா ( மகிழ்வான செயல்) மற்றும் ராஜ் யோகா (மனதிணை ஓர் நிலைப் படுத்துதல்) போன்றவையாகும். ஆனால்  தற்போது உடலை வருத்தி ஆண், பெண் அனைவரும் ஒரு இடத்தில் சேர்ந்து அதற்கென்று உடலை ஒட்டிய யோகா டிரஸ் அணிந்து பொது இடங்களில் செயல்  முறையாக்கப் பட்டு வருகிறது. அமெரிக்காவில் கூட அப்படி உடல் ஒட்டி அங்கங்கள் தெரியும் அளவிற்கு அணியும் யோகா உடை தடை செய்யப் பட்டது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இன்னும் சொல்லப் போனால் ஒரு யோகா குரு மீது பல்வேறு அமெரிக்க பெண்கள் கற்பழிப்பு புகார்கள் கொடுத்து அது விசாரணையில் இருப்பதும் பத்திரிக்கை வாயிலாக அறிந்திருப்ர்கள்.
யோகா பயின்றால் புற்று நோய், மனபிதற்றல், காச நோய், இருதய நோய் குணமாகும் என்றும் கூறப் படுகிறது. எப்படி 'வல்லாரை லேகியம்' விற்கும் வைத்தியர் தன் வார்த்தை ஜாலங்களால் லேகியத்தினை விற்கின்றாரோ அதே போன்றும் தான் மேற்கூறப்பட்ட நோய்களுக்கும் குணமாகும் என்று கூறுகிறார்கள். ஆனால் அதன் பயன் பற்றி ஆய்வு நடத்தியவர்கள் புற்று நோய் சுகமாவதிற்கும், யோகப் பயிற்சிக்கும் மொட்டைத் தலைக்கும் முனங்காலுக்கும் போடுகின்ற முடிச்சு போன்ற பேச்சே அது என்றும் கூறுகிறார்கள். அது போன்ற நோய்கள் குணமாகும் என்பது ஒரு மனோ தத்துவ சிகிச்சையே என்றால் சரியாகும் என்று படித்து பட்டம் பெற்ற மருத்துவர்களே சொல்கிறார்கள்.
கீழே தரப்பட்ட யோகப் பயிற்சியினை காணுங்கள். இதில் பெண்கள் அணிந்திருக்கும் உடையினைப் பாருங்கள். அவர்கள் செயல் முறையினைப் பார்த்தால் எவ்வாறு உடல் நோய் நீங்கும் என்று உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்..

யோகா பற்றி ஆய்வு நடத்தியவர்கள் அதன் பாதக செயல்களை கீழ்க் கண்டவாறு கூறுகிறார்கள்:
1) யோகா முறையினை ராம் தேவ் சொல்படி   அதிக உடல் வலியுடன் செய்தால் மன நிலை ஸ்திரத்தன்மை பாதிக்கும் என்றும்,  போலியான இறப்பு, சமாதி அடைதல், பைத்தியம், அமைதியின்மை, படபடப்பு, பய உணர்வு, தற்கொலை எண்ணம், தனக்குத் தானே ஊனம் ஏற்படுத்துதல் ஏற்பதுத்துதல் போன்றவை உண்டாக வழி வகுக்கும் என்று கூறுகிறார்கள். அத்துடன் தலை வலி, தற்காலிக கண் பார்வை இழத்தல், பிறப்பு உறுப்புகளில் வலி ஏற்படுத்துதல், மற்றும் ஆண், பெண் இணைந்து செய்வதால் சமூகப் பிரச்சனை ஏற்பட வழி வகுக்கும். அமெரிக்காவில் யோகா 14 வயதிற்குக் கீழ் உள்ள பிள்ளைகளுக்கு அறவே கூடாது என்று சொல்கிறது. ஏனென்றால் குழந்தைகளின் வளர்ச்சியினை அது பாதிக்குமாம்.
சில  ஆண்டுகளுக்கு முன்பு பிராட்வேயில் உள்ள லோன்ஸ்  ஸ்குயிர் பார்க்கில் ஆண்களுக்கான யோகவினை ஒருவர் செயல் படுத்தி வந்தார். அங்கு நடைப் பயிற்ச்சிக்கு வந்த கோசா முஸ்லிம் பெண்களையும் தூண்டி யோகப் பயிற்சியில் ஈடு படுத்தினார். தற்செயலாக கொத்தவால் சாவடி மார்க்கெட்டுக்கு வந்த ஒரு பெண்ணின் கணவர் ஆண்களுடன் தன் மனைவியும் யோகா பயிற்சியில் ஈடுபடுவதினைக் கண்டு அதிர்ச்சியுற்று, சண்டை போட்டு தன் மனைவினை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். அதிலிருந்து அங்கே யோகாவும் நடக்க வில்லை.அதே போன்ற சமூதாயப் பிரச்சனை ஏற்பட வழி வகையாகி விடுமல்லவா? பின் ஏன் அமெரிக்காவில் உள்ளது போல கற்பழிப்புப் புகார்கள் வராது?
iநானும் 1982 ஆம் ஆண்டு ராஜஸ்த்தான் மாநிலத்தில் உள்ள மவுண்ட் அபு என்ற இடத்தில் இருக்கும் காவல் அகாடமியில் 15 நாட்கள் யோகா பயிர்ச்சி பெற்று இருக்கின்றேன். ஆனால் ஒரு வயதில் தான் தற்போதிலுள்ள யோகா முறைகளை செய்ய முடியும். சென்னைக் கோட்டைக்கு வெளியே உள்ள பார்க்கில் குப்தா என்ற யோகா மாஸ்டர் பயிற்சி அளிக்கின்றார். ஆரம்பத்தில் நடைப் பயிற்ச்சிக்கு வந்தவர் யோகா ஆர்வத்தில் புது மாப்பிள்ளை போன்று பயிற்சி பெற்றனர். ஆனால் போகப் போக அந்தக் கூட்டம் குறைந்து யோகா மாஸ்டர் மட்டும் இன்று செய்து கொண்டு உள்ளார்.
ஆனால் தொழுகைக்கு ஏழு வயதிலிருந்து, மரணிப்பது வரை நின்று, உட்காந்து, படுத்துக் கொண்டு தொழ முடியும். தொழுகைக்கு தேவைப்  படுவது சுத்தமான இடம், உளுச் செய்ய சிறுது  வசதி. ஆனால் ஆணும், பெண்ணும் இணைந்து  தொழ வழியில்லை. ஏனென்றால் தொழும் இடத்தில் நப்பாசைகளுக்கும், கண்களுக்கும் கட்டுப்பாடு இருப்பதினால். ஐவேளை தொழுகை, சும்மாத் தொழுகை, பெருநாள் கூட்டுத் தொழுகை, தகஜாத் இரவுத் தொழுகை, இக்திகாப் தனித்துத்து இருந்து தொழல்.
உடல் திடகார்த்தமானவர் வீட்டிலிருந்து, அல்லது வியாபாரத் தளத்திலிருந்து நடந்தே தொழுகைக்கு வருவது ஒரு நடைப் பயிற்சி. வயதானவர், நோயாளி, கர்ப்பிணி, உட்கார்ந்து அல்லது படுத்துத் தொழல் வசதி. அதுவும் ஒரு பயிற்சியே! தொழுவதால் உளச் சுத்தம் ஏற்படுதல்  அதாவது மது வெறுத்தல், பொய் சொல்லுதல், பித்தலாட்டம் செய்யாதிருத்தல், நேர்மை காப்பது போன்ற உளச் சுத்தம் ஏற்படும்.
தொழும் பொது இறைவனால் அருளப் பட்ட அழ குரானை ஓது கிறோம் என்ற பய, மதிப்பு மரியாதை ஏற்படுகின்றது.அத்துடன் கூட்டுத் தொழுகையால் ஒரு சகோதர பாசம் சுரக்கின்றது.
அல்குரான் சூரா மாய்தாவில்(5:3) இஸ்லாம் முழுமையும், முதிற்சியும் பெற்றது என்று கூறுகின்றது.
தொழுகை அதிக அளவினான மன அமைதியும், மனதினை ஓர் நிலைப் படுத்தவும் செய்கின்றது.
கபீர் எமண்ட் ஹெல்மின்ஸ்கி என்பவர், 'சூபி வே டு மைண்ட்புல்ன்ஸ் அண்ட் எசென்சியல் ஸெல்ப்' என்ற புத்தகத்தில், இஸ்லாமிய ஐவேளை தொழுகை (நிற்பது,குனிவது, தரையில் தலை வணங்குவது மற்றும் காலை மடித்து உட்காருவது ஆகிய உடல் அசைவுகள் மூலம் முக்கிய எலும்பு இணைப்புகள், ஸ்பைனல் கார்ட் எலும்பு உள்பட வலுப்பெறும், வயிற்றில் குடல் அழுத்தம் பெரும், நுரை ஈரல், கல்லீரல் இயங்கவும், மூச்சு சீராகவும், சிறு மூளை மூலம் இதய ஓட்டம் நல்ல முறையில் இயங்க வழி வகுக்கின்றது என்கிறார்.

நமது முஸ்லிம் கிராமங்களில் அந்தக் காலங்களில் என்னைப் போன்ற சிறுவர்கள் கூட  கீழே காணும்  சிலம்பாட்டம், மடுக் கட்டை, மான் கொம்பு சுற்றுதல் போன்ற வீர விளையாட்டுக்களை பயிற்சியாக கொடுத்தார்கள். ஆனால் எந்தக்  காலத்திலும் முனங்காலுக்கு மேலே கைலி சென்றதில்லை. ஆனால் இன்று அரை குறை ஆடையுடன் மாணவர் மாணவியர் உடற்பயிற்சி எடுப்பது எந்த வகையில் நியாயம்?
ஆகவே யோகா என்ற மாய வார்த்தைகளில் மயங்காது எல்லாம் வல்ல அல்லாஹ் அருளிய ஐவேளை தொழுகையினை கடைப் பிடித்து, பாரம்பரிய உடற் பயிற்சிகளை மேற்கொண்டு, நல் வழி தவறாமல் இருந்தாலே சாலச் சிறந்ததாகும்.