Friday 23 December, 2016

ரோமில் ரோமனாக இருங்கள், சுற்றுலா அறிவுரை!



ரோமில் ரோமனாக இருங்கள், சுற்றுலா  அறிவுரை!
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,(ஐ.பீ.எஸ்(ஓ)

நம் நண்பர், உறவினர், ஏன் நாமும் வெளி நாடுகளுக்குச் செல்லும்போது அங்குள்ள பண்பாடுகளை தெரியாமல் சங்கடங்கள் சந்திக்க நேரிடுகிறது. ஒரு பழமொழி சொல்லுவார்கள், 'ரோமில் இருக்கும்போது ரோமனாக மாற வேண்டுமென்று'. ஆகவே செல்லும் நாடுகளின் பழக்க வழக்கங்களை தெரிந்து கொண்டால் சங்கடங்கள் தவிர்க்கலாம்.
ஐரோப்பிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து மக்கள் பஸ், ரயில், வணிக வளாகம் ஆகியவற்றில் வரிசைப் படி நிர்ப்பதினை காணலாம். ஒரு பஸ் நிறுத்தத்தில் ஒருவர் தான் நன்றிருந்தாலும் அடுத்தவர் முந்தி சென்று ஏறமாட்டார். வரிசையில் நிற்கும் போது ஒட்டி, இடித்துக் கொண்டு நிற்கவும் மாட்டார்கள். ஆனால் இங்கு ரூபாய் நோட்டினை மாற்றுவதற்கு வயதான மூதாட்டியார், பெரியவர் என்றும் பாராது  இடித்து தள்ளிக் கொண்டு சென்றதினை தொலைக் காட்சி படம் பிடித்துக் காட்டியது 2016 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில்.
பின்லாந்து நாட்டில் பெரும்பாலான வீடுகள் மரத்தினால் அமைக்கப் பட்டிருக்கும். வீட்டினை சுற்றி நீர் நிலை ஓடிக் கொண்டிருக்கும். அங்கு ஒரு ரம்மியமான சூழ்நிலை காணலாம். அவர்கள் அதிர்ந்து பேசுவதினை விரும்பமாட்டார்கள். காலணி அணிந்து கொண்டு வீட்டுக்குள் வருவதினையோ, விருந்தாளிகள் புகை பிடிப்பதினையோ விரும்பவும் மாட்டார்கள்.
பிரான்ஸ் நாட்டில் மிகுந்த மரியாதையுடன் ஐயா(ஸார்), மேடம் என்று அழைப்பார்கள். விருந்தாளிகளை உபசரிக்கும் போது சம்பிரதாயத்திற்கு முத்தமிடுவார்கள்.
ஜெர்மன் நாட்டினர் சுறுசுறுப்புடன், ஒழுக்கத்துடனும், கட்டுப் பாடுகளுடனும் நடந்து கொள்வார்கள். போக்குவரத்து விதிகளை கடுமையாக அனுசரிப்பார்கள். நேரந்தவராமை அவர்களுக்கு முக்கியம். ஒரு இடத்தில் மீட்டிங் என்றால் 10 நிமிடங்கள் முன்பாகவே வந்து விடுவார்கள்.
இத்தாலி நாட்டில் பிட்ஸா, பாஸ்டா, ஆண்டிபாஸ்டி போன்ற உணவு வகைகள் எந்த மூளை முடுக்குகள் உள்ள கடைகளிலும் கிடைத்தும். சாப்பிட்டவுடன் சர்வர்  கொடுக்கும் பில்லுக்கு ஒவ்வொரு உணவிற்கும் தனித்தனியே பட்டியல் போட்டு கொண்டு வரச்சொல்லலாதீர்கள், மாறாக சாப்பிட்டவர் எண்ணிக்கையினை மொத்த பில்லிலிருந்து வகுத்தால் தெரிந்து விடும் ஒவ்வொரு உணவிற்கான சார்ஜ்.
போலந்து நாட்டில் பெண்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார்கள். காரில் வரும் விருந்தாளிகளுக்கு அவர்கள் கீழே இறங்க வசதியாக கார் கதவினை திறந்து விடுவார்கள், அவர்கள் கோட்டினை கழட்டுவதிற்கு உதவி செய்வார்கள். பெண்கள் ஆண்களிடம் பயமில்லாமல் பழகலாம். பெரும்பாலும் முறைகேடாக நடக்க மாட்டார்கள்.
        ஸ்பெயின் நாட்டினருக்கு சப்தம் சக்கரைப் பொங்கல் போன்றது. மோட்டார் சைக்கிள், கார் சப்தமாக செல்வதும், தொலைக்காட்சிப் பெட்டிகள் அலறலும் நாம் கேட்கலாம். ஹோட்டலில் தங்குபவர்களுக்கு நடு இரவில் வேலைக் காரர்கள் குப்பைப் பெட்டியினை இழுத்துச் செல்லும் சப்தம் கேட்கலாம். அங்கு ஒருவருக்கொருவர் சப்தமாக பேசுவதை காணலாம்.
பிரேசில் நாட்டினர் மாசற்ற பழக்க வழக்கங்களை கொண்டிருப்பர். ஒருவரை பார்க்கும்போது, அவர் குளித்து,  தலைவாரி, நேர்த்தியான ஆடை உடுத்தி, வாசனை திரவியம் தடவி காணப்படுவார். அவர்கள் போன்று நீங்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். கடற்கரை பீச்சில் குளிப்பதற்கும், சூரிய ஒளியில் பீச்சில் ரசிப்பதற்கும் விரும்புவர். ஆனால் கோவா பீச்சில் இருப்பது போல பிக்கினி மாதுகளை பார்க்க முடியாது. எல்லா நகரங்களிலும் உள்ளது போன்ற குற்ற செயல்களை காணலாம். சமீபத்தில் ரியோ ஒலிம்பிக் போட்டியினை காண வந்த ரசிகர்களிடமிருந்து விலையுயர்ந்த ரோலக்ஸ் கைக்கெடியாரம், செல் போன், கைப்பை போன்றவைகளை பறித்துச் செல்லும் இளைஞர்களைக் காணலாம்.
            மெக்ஸிகோவில் ஆங்கிலம் பேச மாட்டார்கள். ஸ்பேனிஷ் மொழியில் தான் பேசுவார்கள். அமெரிக்காவில் கூட கலிபோர்னியா மாநிலத்தில் பலர் ஸ்பானிஷ் மொழி பேசுவதினைக் காணலாம். எந்த வேலையையும் உடனுக்குடன் செய்ய மாட்டார்கள். 'மன்னா' என்ற வார்த்தை வருவதினை காணலாம். மன்னா என்றால் நாளை என்று அர்த்தமாகும். அதாவது 'இன்று போய் நாளை வா' என்று எடுத்துக் கொள்ளலாம். பகல் சாப்பாட்டிற்கு மதியம் ஒரு மணிக்கு வாருங்கள் என்றால் நாம் தாராளமாக மாலை 2 மணியளவில் செல்லாம்.
            அமரிக்காவினைப் பொறுத்த மட்டில் நீங்கள் விட்டு விட்டுப் பேசுவதினை எதிர் பார்ப்பார்கள், ஏனென்றால் இடையிடையே அவர்களும் பேசுவதினை விரும்புவார்கள். உங்கள் உரையாடலோடு சில பழமொழிகளைச் சொன்னால் அதனை ஞாபகப் படுத்தி நண்பர்கள் கூட்டத்தில் சொல்லுவார்கள். நீங்கள் லிப்ட்டில் செல்லும் போது அவர்கள் பேசினாலொழிய நாம் பேசக் கூடாது. அவர்கள் முகம் நோக்கிப் பார்க்கக் கூடாது. சிறுவர், சிறுமிகளுடன் பெற்றோர் அனுமதியில்லாமல் உரையாடல் செய்யவோ, தொடவோ கூடாது. காவலர்கள் உங்களை எச்சரித்தால் உடனே கைகளை  மேலே தூக்க வேண்டும். இல்லையென்றால் சுடப்படுவீர் என்பதினை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.
            ஆஸ்திரேலியா மக்கள் நட்புடனும், திறந்த மனத்துடனும் பழகுவார்கள். ஆகவே தான் அகதிகளை வரவேற்று அவர்களுக்கென்று ஒரு தனி புகலிடம் கொடுத்து பராமரிக்கின்றார்கள். இன்று அங்கு இருக்கும் ஆசிய, அராபிய மற்றும் ஆப்பிரிக்கா மக்கள் அவ்வாறு குடி பெயர்ந்தவர்கள் தான். இந்திய, இலங்கை உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கு திறந்த வெளியில் சாப்பிடுவது(பார்பிக்கு) மிகவும் பிடிக்கும். அப்படிப் பட்ட விருந்திற்கு உங்களை அழைத்து 'நீங்கள் ஒரு பிளேட்' கொண்டு வாருங்கள் என்றால் வெறும் தட்டுடன் சென்று விடாதீர்கள். நீங்களும் ஒரு உணவு வகையினை கொண்டு வரவேண்டும் என்று அர்த்தமாகும். சட்டம், நீதிக்கு மிகுந்த மதிப்பளிப்பார்கள்.ஒரு தடவை ஒரு உச்ச நீதி மன்ற நீதிபதி போக்குவரத்து விதிகளை மீறியதோடு மட்டுமல்லாமல், அவருக்கு போலீஸ் நோட்டீஸ் கொடுத்த பொது, தான் அவ்வாறு மீறவில்லை என்று பொய் சொன்னதால் நான்கு வருடம் சிறை தண்டனை கொடுக்கப் பட்ட வரலாறும் உண்டு.
            சீன நாட்டிற்கு சென்றால் சீனர் உணவிற்கு என்ன கிடைக்கின்றதோ அதனை உண்பர். சீனாவில் 2015 ஆம் ஆண்டு உணவிற்காக 40 லட்சம் பூனைகளை கொன்று இருக்கின்றார்கள்  என்றால் பாருங்களேன். ஆகவே விருந்தாளிகளாக செல்லும்போது அவர்கள் உணவினை  நாசுக்காக தவிர்ப்பது நல்லது. அவர்கள் பரிசுப் பொருட்களை மிகவும் விரும்பி பெறுவதுடன், உங்கள் முன்னாள் அதனைப் பிரித்துப் பார்க்க மாட்டார்கள். ஆனால்  நிச்சயமாக நீங்கள் சென்றதும் பார்ப்பார்கள்.
            ஜப்பான் நாட்டு மக்கள் எதிலும் மாசற்ற சடங்குகளை எதிர்பார்ப்பார்கள். சுத்தம், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். உங்கள் காலனியை வெளியே விட்டு விட்டு, வீட்டுக்குள் அணிந்து செல்லும் காலணியினை போட்டுக் கொண்டு செல்ல வேண்டும். கழிப்பறைக்கு செல்லும்போது அதற்கான பிரத்தியோக காலணிகளை அணிந்து கொள்ள வேண்டும். மறந்தும் அதனை வீட்டுக்குள் உபயோகிக்க வேண்டாம். அவைகளை வீட்டினை விட்டு வரும்போது அந்த அந்த இடத்தில் விட்டு விட்டு வரவேண்டும்.
            தாய்லாந்து மக்கள் உங்கள் உணர்வுகளை கட்டுக் கோப்புடன் வைத்துக் கொள்ள விரும்புவார்கள். உங்கள் கோபத்தினை எதிர்பார்க்க மாட்டார்கள். அங்குள்ள புன்னைகைக்கும் புத்தர் சிலையினைப் பார்த்து, பார்த்து அவர்களுக்கு அமைதியுடனான வாழ்வு பழக்கப் பட்டுப் போய் விட்டது.
            நான் மேலே கூறிய அறிவுரைகள் சிறு துளிகளே, நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது கடலளவே.

Monday 19 December, 2016

கண்கள் குளமாகுதம்மா சதாம் ஹுசைனை நினைக்கையிலே!



கண்கள் குளமாகுதம்மா சதாம் ஹுசைனை நினைக்கையிலே!
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,பிஎச்.டி(ஐ.பீ.எஸ்)
உங்களுக்கெல்லாம் தெரியும் 2003 ஆம் ஆண்டு இராக் நாடு அதிகம் ஆள் கொல்லி ஆயுதம் கொண்டு அமெரிக்கா மற்றும் கூட்டு நாடுகளுக்கு எதிராக ஆபத்து விளைவிக்கும் என்று தெரிகிறது என்ற வடி கட்டிய பொய்யினை உலக நாடுகளில் பரப்பியதோடு மட்டுமல்லாமல், அமெரிக்க-இங்கிலாந்து கூட்டுப் படையினர் அந்த நாட்டின் மீது படையெடுத்தனர் என்று.
அத்தோடு நில்லாமல் அந்த நாட்டினைப் பிடித்து, அதன் எண்ணெய் வளங்களை, மற்றும் அரசு, தனிப் பட்டவர் சொத்துக்களை கொள்ளையடித்து, அல் மாலுக்கி என்ற பொம்மை ஷியா  அரசை அரியணையில் ஏற்றினர். சில நாட்களில் அதன் ஜனாதிபதி சதாம் ஹுசைனை வஞ்சகர் மூலம் கண்டு பிடித்து கண் துடைப்பு நீதி விசாரணை மூலம் தூக்கு மேடைக்கு ஏற்றினர். ஆனால் அவர்கள் தேடி வந்த ஆட்கொல்லி ஆயுதம் சிக்கியதா என்றால் இல்லை என்பதும் உங்களுக்குத் தெரியும், உலக நாட்டு மக்களுக்கும் தெரியும். 
ஆனால் அந்த இராக் நாட்டில் அமைதி திரும்பியதா என்றால் இல்லையே, அது ஏன்? அதனைத் தான் உலக நாடுகளும் கேட்கின்றன. அப்படி என்ன தாரகை மந்திரம் அதிபர் சதாம் ஹுசைனிடம். பல்வேறு இனத்தினவரையும் தன் ஆளுமையால் ஒருங்கிணைத்து வல்லரசுகளுக்கே ஒரு சவால் விடும் அரபு நாடு இராக் ஒன்றே என்று சொல்லும் அளவிற்கு தன் நாட்டினை கட்டுக் கோப்பாக வைத்திருந்தார் என்றே சொல்லலாம்.
இராக் நாட்டினை பிடித்த பின்பு, சதாம் ஹுசைன் கைது செய்து அக்கினி  விசாரணையில் அதனை விசாரித்த சி.ஐ.ஏ.என்ற அமெரிக்க உளவுப் படையின் அதிகாரி நிக்சன் சமீபத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதனை டெய்லி மிரர் என்ற அமெரிக்க பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
சதாம் ஹுசைனிடம், உளவுத் துறை அதிகாரி நிக்சன், 'உங்கள் மீது ஆட்கொல்லி ஆயுதம் வைத்திருப்பதாக குற்றம் உள்ளதேஎன்ற  என்ற கேள்விக்கு, நாங்கள் ஒரு  போதும் அவ்வாறு செய்ய எண்ணவில்லை, எங்களிடம் அதுபோன்ற ஆயுதமும் இல்லை. எல்லாம் வல்ல இறைவன் அப்பாவி பொது அவ்வாறு அழிக்க கட்டளை இடவுமில்லை. உங்களிடம் கூட அதுபோன்ற ஆயுதம் இருந்தாலும் எங்கள் மீது அதனை உபயோகிக்கவில்லையே அது ஏன்' என்று கேட்டுள்ளார்.
 சதாம் தொடர்ந்து கூறும்போது, இராக் நாட்டினைப்   பற்றி அல்லது மொழியினைப் பற்றியோ அல்லது அராபிய நாட்டு மக்களைப் பற்றியோ உங்களுக்குத் அதிகம் தெரியாது. உங்களுடைய முயற்சி வெற்றி பெறாது, தோல்வியினை நீங்கள் அடையப் போவது நிச்சயம்' என்று கூறியதாகவும், அதன் படியே அமெரிக்க கூட்டுப் படை இராக் நாட்டிலிருந்து வெளியேறினாலும், இன்னும் கூட 5000 அமெரிக்க ராணுவத்தினர் அங்கு இருந்து இராக் ராணுவத்திற்கு உதவியாக உள்ளனர். அது மட்டுமல்லாது அவர்களுக்கு உதவியாக ஆளில்லா விமானம் மூலம் சுன்னி முஸ்லிம்களை அழித்துக் கொன்று அதனை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டு அவர்களுக்கு மிகப் பெரிய தோல்வியும் தந்துள்ளது என்றும் கூறுகிறார். இதனையே தான் சதாம் ஹுசைன் ஒரு தீர்க்கதரிசியாக எச்சரித்துள்ளார் என்று கூறுகிறார் நிக்சன்.
இதனைப் போன்று தான் கடாபியும் இங்கிலாந்து அப்போதைய பிரதமர் டோனி பிளேயரிடம் 2012 ஆம் ஆண்டு, 'நீங்கள் என்னை பதவியிலிருந்து நீக்கினால் லிபியாவில் குழப்பம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார். இன்றும் அந்த நாட்டில் நிலையான ஆட்சி இல்லையே அது ஏன் என்று இப்போதாவது மேலை நாடுகள் சிந்திக்க வேண்டாமா தோழர்களே!