Thursday 26 October, 2017

சமுதாய நல்லிணக்கம் கண்ணை உறுத்துகிறதா?


 சமுதாய நல்லிணக்கத்திற்கு வந்த ஒரு சோதனை!
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)
நமது அரசிலமைப்பு சட்டம் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும், அனைத்து சமுதாயத்தினரும் சமமாக, வேறுபாடு இல்லாமல் வாழ வேண்டும் என்று அரசியலமைப்பு சபைகூடி சட்டமும் 1950 நிறைவேற்றப் பட்டது. ஏனென்றால் இந்திய மக்கள் அந்நியரான ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து ஜாதி, மத, சமுதாய வேறுபாடு இல்லாமல் சொத்து சுகம், உயிர் மற்றும் தாங்கொண்ணா கொடுமைகளை அனுபவித்து சுதந்திர இந்தியாவினை பெற்றனர். இந்திய பிரிவினையின்போது பாகிஸ்தான் ஜனாதிபதி முகமது அலி ஜின்னா அழைப்பு கொடுத்ததையும் புறக்கணித்து இந்திய எங்கள் தாய்நாடு நாங்கள் வரமாட்டோம் பாகிஸ்தானுக்கு என்று கண்ணியமிகு காயிதே மில்லத், மௌலானா அபுல் கலாம் ஆசாத் தலைமையில் குரல் கொடுத்தனர். எப்படி இந்திய கலாச்சாரத்தினை முன்னிறுத்த கல்லானாலும், கணவன், புல்லானாலும் புருஷன் என்று ஒரு மனைவி, கணவனின் கால்களை சுற்றி வருகிறாளோ  அதேபோன்று இந்திய மக்கள் முஸ்லிமானாலும், தலித்தானாலும், அல்லது பழங்குடியினர் ஆனாலும் இந்திய மண்ணை சுற்றி சுற்றி வருகின்றனர். ஆனால் சமீப கால சம்பவங்கள் அவர்களை எப்படி அமெரிக்காவில் கறுப்பின அமெரிக்கர்களை கேவலமாக வெள்ளை நிற அமெரிக்கர்கள் நடத்துகிறார்க்ளோ அதேபோன்று இங்கேயும் நடத்த முயற்சி நடக்கின்றன என்று சில சம்பவங்களை உங்களுக்கு சுட்டி காட்ட விரும்புகிறேன். 

சமீப காலாத்தில் ஷாஜஹான் எழுப்பிய பளிங்கு நினைவு மாளிகை சிலருக்கு கண்ணை உறுத்தி அது, 'சிவன் கோவிலை இடித்து எழுப்பப் பட்ட கட்டிடம்' என்று .பி.மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும், 'தாஜ் மஹால் பல்வேறு ஹிந்து தொழிலாளிகள் வேர்வை சிந்தி எழுப்பப் பட்டது' என்று .பி.முதல்வரும், அது துரோகிகள் கட்டிய கட்டிடம்  என்று வினய் கட்டார் என்ற பி.ஜே.பி எம்.பி யும்  கூறியிருப்பது சிரிப்பையும் சிந்தனையும் தூண்டி விட்டிருக்கிறது. வாரணாசியில் ஞானவாசி என்ற ஒரு பள்ளிவாசல் உள்ளது. அதன் அருகிலேயே காசி விஸ்வநாதர் கோவில் ஒன்றும் உள்ளது. இப்போது இந்துத்துவா தீவிரவாதிகள் சொல்வது என்னவென்றால் அந்த பள்ளிவாசலே முகலாயர் ஆட்சிக்காலத்தில் கோவிலை இடித்து கட்டப் பட்டது தான் என்பது என்ற வாதம்  அதனை வெளிக்காட்ட வாரணாசி நீதிமன்றத்தில் ஒருவர், 'இந்த பள்ளிவாசலை தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு சர்வே எடுத்து அதுபோன்று கோவிலை இடித்து பள்ளிவாசல் கட்டப் பட்டதா என்று அறிவிக்கை கொடுக்க வேண்டும் என்று அயோத்தி பாபர் மஸ்ஜித் கதையாக தாக்கல் செய்துள்ளார். அதனை ஏற்ற நீதிமன்றமும் தொல்பொருள் மையத்திற்கு சர்வே செய்ய ஆணையிட்டுள்ளது  இப்போது அந்த வழக்கு உச்ச நீதி மன்றத்திற்குப் போய் அதனை தற்காலிக தடையும் செய்துள்ளது. இது எதனை காட்டுகிறது ஒரு கிராம பழமொழி சொல்வார்கள், 'ஆட்டைக் கடித்து மாட்டை கடித்து மனிதனையும் கடிக்க வழி செய்கிறான்' என்று. எப்படி  அயோத்தியில் வெற்றி கொண்டார்களோ அதேபோன்று இன்னும் பல இடங்களில் மத துவேசம் செய்யவேண்டும் என்று சில அமைப்புகள் கங்கணம் கட்டிக் வேளையில் இறங்கியுள்ளன என்று தெரியவில்லையா உங்களுக்கு?அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர் சொல்வதுபோல அங்குள்ள சிவன் கோவில் இருந்ததா அல்லது இல்லையா என்று அவருக்கு எப்படித் தெரியும் அல்லது அது போன்ற ஒரு கதையினைச் சொல்லி பாபரி மஸ்ஜித் இடித்தது போன்று இடித்துவிட்டுஅதன் அடிவாரத்தினை ஒரு கமிஷன் போட்டு தோண்டி சில மண் குடுவைகள் உதாரணத்திற்காக எடுத்துக் காட்ட உள்ள திட்டமா என்று தெரியவில்லை.பிமுதல்வர் சொல்வது போன்று இது இந்து தொழிலாளர்கள் சிந்திய வியர்வை என்று வைத்துக் கொள்வோம்.பிமுதல்வர் ஒரு முஸ்லிம் அதிகமாக உள்ள கிராமத்தில் வசிக்கும் ஒரு மிராசுதார்  என்று நினைத்துக் கொள்வோம்அவர் வயலில் முஸ்லிம் விவசாய தொழிலாளர் வேலை செய்து அதன் மூலம் நல்ல விளைச்சல் அந்த வருடம் வந்தால் அந்த நிலத்தினை முஸ்லிம் விவசாய தொழிலாளர்கள் கேட்டால் கொடுத்து விடுவாரா அல்லது விளைச்சலில் மூன்று பகுதியினை அவர்களுக்கு வழங்கி விடுவாரா?  அது போன்று தான் முகலாய சக்கரவர்த்தி கட்டும் கட்டிடத்தில் ஹிந்து தொழிலாளர்கள் வேலை செய்திருந்தால் இயற்கைதானேஇப்போதைக்கு ஏன் அந்த ஞானோதயம்என்று கேட்க உங்களுக்குத் தோன்றவில்லையா?
2014ஆம் ஆண்டு ஆட்சி பீடம் மத்தியில் அமர்ந்து மூன்று வருடம் ஆகியும், சொன்ன வாக்குறுதிகளான, 'வெளிநாட்டில் பதுக்கிய கறுப்புப் பணமீட்டல்' 'அந்தப் பணத்தில் ஒவ்வொருவருக்கும் அவர் வங்கியில் ரூ 15லட்சம் வங்கியில் செலுத்துதல்', 'கறுப்புப் பணம் ஒழிப்பேன் என்று ரூ.500/ ரூ 1000/ நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து அதுபோன்று செல்லாத நோட்டுக்கள் அரசு வங்கிகளுக்கு எவ்வளவு வந்துள்ளது என்று எண்ண முடியாமல் அதற்கான எந்திரங்கள் இல்லாத நிலை' புதுமை பொருளாதாரம் என்று ஜி.எஸ்.டி.சட்டம் கொண்டு உற்பத்தி முடக்கியது','வெளிநாட்டு மேனா மினுக்கி பயணங்கள் மூலம் பயன் பெற்றது சில தொழில் அதிபர்கள் தானே ஒழிய .நா.சபையில் நிரந்தர பாதுகாப்பு உறுப்பினர் கூட பெறமுடியா பரிதாப நிலை போன்ற தோல்வியான திட்டங்களால் துவண்டு போன காவிப் படை கையில் எடுத்தது தான், 'லவ் ஜிஹாத் எதிரான நடவடிக்கை', 'பசுமாட்டை கறிக்காக கடத்துகிறார்கள் என்று ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நடந்த கொலைகளும், மாட்டுக் கறி சாப்பிட்டார்கள், மற்றும் பதுக்கி வைத்திருக்கின்றார்கள்' என்று கூலிப்படை கொண்டு தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் உச்ச நீதிமன்றம் எச்சரித்தும் அங்குள்ள ஆட்சியாளர்கள் துணையுடன் நடப்பதாக எண்ணத் தோன்றுகிறது என்று ஒரு உதாரணத்தைச் சொல்லலாம் என நினைக்கின்றேன். .பி.மாநிலம் முஸாபார் நகரில் அக்லக் மாட்டுக்கறியினை  பதுக்கி வைத்துள்ளார் என்று அவரை வீடு புகுந்து குடும்பத்தினர் முன்னாள் கொலை செய்த பாதகர் 15 பேர்களுக்கு அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர் மூலம் பொது நிறுவனத்தில் வேலை கொடுக்கப் பட்டுள்ளது எதனை காட்டுகின்றது, 'புதிய இந்தியாவையா, அல்லது இனிமேல் இதுதான் இந்தியா' என்று இந்திய மக்களைப் பயமுறுத்தும் திட்டமா என்று தெரியவில்லை. நான் மேலே குறிப்பிட்ட தோல்வியினை சரிக்கட்ட எடுக்கப் படும் நடவடிக்கை என்று, பல அரசியல் வாதிகள் சொன்னாலும், முன்னாள் பி.ஜெ.பி  நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்காவும், மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத் மலானியும், மூத்த பத்திரிக்கையாளர் அருண் ஜெட்லீயும், நமதூர் புதிதாக சிலிர்க்கும் நடிகர் கமலஹாசனும் முக்கிய மானவர்கள்.
                

இந்திய நாடு பல்வேறு மொழி, இனம், மதம், மார்க்கம் ஆகியவற்றினை கொண்டு பல்வேறு படையெடுப்புகளை சந்தித்து, அந்நியரின் கலாச்சரங்களையும் தன்னிடையே விழுங்கி ஒற்றுமையாக உருவெடுத்து ஹிமாலய சாதனையாக எழுந்து நிற்கின்றது. அந்த சாதனைகளுக்கு சரியான உருவமைப்புத் தான் இந்திய அரசியல் சட்டம் 1950. அது மட்டும் இல்லையென்றால் என்றோ இந்த நாடு மதத் துவேஷகர் மூலம் மாற்றி அமைக்கப் பட்டிருக்கும். இந்த சமயத்தில் ஒரு தவளைக் கதையினை சுவாமி விவேகானந்தர், அமெரிக்கா சிகாகோ நகரில் 1893 செப்டம்பர் மாதம் நடந்த உலக மத மாநாட்டில் எவ்வாறு நாம் மத வேறுபாட்டால் மனித இனத்திற்குள் சாக்கடை புகுந்து வெறுப்புனவுணர்வுடன் பிரிந்திருக்கின்றோம் என்று சொன்னதினை உங்கள் கண் முன்   நிறுத்தலாம் என எண்ணுகின்றேன்.
'ஒரு கிணற்றுத் தவளை மிகவும் சந்தோசமாக அங்கே உள்ள கல்சுவருக்கும் தண்ணீருக்கும் இடையே தாவிக்குதித்து விளையாடிக் கொண்டு அந்தக் கிணறுதான் உலகம் என எண்ணிக் கொண்டும் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருந்ததாம். ஒரு நாள் ஒரு கடலில் வாழும் தவளை வழி தவறி வந்து கிணற்றில் விழுந்து விட்டதாம். அப்போது கிணற்றுத் தவளை, கடல் தவளையினைப் பார்த்து குதித்துக் கொண்டு கடல் எவ்வளவு பெரிது என்றும் அது கிணறு போன்று இருக்குமா என்று கேட்டதாம். அதற்கு கடல் தவளை கடல் ஒரு பெரிய  சமு த்திரத்தினைப் போன்று என்று சொன்னதாம் அதனை கிணற்றுத் தவளை நம்ப வில்லையாம். அதேபோன்று தான் நான் ஒரு ஹிந்துவாக இருந்து கொண்டு ஹிந்து மதம் தான் பெரிது என்று எண்ணுகின்றேன். கிருத்துவ நாட்டில் கிருத்துவர்களும், முஸ்லிம்  நாட்டில் முஸ்லிம்களும் எண்ணுகின்றார்கள்  அதுபோன்று எண்ணத்தில் உள்ளவர் அடுத்த மதத்தினை அழித்து இன்னொரு மதத்தினை கொண்டு வரமுடியுமா என்ற கேள்வியினை எழுப்பினார். ஒவ்வொருவரும் அடுத்தவர் நல்ல கருத்துக்களை தன்னகத்தே கொண்டு, தன்னுடைய தனித் தன்மையும் குறையாது வாழவேண்டும் என்கிறார். அன்று அவர் சொன்ன கருத்துக்களையாவது அவர் 150 பிறந்த நாள்  கொண்டாடும் காவி நண்பர்கள் கடைப் பிடிக்க வேண்டாமா என்பதே என் கேள்வி.

சாதாரண இந்திய குடிமகன் அவர்கள் வெறுப்புக் கருத்தினை ஏற்றுக் கொள்கிறானா என்றால் இல்லை என்றே சொல்லலாம்  என்று சில உதாரணங்களை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்:
1)      1) கோடைக் காலம் என்றாலே காஸ்மீர் செல்ல வசதிப் படைத்த ஒவ்வொருவரும் குடும்பத்துடன் செல்ல விருப்பப் படும் இடம்.  ஹிந்துக்களின் புனித இடமாக இருக்கும் அமர்நாத் கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸின் ஓட்டுநராக சலிம் மிஸ்ரா இருந்தார். அவர் ஒட்டிய பஸ்சினை நோக்கி துப்பாக்கிக்குண்டுகள் பொழியப் பட்டன. அவர் பஸ்ஸை நடு வழியில் விட்டு விட்டு ஓடி விடவில்லை மாறாக பக்தர்கள் 7 பேர் மாண்டாலும், 30 பேர் காயம் பட்டாலும்  தைரியமாக பஸ்ஸை அருகில் உள்ள ராணுவ முகாமிற்கு ஓட்டி வந்து மற்றவர்களையும் காப்பாற்றியதினை அதிகாரிகளும், பக்தர்களும் பாராட்டியதை பத்திரிக்கைகள் வெளியிடவில்லையா?
2)      2) 2015ஆம் ஆண்டு ஹஜ் பெருநாள் தொழுகை நாளன்று மும்பையிலுள்ளமதரசா தாலிமுல் குரான்’ பள்ளிக்கு தொழுவதிற்காக 3000 முஸ்லிம்கள் திரண்டு வந்ததால் பள்ளியின் உள்ளே தொழ இடமில்லை. அந்த நேரத்தில் விநாயக சதுர்த்தி விழாவிற்காக ஹிந்து மக்கள் ஒரு பந்தல் அருகில் அமைத்திருந்தனர். அவர்கள் உடனே அங்கு இடமில்லாமல் நிற்கும் முஸ்லிம்கள் தொழ வசதியாக தங்களுடைய பந்தலினை வழங்கி அங்கே தொழச் செய்தார்கள் என்றதும் பத்திரிக்கைச் செய்திதான் படத்துடன்.
3)      மத்திய பிரதேசத்தினைச் சார்ந்த சந்தோஷ் சிங்கும், ரசாக் திகாரியும் நண்பர்கள். சிங் சிறு வருமானம் உள்ள கட்டிடத் தொழிலாளி. 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காச நோயால் பாதிக்கப் பட்டு தனிமையில் இறந்து விட்டார். அவருக்கு ஈமக்கிரியை செய்ய ஒருவருமில்லை. அந்த செயலை ரசாக் ஒரு சகோதரனாக இருந்து நிறைவேற்றினான் என்பதும் .செய்தி தான். இங்கு கூட அனாதை மாற்று மத  சகோதரர்கள் இறந்து  விட்டால் சுடுகாடு வரை தோளில் சுமக்கும் மார்க்க இளைஞர்கள் படமாக வந்துள்ளது.
4)      சென்னை வாலாஜா பள்ளிக்கு நோன்பு நேரத்தில் இஃப்த்தார் திறப்பதிற்காக செல்லும் முஸ்லிம் நண்பர்களுக்கு கண்ணில் படக்கூடியது, 'சுபிடார் டிரஸ்ட்' உணவு வழங்குதல். இந்த டிரஸ்டில் 81 வயது நாராயண் தாஸும் அவரது சகோதரர்களும் 35 வருடங்களாக ரம்ஜான் நேரத்தில் காலை 7.30 மணிக்கு சமையல் ஆரம்பித்து மாலை இஃப்த்தாருக்கு உணவு கொண்டு வந்து விடுவார்கள்
5)      பஞ்சாப் லூதியானா மாவட்டத்தில் உள்ள ஜெயிலில் உள்ள அறையில்  இருந்த முஸ்லிம் கைதிகள் நோன்பு காலத்தில் நோன்பு வைத்தனர். அதனைப் பார்த்த மாற்று மத கைதிகளும் அவர்களுடன் நோன்பு இருந்து இஃப்த்தார் விருந்திலும் கலந்து கொண்டனர் என்ற செய்தி தான். நான் 2000 ம் ஆண்டு விழுப்புரம் சரக டி..ஜி யாக இருந்தபோது டெல்லியில் ஒரு வழக்கிற்காக அன்று சி.பி.சி..டி டி..ஜி யாக இருந்த நண்பர் துக்கையாண்டி அவர்களும் டெல்லிக்காக அதே வழக்கிற்கு வந்து தமிழ்நாடு இல்லத்தில் என் அறையில் தங்கி இருந்தார். நான் அதிகாலை எழுந்து கிடைத்த பண், வாழைப் பழத்தினை வைத்து நோன்பு வைத்தேன். அதனைப் பார்த்து, 'அவரும் நானும் நோன்பு வைக்கின்றேன் என்று நோன்பு வைத்து, நான் அந்தி மயங்கிய வேளையில் நோன்பை திறந்தபோது அவரும் நோன்பினை முடித்தார். இது எதைக் காட்டுகின்றது. முஸ்லிம்கள்-ஹிந்துக்கள் இந்த நாட்டில் அண்ணன்-தம்பிக்களாக வாழ்கின்றார்கள் என்பதனைத் தானே!
தற்போது மணிப்பூர் மாநிலத்தில் 2023ம் வருடம் மே மாதம் ஆரம்பித்த இன வேறுபாடு வன்முறை இன்னும் அடங்கவில்லை. வன்முறை, கடத்தல், கற்பழிப்பு, வணிக வளாகங்கள் சூறையாடல், வீடுகள் தீக்கறை, சொந்த மண்ணிலே அன்னியர்போன்று அகதிகளாக வாழுகின்றனர் என்ற பரிதாப நிலை. காரணம் மிகவும் ஏழ்மையான பழங்குடி மக்களான மெய்டி இனத்தினை பிற்படுத்துவ பட்டியலில் இணைக்க வேண்டும் என்று அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது தான் தாமதம் மெய்டி  இன மக்களை குக்கி, நாகா இன மக்களை தாக்குவதும், வன்முறையில் ஈடுபடுவதும் அன்றாட செய்தியாக உள்ளது. இதற்கிடையே பர்மாவிலிருந்து வந்து குடியேறிய தமிழர்களும் தாக்கப் பட்டு பாதிக்கப் பட்டுள்ளனர். அங்குள்ள பாதுகாப்புப் படை ஆயுத கிடங்கு சூறையாடப் பட்டு கிட்டத்தட்ட 4 ஆயிரம் தானியங்கி ஆயுதமும், 5-6லட்சம் குண்டுகளும் கொள்ளையடிக்கப் பட்டதாக பத்திரிக்கை மூலம் அறிய வருகிறது. அண்டை மாநிலமான மேகலாயில் குடிபுகுந்த அகதிகளையும் தங்கள் மாநிலத்தினை விட்டு வெளியேறுங்கள் என்று அந்த மாநில தீவிரவாத அமைப்பு மிரட்டுவதாகவும் சொல்லப் படுகிறது. இவையெல்லாம் எதனை படம் பிடித்துக் காட்டுகிறது என்றால் சொந்த நாட்டிலேயே பாதுகாப்பற்ற நிலை மைனாரிட்டி, தலித் பிற்பட்ட மக்களுக்கும் உள்ளது என்று காட்டவில்லையா? ஆகவே தான் இந்திய கலாச்சாரத்தின் படி, அடிப்படை உரிமை சட்டத்தினை மதித்து அரசும், மக்களும் நடந்து கொள்ள அனைவரும் உறுதிமொழி எடுப்பது அவசியமில்லையா? சமீபத்தில் தலித் மக்கள் மீது அத்துமீறல் அதிகமாக உள்ளன என்று எலெக்ட்ரானிக் மீடியா சில சம்பவங்களை காட்டுவதினை நீங்களும் பார்த்திருப்பீர்கள். மத்திய பிரதேசத்தில் ஒரு பழங்குடியி வாலிபர் மீது ஒருவர் சிறுநீர் கழிப்பதும், அதனை அறிந்த முதல்வர் அவர் வீட்டுக்குச் சென்று அவருடைய கால்களை கழுவதும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அதேபோன்று தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் இரு கிராமத்தில் தலித் இனத்தவரை அந்த கிராம மக்கள் காலில் விழுந்து வணங்க வைத்துள்ளார்கள். உ.பி.யில் ஒரு தலித் வாலிபர் வாயில் செருப்பினை வைத்து அடித்துள்ளார்கள், தலித் இனத்தவர் மற்ற ஜாதி பெண்களை மணந்தால் முன்பெல்லாம் தள்ளி வைப்பார்கள். ஆனால் தற்போது ஆணவ கொலைகள் நடப்பதும் பார்த்திருப்போம்.


மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பதும், மத துவேஷ கருத்துக்களை விதைப்பதும், மக்களிடையே நீண்ட சுவரினை கிழக்கு-மேற்கு ஜெர்மனி பிரித்த பெர்லின் சுவர் போல அமையத்தான்  வேண்டுமா? அந்த சுவரும் காலப்போக்கில் இடித்துத் தள்ளப்படவில்லையா? ஒவ்வொரு நாளும் மனித உள்ளங்களில் நடக்கும் நல்லெண்ண பரிமாற்றமும், விருந்தோம்பலும், தாராள மனப் பான்மையும் சில உதாரணங்கள் மூலம் எடுத்துச் சொன்னேன். அந்த நல்லெண்ண பரிமாற்றங்களை சுவர் கொண்டு மறைக்காமல், தங்களுடைய சமூக வளர்ச்சியிலும், தங்கள் அரசு கொடுத்த வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றால் சரிதானே !

வெந்தனலில் விளையாடும் கந்துவட்டி!


(டாக்டர் .பீ .முகமது அலி,.பீ.எஸ் ()

வெந்தனல்  சாக்காட்டில் விளையாடும்
தோள் எங்கள் வெற்றித் தோள்கள்
போர்முரசு கொட்டிய
சங்கத்தமிழன்!

வடமொழி இந்தித்திணிப்பை  -65ல்  
எதிர் கொண்ட தமிழக இளைஞர் பட்டாளம் 
வியட்நாமியருக்கு சளைத்தவர் இல்லை
என உலகிற்கு எடுத்துக் காட்டி

அக்கினிப் பிழம்பினை 
மாலையாக மார்பினில் அணைத்து
செத்து மடிந்தனர் சிவலிங்கம்
சின்னசாமி போன்றோர்

அவர்கள் தியாகம் வீண்
போகவில்லை-இந்தித்
திணிப்பு தடுத்து
நிறுத்தப் பட்டது ஓர் வரலாறு!

'கூலியுயர்வு கேட்டான் அத்தான்
குண்டடி பட்டு செத்தான் அத்தான்'-என
குரல் கொடுத்து -67ல் கோட்டையைப்
பிடித்தார் அறிஞர் அண்ணா

கூலியுயர்வு கேட்டதிற்காக
கீழ்வெண்மணி  44
விவசாயத் தொழிலாளர்கள்
வெந்தனலில் வேகவிட்டனர் -68ல்

'வேல் கொண்டு இதயம் பாய்ச்சிய'
செய்தி என்று வேதனைப் பட்டார்-அண்ணா
நில உச்ச வரம்பு, உழுவனுக்கே
நில உரிமைச் சட்டம் விடியலானது!

இங்கிலாந்து எழுத்தாளர் ஷேக்ஸ்பியர்
எழுதிய,'மெர்ச்சண்ட் ஆப் வெனீஸ்' -என்ற
 நாடகத்தில்சைலாக்கின்’ கந்துவட்டி
 காவியம்  அறியாதோர் உண்டோ!

கந்துவட்டி  தடைச் சட்டம் பல
வண்ணத்தில் வந்தாலும்
காளான் போல அத்தைக்கு மீசை
முளைத்து  துளிர் விட்டதோ-என்று
நெல்லை சம்பவம் நினைக்கத்
தோன்ற வில்லையா உனக்கு !

வாங்கிய கடனை அடைக்க
நெல்லையை விட்டுகோவைக்கு
வேலைதேடி சென்றாலும்
விடுவதாக இல்லையே  கந்துவட்டி
கலங்கினான் இசக்கிமுத்து!

கந்துவட்டியர், காவல்துறையினர் மறுபுறம்
கோர பிடியினை நெருக்கையிலே-மதுரை
 பாண்டிய மன்னர் சபையில்
கண்ணகி நீதிகேட்டது போல
 நெல்லைக் கலைக்டர் அலுவலகம்
வந்தான் நீதி கேட்க

ஏழைக்கு அவ்வளவு சீக்கிரத்தில்
அனுமதி கிடைக்குமா
அந்தப் புற கலைக்டரை சந்திக்க
காத்திருந்தான் இசக்கிமுத்து
அலறியது கைபேசி-கடும் குரல்
எழுப்பிபேசியவர் கடமை தவறா 
காவல் அதிகாரி அதுவும்
கந்துவட்டிக்காரருக்கு ஆதரவாக

ஏழையின் குரல் எங்கே ஒலிக்கப் போகின்றது
போக்கற்றவனுக்கு புகலிடம் 'கிருஷ்னா' ஆயில் தான்
ரேஷன் கார்டுக்கு கிடைக்காத மண்ணெண்ணெய்
இசக்கிமுத்துவின் குடும்ப உயிரை பறிக்க உதவியது!

தீயின் கோர பிடியில் நான்கு உயிர்கள்
பலர் முன்னிலையில்கருகியபோது-
கருணை உள்ளங்கள் கையில்
கிடைத்ததை வைத்துஅணைக்க முற்பட்டனர்-
ஆனால் கையில் கேமராவுடன்
படம் பிடித்தனர் பரபரப்பு
செய்திபோட பத்திரிக்கையாளர்!

கண்டன குரல்கள் வந்தாலும்
'பத்திரிக்கை தர்மம்' என்றனர்
கல்நெஞ்சையும் கரைக்கும்
சம்பவம் கருகிய நிகழ்வு
தங்கள் வீட்டில் நடந்தால்
படம் பிடிப்பார்களா-என்று
கேள்விக் கணை எழுப்பாதோர்
இல்லையென்றே சொல்லலாம்.

 2010ம் ஆண்டு இதே நெல்லையில்
அமைச்சர் பெருமக்கள்பவனி வர
சீருடை பாதுகாப்புப் பணியில் இருந்த
உதவி ஆய்வாளர் முன் பகை காரணமாக
நடு ரோட்டில் வெட்டி சாய்த்தபோது
நாவறண்டு தண்ணீர் கேட்டவனுக்கு-எட்டி நின்று
தண்ணீர் வாயிலில் ஊற்றிய
மந்திரி பாதுகாவலனைக்
கண்டு வெகுண்டனர்-மக்கள்
அருகில் இருந்த மந்திரிகள், மாவட்ட ஆட்சியர்
கார்களில் காயம்பட்டவரை மருத்துவ மனைக்கு

அனுப்பாமல் காத்திருந்தனர் ஒருமணி நேரம்
அவசர ஊர்திக்காக கொடுங்காயம் பட்ட
உயிர் காப்பாற்ற முடிந்ததா- இல்லையே
அடுத்த வருடம் மந்திரி பதவியும் பறிபோனது
அதனையும் படம் பிடித்தனர் பத்திரிக்கையாளர்.

இசக்கிமுத்து குடும்ப சாவிற்கு காவல்துறையும்
கலெக்டரும் பல காரணங்கள் சொன்னாலும்
வழக்கமான சாக்குப் போக்குத் தான் என
அறியாதவர்களா மூடர்களா மக்கள்!

வரதட்சணை சாவுகள் இருந்தாலும்
தீப்பற்றிய பெண் தனக்குத் தானே
வைத்துக் கொண்டாள் என்று
சொல்லாத மாமியார், தொட்டு
தாழி கட்டிய கணவன் இல்லையா!

அதே போன்றுதான் ஆதிக்க
சக்தியின்சப்பைக் கட்டும் -சட்டம்
இனியும் ஒரு இருட்டறையா
எனி கேட்காதோர் உண்டா!

இசக்கிமுத்துவிற்கு ஏற்பட்ட
கொடுமை போன்று
இச்சமுதாயத்திற்கு ஏற்பட்டு
விடக் கூடாதென்று
1400 ஆண்டுகளுக்கு முன்பு
அண்ணலார் நபியவர்கள் 
வட்டி, இணைவைப்பதினை
விட பாவமானது என்றார்கள்
ஆனாலும் அந்த புரையோடிய
பழக்கம் இன்னும் 
நமது இஸ்லாமிய சமூதாயத்தில்
சமுதாயத்திலும் இருக்கின்றது என்று
2014ல் உயர் நீதிமன்றத்தில் இரு முஸ்லிம்
வியாபாரிகளிடையே வழக்கு நடந்தது
நடந்தது வியப்புத் தானே!

ஒரு காலத்தில் பள்ளப்பட்டி என்றாலே
வட்டித் தொழிலுக்கு பேர் போனது என்பர்
அந்த பழி நீக்கி வட்டியினை
ஒழித்த ஊர்பள்ளப்பட்டி என்று
இன்று விலங்க வில்லையா !

அதேபோன்று தான் இளையான்குடி-புதூர்
வியாபார பெருமக்கள் ஒரு காலத்தின் 
வட்டித் தொழில் வழக்கத்தினை -மாற்றி
இஸ்லாமிய சமூதாயத்தில் 
வட்டியில்லா ஊர் என்ற பதாகை
காணலாம் இன்று!

கந்து வட்டித் தொழிலை சட்டங்கள் கொண்டு
ஒழிக்கும் முயற்சி ஒருவேளை தோற்றுப் போகலாம்-ஆனால்
சமுதாய மக்கள் நினைத்தால் அரவே ஒழித்து விடலாம்
என்ற எடுத்துக் காட்டு பள்ளபட்டியும்-புதூரும்!

ஒன்று படுவோம்  வென்று காட்டுவோம்
கந்து வட்டிக் கொடுமை அறுத்தெறிவோம்
வரதட்சணைப்  பேயினை
முறம் கொண்டு விரட்டிடுவோமா