Sunday 16 December, 2018

மரணமும்-கடமையும்!



நோயாளிகளை அவர்கள் இருக்கும் இடம் சென்று பகைமையினை மறந்து நலம் விசாரிப்பதும், இறந்தவர்களுக்கு சிறந்தமுறையில் அடக்கம் செய்வதற்கும் இஸ்லாத்தில் பல ஹதீதுகள் இருக்கின்றன. அவர்களுக்கு இறைவன் பாவங்களை மன்னிக்கும் பரிசுகளை வழங்குகிறான் என்றும் கூறியிருப்பதினை நீங்கள் அறிவீர்கள். ஆனால் சிலர் அதற்கு மாறுபட்டு இருப்பதினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இருக்கின்றேன்.
            மூன்று சம்பவங்களை எடுத்துக் கூறி சிலர் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதினை விளக்கலாம் என எண்ணுகிறேன்.
1 ) சென்னை புதுத்தெருவில் வாழ்ந்த திண்டுக்கலைச் சார்ந்த நடைப் பயிற்சி  நண்பர் ஹசன்  இறந்து விட்டார் என்று நானும் எனது நண்பர் கீழக்கரை அமீரும் அங்கு சென்று மவுத்து சம்பந்தமாக அவருடைய மகனிடம் விசாரித்து விட்டு வெளியே ஜனாஸா எடுப்பதற்கு அமர்ந்திருந்தோம். அந்த இடத்திற்கு நான்கு கட்டிடத்திற்கு அப்பால் இருக்கும் இன்னொரு நடைப் பயிற்சி நண்பர் நூருல்  அமீன் அவர்களிடம் ஹசன் மவுத்து சம்பந்தமாக சொல்லி நாங்கள் அங்கே இருக்கின்றோம் என்றும் சொன்னோம். ஆனால் அவர் ஜனாஸா எடுத்து செம்புதாஸ் பள்ளியில் ஜனாஸா தொழுகின்றவரை வரவில்லை. மறுநாள் நடைப் பயிற்சிக்கு வந்தவரை ஏன் வரவில்லை என்று கேட்டோம், அதற்கு அவர், 'எனக்கு மவுத்தானவர் உடலைப் பார்த்தால் பயம்' என்றது எங்களை ஆச்சரிய பட வைத்தது.
2 ) நடைப்பயிற்சியில் ஈடுபடும் மற்றொரு நண்பர் கஸ்தூரியா என்பவரிடம் ஒரு நபர் வந்து 'நான் இன்னொரு நடைப் பயிற்சி நண்பர் தினகரன் தாயார் இறந்ததிற்கு சென்று விட்டு வருகிறேன்' என்று அப்பாவித் தனமாக சொல்லி விட்டு  கஸ்தூரியாவிடம் கைகொடுத்தார். அவர் உடனே கையினை எடுத்து விட்டு வீட்டிற்கு சென்றதும் மனைவியிடம் ஒரு வாலி தண்ணீர் வாங்கி நடைப் பயிற்சி உடையுடன் தலையில் ஊற்றிவிட்டு வீட்டுக்குள் சென்றதாக அவர் சொன்னது இன்னொரு ஆச்சரியமாக இருந்தது.
3 ) மூன்று வருடத்திற்கு முன்பு ஒரு அதிரையினைச் சார்ந்த நடைப் பயிற்சி பெரியவர் மவுத்தாகி விட்டார் என்று பார்ப்பதிற்காக நாங்கள் அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள பள்ளிக்கு சென்றோம். அவருடைய ஜனாஸா வைக்கப் பட்டு இருந்தது. அதனை சுற்றி பிரமுகர்கள் நின்றார்கள். நாங்கள் அடக்கம் எங்கே என்று வினவியதிற்கு அதிரையில் என்று சொன்னார்கள். நாங்கள் அரை மணி நேரம் நின்றோம். ஆனால் குழுப்பாட்டுவதிற்கான எந்த முயற்சியும் இல்லை. வினவியதிற்கு குழுப்பாட்டுவதிற்கு ஒருவரை வரவழைத்துள்ளோம்  அவர் இன்னும் வரவில்லை என்றது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
            இஸ்லாத்தில், 'ஒருவர் ஜனாஸாவினை குளிப்பாட்டி இறந்தவருடைய துர் வாடையை சுத்தம் செய்தால் அவருடைய பாவங்கள் அல்லாஹ்வால் மன்னிக்கப் படும்' என்ற ஹதீதுகள் உள்ளன.
 அது மட்டுமல்லாமல் எப்படி, யார் குளிப்பாட்ட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
1 ) ஆண் மையத்திற்கு ஆண்களும், பெண் மையத்திற்கு பெண்களும் குளிப்பாட்டி சுத்தம் செய்ய வேண்டும்.
2 ) ஆனால் கணவனுக்கோ, மனைவிக்கோ அல்லது குழந்தைக்கோ யாரும் செய்யலாம், "இபின் மஸ்ஜித்'.
3 )  அபூபக்ர்(ரழி) அவர்கள் மவுத்தின் போது அவருடைய மனைவி அஸ்மாவும், அவருடைய மகன் அப்துர் ரஹ்மானும் குளிப்பாட்டியதாக வரலாறு.
4 ) குளிப்பாடுவர் முதலில் தொழுகையினை கடைப் பிடிப்பவராக இருக்க வேண்டும்
5 ) ஜனாஸா குளிப்பாட்டிய பிறகு கை, கால் சுத்தம் செய்து கொள்ளலாம். ஆனால் குளிக்க வேண்டிய அவசியமில்லை.
6 ) ஜனாஸாவினை முதுகு பக்கம் பலகையில் இருக்கும் படியும், முகம் கிபிலா நோக்கியும் இருக்குமாறு கிடைத்த வேண்டும்.
7 ) ஒரு துணியை தொப்புலிருந்து முன்னங்கால் வரை போர்த்த வேண்டும்.
8 ) ஜனாஸா உடுத்தியிருந்த ஆடையினை களைய வேண்டும்.
9 ) ஒரு குவளையில் தண்ணீரை எடுத்து தலையிலிருந்து கால் வரை மூன்று முறை ஊற்ற வேண்டும்.
10 ) வயிற்றில் கையினை வைத்து கழிவு வெளியேறும் வரை அழுத்தம் கொடுக்க வேண்டும்.
11 ) ஆண் உறுப்பிலிருந்தும், ஆசன வாயிலிருந்தும் வெளியேறும் கழிவுகளை சுத்தம் செய்ய வேண்டும்.
12 ) முடியின் முடிகிச்சுகளை அவிழ்த்து சுத்தம் செய்ய வேண்டும்.
13 ) உடலை மூன்று முறை சோப்புப் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
14 ) கடைசியில் பல மண பொருள்கள் கொண்ட தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.
15) உடலில் ஒரு துணி கொண்டு துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
            16 ) அதன் பின்பு ஓலைப் பாயில் ஜனாஸாவினை எடுத்து அத்தர் கற்பூர பொடி தூவிய   கபன்  துணிமேல் வைத்து ஜனாஸாவினை மூடி கால், தலையினை துணிக் கயிறால் கட்டி சந்தூக்கில் வைத்து துவா ஓதி பள்ளிவாசலில் தொழுகை வைப்பதிற்காக தூக்கிச் செல்வார்கள்.

ஜனாஸா குழுப்பாட்டினை, கபன் இடுதல் போன்றவற்றினை    முன்பெல்லாம் அசரத் அவர்கள் செய்வார்கள்.ஆனால் அதனையே ௧௪.௧௨.2018 அன்று எனது மைத்துனர் முகமது ரபி அவர்களின் ஜனாஸாவிற்கு  இளையான்குடியில் மதினா ஸ்டார் கபடி குழுவினைச் சார்ந்த இளைஞர்கள் ஐந்து பேர்கள் சின்னத்தம்பி அம்பலம் பேரன் சித்திக் தலைமையில் ஒரு போர் படை போல நின்று குழுப்பாட்டி, கபனிட்டு, ஜனாஸா தொழுகைக்கு மேலப் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக எடுத்துச் சென்றதோடு மட்டுமல்லாமல், ஐ.என்.பி. அடக்க ஸ்தலத்திற்கு தோழில் தூக்கிச் சென்று நல்லடக்கமும் செய்ததோடு தாவாவும் செய்தது நான் மேலே குறிப்பிட்ட மூன்று சம்பவங்களிடமிருந்து வேறு பட்டு இருந்தது என்று பார்க்கும் போது அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
பல்வேறு இயக்கங்களின் சார்பாக ஜனாஸா எப்படி குளிப்பாட்டி, கபனிடுவது என்று  வகுப்புகள் எடுக்கப் படுகின்றன. அதனையே ஒவ்வொரு மதரஸாவிலும் வகுப்பு எடுத்தால் ஜனாஸாவிற்கு வேண்டிய கடமை செய்வதற்கு பிற்காலத்தில் பயப்பட மாட்டார்களல்லவா?
சென்னையில் இளையான்குடியினைச் சார்ந்தவர்கள் பல பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்தி மையத்து அடக்கம் செய்கிறார்கள். ஆனால் இளையான்குடியில் ஐ.என்.பிக்கு வேறு பள்ளிவாசல் இருந்தாலும் ஒற்றுமையாக மேலப்பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை வைத்துவிட்டு அடக்கம் செய்வதற்கு மட்டும் ஐ.என்.பி. பள்ளிவாசல், மேலப்பள்ளி அடக்கஸ்தலத்திற்கு எடுத்துச் செல்லுவது ஒற்றுமை என்ற கையினை பற்றிக் கொள்ளுங்கள் என்ற நபி வழி செயலாக இருக்குமல்லவா!

Tuesday 20 November, 2018

தேனிலும் மகத்துவம், தேனீயிலும் மருத்துவம்-இறைவன் படைப்பு!



(டாக்டர் ஏ.பீ. முகமது அலி,பிஎச், டி.ஐ.பீ.எஸ்(ஓ )

அல் குரான் அத்தியாயம் 16 அந் நஹ்லில் அல்லாஹ் மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து படைத்ததினையும், அவனை படைத்து அனாதையாக விடாது அவனுக்கு உணவு, உடையினை அவனே படைத்ததினையும், அவனுக்கு வாகன வசதிக்கு உபயோகப் படும் படி, குதிரை, கோவேறு கழுதைகளையும் படைத்தது பற்றியும்,  மனிதன் இறை தேடுவதற்கு சூரிய பகலையும், ஓய்வெடுப்பதிற்கு  இரவான சந்திரனையும் படைத்து, அதனை தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்து , கடலிலிருந்து உணவுப் பொருட்களையும், வித, விதமான முத்துப் போன்ற ஆபரணங்களையும் படைத்து, மலைகளை பூமி சமநிலையில் இருக்கும்படி ஊண்டியுள்ளதினையும் தெள்ளத் தெளிவாக கூறுகிறது என்பதினை சான்றோர் அறிவர். அத்துடன் தேனின் மகிமையையும் எடுத்தும் சொல்லியுள்ளது.
ஆனால் தேனீயின் மருத்துவக் குணத்தினை ஒரு சிலரே அறிந்திருப்பார்கள். நாம் சென்னை அபிராமி மால் போன்ற மால்களுக்கு செல்லும் போது  சிலர் தண்ணீர் தொட்டியில் மீன்கள் விளையாட காலை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பதினை காணலாம். கிராமங்களில் குளங்களில் குளிக்கும்போது மீன்கள் நமது கால்களை வருண்டும். அப்போது நாம் காலை எடுத்து விடுவோம். ஆனால் அதே மீன் தொட்டிகளில் மணிக்கணக்கில் காலை வைத்துக் கொண்டு மாலில் உட்கார்ந்து இருப்பார்கள். அதற்கு 'பிஷ்' தெராபி என்பார்கள். அந்த மீன்கள் தாய்லாந்திலிருந்து தருவிக்கப் பட்ட மீன்களாகும்.  அவ்வாறு செய்வது மூலம் கால்களில் சுரணை வருவதிற்கு  என்று சொல்வார்கள், 
வயதாகிவிட்டால் மூட்டு வலிகள், கால், கைகளில் சுரணை என்ற உணர்ச்சி மங்கி விடும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், அல்லது அமர்ந்திருப்பவர்களுக்கும் கால் மரத்துப் போகும். அதனை 'ருமாட்டிசம்' என்று அழைப்பார்கள். அது போன்ற ருமாட்டிசத்தினை குணமாக்க டாக்டர்களை அணுக வேண்டியிருக்கும். ஆனால் அதனையே ஒரு எகிப்திய நாட்டு சாதாரண மனிதர் தேனீ மூலம் குணமாக்கியுள்ளார் என்று அறியும்  போது ஆச்சரியமாக இல்லையா. விஷ பாம்புகளின் விஷம் உயிர் கொல்லி நோய்களை குணமாக்கும் என்று விஞ்ஞானப் பூர்வமாக சுத்திகரிக்கப் பட்டு பயன் பாட்டிற்கு கொண்டு வர பட்டுள்ளது. ஆனால் தேனீயை மனித உடலில் கடிக்க விடப் பட்டு வாத நோயினை அந்த மனிதர் குணமாக்கியது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தானே!
வசனம் 68 -69 ல்,  அல்லாஹ், தேனீக்கு வஹி மூலம், 'மலைகளிலும், மரங்களிலும் நீ கூடு கட்டிக்கொள், பல தரப்பட்ட பழங்களிலிருந்து சாற்றை உறிஞ்சிக் கொள், சீரான வழியில் சென்று கொண்டிரு' என்று கூறியும், மக்களுக்கு அறிவுறுத்தும்படி தேனின் வயிற்றிலிருந்து ஒரு வித திரவம்  வெளிப் படுகிறது(தேன்) தேனீ மூலம் மக்களுக்கு நிவாரணம் உண்டு என்று கூறுகின்றான்.
அந்த இறை வசனத்தினை எகிப்தில் வாழும் உமர் அப்துல் ஹாசன் என்பவர் தன்னுடைய ஆராய்ச்சியில்  அப்படி என்ன மருத்துவ குணம் தேனீயால் உள்ளது என்று செயலில்  இறங்கினார். அதன் பயனாக ஒரு தேனீ வளர்க்கும் பண்ணையினை ஆரம்பித்தார். தேனீக்களினை தினசரி பராமரித்தார். அப்படி பராமரிக்கும் அவர் கையில் தேனீ கடிப்பதினையும் அதனால் அவர் கையில் உள்ள இயற்கை வலி நீங்குவதையும் கண்டார். உடனே அவருடைய ஆராய்ச்சியினை கை, கால் மரமரத்துப் போனவர்களுக்கு தேனீக்களை கடிக்கவிட்டுப் பார்த்தார். என்னே ஆச்சரியம் கை, கால்களில் உணர்வு வந்தது. அதன் பின்னர் அவரை நோக்கி ருமாட்டிசம் நோயாளிகள் தேனீக்கள் போன்று அவரிடம் குவிய ஆரம்பித்து விட்டனர். அவர் இலவசமாகவும் சிகிச்சை அளிக்கின்றாராம். அந்த படம் இணைத்துள்ளேன்.
இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் அகிலத்தினை படைத்து, ஆறறிவு கொண்ட மனிதனையும் படைத்து அவன் ஆராய்ச்சி செய்வதற்காக அல் குரானையும் படைத்திருப்பதால் குரானை அர்த்தம் தெறிந்து ஓதினால் அகிலமும் வெல்லலாமல்லவா?


Tuesday 13 November, 2018

முதலாம் உலக யுத்தத்தின் தாக்கமும்-அதனால் ஏற்பட்ட ஆக்கப் பூர்வ பலனும்!


முதலாம் உலக யுத்தத்தின் தாக்கமும்- பலனும்!
( டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச். டி, ஐ.பீ. எஸ்(ஓ)

11.11.2018 ஞாயிறு அன்று பாரிஸ் நகரில் உலக தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி முதலாம் உலகப் போர் முடிவுற்றதினை நினைவுபடுத்தும் விதமாக விழா எடுத்தது அனைவருக்கும் தெரியும். உலக முதலாம் யுத்தம் 1914 முதல் 1918 வரை நடந்தது. அந்த யுத்தத்தில் ஒண்றரைக் கோடி மக்கள்- வீரர்கள் உட்பட பலரும் கொல்லப் பட்டார்கள், மற்றும் இரண்டு கோடியே முப்பது லட்சம் பேர்கள் படுங்காயம் அடைந்தார்கள். அந்த யுத்தம் 11.11 .1918 ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் வட பாரிஸ் நகரில்  பெர்டினாண்ட் ரயிலில் கையெழுத்தான ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. பிரான்ஸ் கமாண்டர் பெர்டினாண்ட் ஜெர்மன் நாடு மறுபடியும் போர் தொடங்காதவாறு மிகக் கடுமையான கட்டுப் பாடு கொண்ட ஒப்பந்தம் கையெழுத்திடச் செய்தார். ஆனால் போர் நின்றதா என்றால் இல்லை. காலச்சக்கரம் சுழலும் போது அதே பிரான்ஸ் நாட்டினைப் பழிவாங்க ஜெர்மன் அதிபர் ஹிட்லர் 1940 ம் ஆண்டு அதே பெர்டினாண்ட் ரயிலில் போர் நிறுத்த ஒப்பந்தம் பிரான்ஸை செய்ய வைத்த வரலாறும்  உண்டு. இது ஒரு பக்கம் இருந்தாலும் முதலாம் உலகப் போரின் மூலம் பல முக்கியமான சமுதாய நன்மைகளும் உலகிற்கு  கிடைத்திருக்கின்றது. அவை எவை என்று நாம் காண்போம்:
1 ) உலகில் பகல் நேர வேலையினைக் குறைத்து எரிபொருளினை மிச்சமிடும் செயல் முறையினை முதல் முதலில் ஆஸ்ட்ரோ-ஹங்கேரியன், பிறகு ஜெர்மன் மற்றும் கூட்டுப் படை நாடுகள்  கடைப் பிடித்தது. 
2 )  பத்தொன்பதாம் நூற்றாண்டில் டைம் பீஸ்கள் நேரத்தினை அறிவதற்காக உபயோகப் பட்டாலும், முதல் உலகப் போரின் போதுதான் வீரர்கள் கைகளில் அணிந்து நேரம் பார்க்கும் விதமாக ரிஸ்ட் வாட்ச்கள் வந்தன. போர் முடிந்ததும் அவைகள் மெரி கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பரிசுப் பொருளாகவும் அளிக்கப் பட்டது.

3 ) ரத்த வங்கி பற்றி 1600 ஆண்டே அறிந்திருந்தாலும் , அதன் செயல் பாடு முதல் உலகப் போரின் பயனாக உலகிற்கு தெரிந்தது. அப்போது மனிதனுக்கு மனிதன் ஒரே நேரத்தில் இரத்தம் மாற்றும் முறை அறிமுகப் படுத்தும் பழக்கம் ஏற்பட்டது. முதலாம் உலகப் போரில் காயம் படும் வீரர்களுக்கு இரத்தம் அளிப்பதற்காக அமெரிக்கா நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி நிபுணர் ‘கேப்டன் ஆஸ்வேல்டு ராபர்ட்சன்’   1917 ம் ஆண்டு இரத்த சேமிப்பு வங்கியினை நிறுவி இன்று உலகம் முழுவதும்  பிரபலமாகியுள்ளது.
4 ) முதலாம் உலகப் போர் ஹாலிவுட் அமெரிக்காவில் அமைந்து யுத்த வீர தீர செயல்களை தத்துருவமாக படம் பிடித்துக் காட்டும் அளவிற்கு பிரபலமானது. ஆஸ்க்கார் முதல் விருதினை 'விங்ஸ்' என்ற யுத்த திரைப் படம் வென்றது ஒரு கதை.
5 ) ஒவ்வொரு நாட்டின் வெட்ப தட்ப சூழ்நிலைக் கேட்ப மேலுடைகள் ‘சார்ள்ஸ் மெஷின்டோஸ்’ என்ற விஞ்ஞானி கண்டு பிடித்தார். அதன் மூலம் கைத்துப்பாக்கி, வரைபடம், தேவையான பொருள்கள் கொண்டு செல்லும் விதமாகவும் அவைகள் அமைந்தன.
6 ) அமரிக்க ராணுவ வீரர்களின் சட்டைகளில்  பாக்கெட் இல்லாததினால் பணம், பொருள்கள் சட்டைகளில் எடுத்துச் செல்லும் அளவிற்கு முதல், முதலாக ஜிப்புகள் கொண்ட சட்டைப் பைகள் தைக்கப் பட்டன.அதன் மூலம் ஜிப்புகள் உபயோகம் உலகம் முழுவதும் பரவியது.
7 ) உலகப் போரில் பெண்கள் உதவி செய்தது மூலம் பெண்களுக்கான ஓட்டுரிமையினை அடைய மேற்கு அமெரிக்கா முழுவதும் 1917 ம் ஆண்டு அமல் படுத்தப் பட்டது. பிற்காலத்தில் அமெரிக்கா ஜனாதிபதி உட்ரா வில்சன் காலத்தில் 1920 ம் ஆண்டு அமெரிக்கா அரசியல் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி அமெரிக்கா முழுவதும் பெண்களுக்கான ஓட்டுரிமை அமல் படுத்தப் பட்டது.
8 ) யுத்தத்தில் காயம் பட்டவர்களுக்கு மருத்துவ உதவி அளித்த மகளிர் நர்ஸுகள் மாதவிடாய் காலத்தில் ‘கிம்பெர்லி கிளார்க்’ கம்பனி தயாரித்த மரத்தூள்களினால் செய்யப் பட்ட சானிட்டரி நாப்கின்களை  உபயோகித்தனர். அதுவே பிற்காலத்தில் பஞ்சுனால் தயாரிக்கப் பட்ட சானிட்டரி நாப்கின்கள் உருவாக வழிவகுத்தது. கிராமங்களில் இன்னும் பெண்கள் கிழிந்த துணிகளை நாப்கின்களாக பயன் படுத்துவதை இங்கு காணலாம்.
9 ) போரில் குண்டுக்காயங்கள் பட்டு சிதைந்த உடலில் அவைகள் தெரியாத படி  தையல் போடும் பிளாஸ்டிக் தையல் முறையினை முதன் முதலில் ஆங்கிலேய ராணுவ சர்ஜன் ஹெரால்டு கில்லிஸ் கண்டு பிடித்து 11000 வீரர்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கின்னஸ் சாதனை புரிந்தார். அதுவே பிற்காலத்தில் முன்னோடியாக அமைந்தது.
11 ) ஜெர்மன் ராணுவத்தினர் மாமிச உணவு கெடாமல் இருப்பதிற்காக ‘மாயோர் ஆடினார்’ என்பவர் சோயா பவுடரை தடவிய மாமிச துண்டுகள் சிறிதாக(சாசேஜ்) வெட்டி பதப்படுத்தி பிற்காலத்தில் போர்க்களத்தில் சூடு பண்ணி சாப்பிடும் முறையினை கண்டு பிடித்து அதற்கு காப்புரிமையும் பெற்றார்.
12 ) உலக நாடுகள் சுற்றுலாவினை ஊக்குவிக்க கூட்டு  நாடுகள் சபையின் வழிகோட்டிற்கு   இணங்க 1920 முதல் ஒரே விதமான பாஸ்போர்ட் என்ற கடவு சீட்டு அந்தந்த நாட்டின் பெயருடன் வழங்க வழி வகுத்தது.

உலக யுத்தங்கள் பல அழிவுகளை ஏற்படுத்தினாலும், பற்பல நன்மைகளைகளுக்கும் முன்னோடியாக அமைந்திருந்தது என்றால் ஏற்புடையது தானே!




Saturday 13 October, 2018

கைபேசிகளின் நன்மை, தீமைகள்!



1 ) அமெரிக்காவில் பதினோரு வருட ஆய்வில், எமெர்சென்சி அவசர எண் (911 ) அழைப்புகளில் கைபேசி அழைப்புகளால் வந்த செய்திகள் மூலம் 137 உயிர்கள் காப்பாற்றப் பட்டுள்ளன. சமீபத்திய ஒரு செய்தி என்னவென்றால், அரேபிய பத்திரிகையாளரும், அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவரும்,  அரேபிய தற்போதைய இளவரசரின் கொள்கைகளை விமரிசத்தவருமான, 'கசோகி' துருக்கி வந்திருந்தபோது அவரை சமாதானமாக பேச வேண்டும் என்று அரேபிய தூதரக அதிகாரிகள் அழைத்துள்ளனர். அவர்களின்  கோரிக்கையேற்று நல்லெண்ணத்துடன் அங்கு சென்றுள்ளார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை. துருக்கி அரசு அவரை அரேபிய தூதகரத்தில் வைத்து கொன்றிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளது. அது எப்படி தெரிந்தது என்றால் பத்திரிக்கையாளர் கசோகி கையில் கட்டியிருந்த ஸ்மார்ட் கடிகாரத்தினை தனது காரில் வைத்துவிட்டுச் சென்ற கைபேசியுடன் இணைத்திருந்தாராம். அரேபிய தூதரகத்தில் நடந்ததினை அவர் கையில் கட்டியிருந்த  கடிகாரத்தில் பதிவான உரையாடல் செல் போனில் பதிவாகி யிருந்ததின் அடிப்படையில் துருக்கி அரசு குற்றம் சுமத்தியுள்ளது. இதுபோன்ற எண்ணற்ற சமபாவங்கள் தெரிந்து கொள்ள மிகவும் ஏதுவாக கைபேசி அமைந்துள்ளது.

2) அதிக எடை உள்ளவர்கள் தங்கள் எடையினைக் குறைக்க தாங்கள் சாப்பிடும் உணவு அளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தங்களின் ஸ்மார்ட் போன் அப்பிளிக்கேஷன் முறைப் படி சாப்பிட்டு உடம்பின் எடையினை கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்ளலாம். அதேபோன்று விளையாட்டு வீரர்கள் தங்களுடைய விளையாட்டின் வேகத்தினையும், நடை பயிற்சியில் ஈடுபடுபவர்கள் தங்கள் நடையில் எத்தனை கலோரி செலவழித்துள்ளோம் என்றும் தெரிந்து கொள்ள ஏதுவாகும்.

3) இடத்தினை தெரிந்து கொள்ளும் நேவிகேஷன் மூலம் நாம் செல்லும் இடத்தினை துல்லிதமாக தெரிந்து கொள்ளலாம். வயது முதியோரின் பயன்பாட்டிற்கு இது இன்றியமையாததாக உள்ளது. ஏனென்றால் அவர்களுக்கு ஞாபக மறதி அதிகம்.

4) மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய மொழிபெயர்ப்புகள், கணிதம், வரைபடம், மாடல் வினாத்தாள் ஆகியவற்றினை காப்பி செய்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் சிறுவர்கள் வீடியோ கேம்ஸ் விளையாடுவது மூலம் அவர்களுடைய மூளை செயல் சிறப்பாக இயங்க வழி வகுக்கும்.

5) செல் போனில் படமெடுப்பது சில சமயங்களில் குற்ற சம்பவங்களை தெரிந்து கொள்ளலாம். சமீபத்தில் தமிழ் நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவம். பெங்களூரில் வேலை பார்க்கும் ஒரு தச்சர்  தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவருடைய மூன்று நண்பர்களுக்கு மது விருந்து ஒரு தோட்டத்தில் கொடுத்துள்ளார். உற்சாக மிகுதியில் அவருடைய நண்பர்கள் அருகில் உள்ள சுவர் இல்லா கிணற்றில் குளிக்கலாம் எனக் கூறியுள்ளனர். ஆனால் தச்சர்  தனக்கு நீந்த தெரியாது என்று மறுத்துள்ளார். ஆனால் மது அருந்திய அவரின் நண்பர்கள் அவரை விடவில்லை. இருவர் அவரை தூக்கியும், மற்றொருவர் அவரின் செல் போனில் வீடியோ எடுத்தும் தூக்கி கிணற்றில் விளையாட்டாக போட்டுள்ளார்கள். மற்ற மூவரும் குளித்து, கும்மாளம் போட்டு கரையேறி வீட்டுக்கு சென்றபோது தான் தங்களது பெங்களூர் நண்பர் வர வில்லை என்பதனை உணர்ந்துள்ளனர். உடனே ஊர்காரர்களுடன் சேர்ந்து அவர்களும் கிணற்றுக்குள் தேடிய போது தச்சர்  பிணம் கிடைத்தது. இந்த செயல் அத்தனையும் இறந்தவர் செல்போனில் பதிவாகியிருப்பதினை வைத்து அந்த மூவரையும் காவல் துறையினர் கைது செய்திருக்கின்றார்கள்.

6) கைபேசியின் குறைந்த அலைஅளவு, பிரகாசமான நீல நிற விளக்கு உங்கள் கண்ணை பகல் நேரத்தில் மயக்கும், இரவு நேரத்தில் அதனை உபயோகிப்பதால் தூக்கமின்மை ஏற்படும். அதற்காக தூங்குவதற்கு அரை மணித்துளிகள் முன்பு செல் உபயோகிப்பதினை நிறுத்தி விடவேண்டும். இரவில் கைபேசி அழைப்புகளால் குடும்பத்தில் விரிசல் ஏற்படும்.

7) கைபேசிகள் தற்போது எல்லையில்லா இணைப்புகளுடன் வழங்கப் படுவதால் இந்தியர் ஒரு நாளைக்கு 200 மணித்துளிகள் செலவழிப்பதாக சொல்லப் படுகிறது. அஹமதாபாத் நகர் எஸ்.பி.பி. பிசியோதெரபி நிறுவனம் நடத்திய ஆய்வின் படி அதிக நேரம் செல் போனில் தகவல் நடவடிக்கையில் ஈடுபட்டால் கழுத்து வலி  ஏற்படும். அத்துடன் பெரு விரல் மற்றும் ஆள் காட்டி விரல் அசைவு பாதிக்கும்.

8) அமரிக்கா அரிசோனா மாநில பல்கலைக் கழக மைக்ரோ பயாலஜி டிபார்ட்மெண்ட் அடத்திய ஆய்வில் நம் கழிவறையில் உள்ள கிரிமிகளைவிட செல்போனில் 10 மடங்கு அதிகமான கிருமிகள் இருக்கின்றன என்று கூறுகின்றது. ஆகவே செல் போனை பாத்ரூம், கழிவறை ஆகியவற்றில் உபயோகிப்பதினை விட்டு விடவும். அத்துடன் பாக்டீரியா எதிர்ப்பு காகிதங்களை, துணிகளை வைத்து துடைத்து உபயோகிக்க வேண்டும்.

9) செல் போன் உபயோகித்து பேசும் போது போனை காதருகில் வைத்து பேசும் போது கதிர் அலைகள் தாக்கி மூளையை பாதிக்கும். ஆகவே போனை தள்ளி வைத்தோ அல்லது ஸ்பீக்கரிலோ பேசவும்.

10) சென்னை மெடிக்கல் மற்றும் திருச்சி மெடிக்கல் காலேஜ் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் நடத்திய ஆய்வில் கண் எடுக்காமல் தொடர்ந்து செல்போன் திரையினை நோக்கினால் கண்ணுக்கு  தொந்தரவு ஏற்படும். அதற்காக செல் போனை விட்டு சிறிது கண்ணை வேறு பக்கம் திருப்பியோ அல்லது கண்ணை சில நேரம் சிமிட்டியோ சமிக்கை செய்தால் அல்லது திரை நீலத்தினை அதிக படுத்தினால் கண்ணை போது காக்கலாம்.

11) வைத்த கண் எடுக்காமல் செல் போனை பார்த்தோ அல்லது வாகனத்தினை ஓட்டும்போது பேசிக் கொண்டோ செல்லும்போது சாலைகளின் பள்ளங்கள் மூலம் ஆபத்து, மற்றும் சாலை விபத்து ஏற்படும். சில சமயங்களில் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் பணமோ அல்லது பொருளோ கீழே கிடந்தாலும் நீங்கள் செல்போனில் மூழ்கி இருக்கும் போது உங்களுக்கு கிடைக்காமல் போய்விடும். உங்கள் குழந்தைகளை நீங்கள் தொடர்ந்து கூட்டத்தில், மார்க்கெட்டில் கைபேசியில் பேசிக்கொண்டே இருப்பது மூலம் அவர்கள் தொலைந்து போவதற்கு வழி வகுக்கும்.

 12 )   செலபோன் அதிகமாக உபயோகிக்கும் இளைஞர்கள், மாணவ மாணவிகள், குடும்ப பெண்கள் வீணான தொடர்புகள்  பல செயலிகள்   மூலம் ஏற்பட்டு கற்பினை இழப்பாததுடன், குடும்ப வாழ்வினையும், வீணான பழிச்சொல்லையும் சந்திக்க வேண்டியுள்ளது என்பது மறுக்க முடியாது.

13 ) புது மோகமான 'செல்பீ' எடுப்பது மூலம் ஆபத்தான கடல்கள், மலைகள், பள்ளத்தாக்குகள் போன்றவற்றில் விழுந்து உயிர் விடும் செய்திகளை நாள் தோறும் படித்துக் கொண்டு உள்ளோமல்லவா? 
     ஆகவே செல்போன் உபயோகிக்கும் அனைவரும் நல்லது, கெட்டது எது என்று அறிந்து நடப்பதுடன், தங்கள் குடும்பத்தினருக்கும் அறிவுரை வழங்க வேண்டும்.

Wednesday 3 October, 2018

அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த தீர்ப்புகள்!


             
            (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச். டி. ஐ.பீ.எஸ்(ஓ)

2018 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கடைசி வாரங்களில் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி அவர்கள் ஓய்வு பெறுவதினை முன்னிட்டு அவர் தலைமையில் விசாரித்த வழக்குகளின் தீர்ப்புகள் தான் இன்றைய இந்திய மக்கள், பத்திரிக்கை, தொலைக்காட்சி நிறுவனங்களின் பரபரப்பான பட்டி,தொட்டிகளில் கூட பேசப் படும் தீர்ப்புகளாக அமைந்திருப்பதினை அனைவரும் அறிவோம்!
            முதன்மையாக அயோத்தியில் பாபரி மஸ்ஜித் இடிக்கப் பட்ட இடம் சம்பந்தமாக 1994 ல் குறிப்பட்ட தீர்ப்பினை ஒட்டியுள்ளது. அதாவது முஸ்லிம்கள் தொழுவதற்கு பள்ளிவாசல் அவசியமா என்ற கேள்விக்கு அவசியமில்லை என்ற தீர்ப்புக்கு மேல்முறையீடு சம்பந்தப் பட்டது. பள்ளிவாசல் அவசியமில்லை என்று இரண்டு நீதிபதிகளும், மத சம்பந்தமான தீர்ப்புகளை  சொல்லவேண்டியது ஐந்து அல்லது ஏழு நீதிபதிகளைக் கொண்ட சபை தான் முடிவு செய்யவேண்டும் என்று நீதிபதி நஷீர் அவர்களும் கூறியுள்ளனர்.
            நீதிபதி நஷீர் அவர்கள் கூறியுள்ள இந்திய அரசியலமைப்பு சட்டம், 1950 படி, உட்பிரிவு 25 26 ,27 ல்  ஒவ்வொரு குடி மகனும் சுதந்திரமாக தங்கு தடையின்றி அவரவர் சமயத்தினை வெளிப்படையாக மேற்கொள்ளுதல், மேலாண்மை செய்வதற்கு உரிமை உண்டு என்ற சரத்துக்கள் உள்ளடக்கியதாகும். எந்த தீர்ப்பும் அரசியல் சாசனத்திற்கு மாறுபட்டு இருக்குமேயானால் அதனை தீர்மானிப்பது ஐந்து அல்லது ஏழு  நீதிபதிகளைக் கொண்ட சபை தான் முடிவு செய்ய வேண்டும் என்ற நியதி!
            ஒரு விவாதத்திற்காக முஸ்லிம்களுக்கு தொழுவதற்கு பள்ளி வாசல் தேவையில்லை என்றால், அதே வாதம்,,வேப்ப, அரசமர,  குளக்கரைகள்  தோறும் வைத்தும், ரோடுகளினை ஆக்கிரமித்து எழுப்பப் பட்டிருக்கும்   இந்து கோயில்கள் தேவையில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?
            பழங்காலத்தில் இஸ்லாத்தில் இறை இல்லமான மக்கமா  நகர் அல் ஹரமில் பள்ளி எழுப்பி வழிபட்டு வந்த மார்க்கம் இஸ்லாம் ஆகும் என்பதினை யாரும் மறுக்க முடியாது. ஏன் ஆரம்ப கால திண்ணையில் போதித்த குருகுலம் பின்பு பள்ளிக்கூடமான வரலாறு இங்கு இல்லையா? அப்படி இருக்கும்போது எப்படி இஸ்லாமியர் வழிபட பள்ளிவாசல் தேவையில்லை என்ற புது வாதத்தினை ஏற்க முடியும்?
            அடுத்த தீர்ப்பு கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வது சம்பந்தப் பட்டது. சபரிமலைக்கு செல்பவர்கள் பெரிய காட்டுப்பாதை, சிறிய பாதை என்ற இரு பாதைகளில் விரதம்  மேற்கொண்டு செல்வர். கடைசியாக பதினெட்டாம்படி என்று குறுகிய பாதையில் சென்று அய்யப்பனை தரிசனம் செய்ய வேண்டும். சாமி தரிசனம் செய்வதற்கு ஆண்களும், பத்து வயது முதல் ஐம்பது வரை உள்ள பெண்கள் தடுக்கப் பட்டும், அதற்கு மேல் உள்ள பெண்கள் அனுமதி செய்யப் பட்டும் வரும் முறை பழக்கத்தில் உள்ளது. ஏன் அவ்வாறு பெண்கள் ஐம்பது வயதினை தாண்டிய பெண்கள் அனுமதிக்கப் பட்டார்கள் என்றால், பெண்கள் மாத விடாய் காலங்களில் தரிசிப்பதினை தவிர்க்கவும். பெண்களினால் சில அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்கு தானே ஒழிய அவர்களை முழுவது மாக புறக்கணிக்கவில்லை. இஸ்லாத்தில் கூட மாதவிடாய் காலங்களில் தொழுகை கூடாது என்று பெண்களுக்கு அறிவுரை கூறப் பட்டுள்ளது. இதனை எதிர்த்துத் தான் பெண் உரிமை இயக்கம் சார்பில் ஒரு வழக்கு உச்ச நீதி மன்றத்தில் தொடர பட்டது.
            அவ்வாறு தொடரப்பட்ட வழக்கில் ஐயப்ப கோவிலுக்கு பெண்களும் வித்தியாசமில்லாமல் செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு மாறாக அதே இருக்கையில் அமர்ந்த பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா மத சடங்குகளினை நீதிமன்றங்கள் நிர்ணயிக்க முடியாது என்று ஆணித் தரமாக கூறியுள்ளார். அதனை வலியுறுத்துவதுபோல 1994 -1995 ஆண்டு பத்தானத்திட்ட  பகுதியில் பணியாற்றிய பெண் கலெக்டர் வத்சலா குமாரி கூறியிருப்பதாவது, 'ஐயப்ப கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செய்துள்ள வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட அங்கே கேரளா உயர் மன்ற ஆணையுடன் சென்றதாகவும், ஆனால் மதக் கோட்பாடுகளுக்கு கட்டுப் பட்டு பதினெட்டாம் படி ஏறவில்லை’ என்று சொல்லியுள்ளார். அவர் நினைத்திருந்தால் கலைக்டருக்குள்ள அதிகாரத்தினைப் பயன் படுத்தி பதினெட்டாம் படி ஏறி சாமியினை தரிசித்திருக்க முடியும். ஆனால் பெண்ணாக இருந்தாலும் மத கோட்பாடுகளுக்கு மதிப்பளித்து அந்த செயலை செய்யவில்லை.
            அயோத்தி விவகாரத்தில் நீதிபதி நஷீர்  அவர்கள் முஸ்லிம்களுக்கு தொழ பள்ளிவாசல் அவசியமில்லை என்ற தீர்ப்பிற்கு எதிரான மாறுபட்ட தீர்ப்பும், சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பினுக்கு எதிரான நீதிபதி இந்து மல்கோத்ரா எழுதிய தீர்ப்பும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மத. சமய கோட்பாடுகளின் மாண்பினை வலியுறுத்தவில்லையா?  தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள், 'யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னேயென்று'. அயோத்தியில் பள்ளிவாசல் இடித்து விட்டு பள்ளிவாசல் முஸ்லீம் தொழுவதற்கு முக்கியமில்லை என்று சொல்லிவிட்டு, வருகின்ற மாதக் கடைசியில் அயோத்தி இட உரிமை பற்றி முடிவு செய்யப் படும் என்று கூறுவது, கடைசியாக முஸ்லிம்கள் தொழ பள்ளிவாசல் அவசியமில்லை என்று கூறி அந்த இடத்தினை ராமர் கோவில் கட்டும் ஒரு சதி செயலாக உங்களுக்குத் தோன்றவில்லையா. அதன் முன்னோடி தான் அக்டோபர் மாத முடிவில் ராமர் கோவில் கட்டப் படும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்புச் செய்தி கூறுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆகவே தான் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்றால் சரியா?
            அடுத்த அற்புதமான மான தீர்ப்பு ஓரினச் சேர்க்கை  ஈடுபடுவது குற்றமில்லை என்பது. இந்திய தண்டனை சட்டம் 377 என்ன கூறுகின்றது என்றால் இயற்கைக்கு மாறாக ஆணோ , பெண்ணோ கலவியில் ஈடுபடுவது குற்றம், அவ்வாறு குற்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனையோ அல்லது பத்து வருடம் மற்றும் அபராதமும் விதிக்கப் படும் என்று கூறுகின்றது. நாமெல்லாம் சமுதாயம் என்ற அமைப்புக்குள் சுழன்று கொண்டிருக்கின்றோம். அதில் தனி மனிதன், குடும்பம், சமுதாயம் என்ற பிரிவுகளைக் கொண்டது. எப்படி சூரியக் குடும்பம் ஈர்ப்பு சக்தியால் ஒன்றைவிட்டு ஒன்று  விலகிச் செல்லவில்லையோ  அதேபோன்று தான் குடும்பமும் சுழன்று கொண்டுள்ளது. ஒன்றை விட்டு ஒன்று விலகும்போது அது அழிவினை தேடித் தரும்.
            ஒரு ஆணோ , பெண்ணோ கலவியில் ஈடுபடுவதற்கு இறைவனால் படைக்கப் பட்ட நேரான வழிகள் இருக்கும்போது, குறுக்கு வழியில் குறுக்கு சால் ஓட்டும் முயற்சியாக நீதிபதிகளின் தீர்ப்பு அமையாதா? ஒரு நிமிடம் மலக் கழிவுகளை வெளியே தள்ளும் உறுப்பினை நினைத்துப் பாருங்கள். அதில் புணர்வதில்லை மனித இனம் விரும்புமா? மிருகங்கள் செய்யக் கூடிய செய்யக்கூடிய கலவிகளை மனித இனம் செய்யலாமா? ஆணுக்குத் துணை பெண் என்று இருக்கும்போது, ஆண் நெருப்பினைப் போன்றும், பெண் குளிர் நிலவு போன்றும், ஆண் பெண்ணிடம் அமைதி காண்கின்றான் என்று பகல் இரவினை எடுத்துக் காட்டாக கூறுவது நியதி இல்லையா?
            இயற்கைக்கு மாறாக வன் புணர்ச்சியில் ஈடுபடலாம் என்பது இயற்கைக்கு மாறுபட்டது அல்லவா? இந்த சட்டத்தினை எடுத்து விடுவது மூலம் ஆண் பாலகர்கள், மாணவர்கள், நண்பர்கள் வன் புணர்ச்சியில் தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ, புரியாமலோ, நடப்பதோ மட்டுமல்லாமல், ஆணோ, பெண்ணோ தனக்கு புணர்வில் ஈடுபட கணவன் அல்லது மனைவி தேவையில்லை ஆண் நண்பர் அல்லது பெண் நண்பர் போதும் என்ற மேலை நாட்டு கலாச்சரத்தினை இந்தியாவின் பாரம்பரியத்தில் புகுத்தலாமா? ஆப்பிரிக்க மக்கள் அதேபோன்று புணர்வில் ஈடு பட்டதால் குணப்படுத்த முடியாத எய்ட்ஸ் என்ற நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் அறிக்கை அளிக்கவில்லையா? இதனை ஏன் நீதிபதிகள் கவனத்தில் கொள்ளவில்லை என்பது ஆச்சரியமாக இல்லையா? தமிழ் நாட்டு கிராமங்களில் விவசாயம், தறி நெய்தல் போன்ற வேலைகளில் ஈடுபடும் வடமாநில இளைஞர்கள் தங்களது உணர்வை தீர்த்துக் கொள்ள ஆடு, மாடு, கோழி போன்ற இனங்களை நாடுகின்றார்கள் என்ற செய்தி வந்த வண்ணம் தானே இருக்கின்றது. இனி அவைகளை எந்த சட்டத்தின் மூலம் தடுப்பது என்பது போன்ற கேள்விக்கு பிராணிகள் நல சங்கம் பதில் அளிக்குமா?
            அடுத்த தீர்ப்பு கள்ள உறவு குற்றமில்லை என்பதாகும். இந்திய தண்டனைச் சட்டம் 497  படி ஒரு மனிதன் அம்மி  மிதித்து அருந்ததி பார்த்து  ஒரு பெண்ணை மனைவியாக ஏற்றுக் கொண்ட பின்பு அடுத்த பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டால் அவருக்கு ஐந்து வருட சிறை தண்டனையோ, அல்லது அபராதமோ அல்லது இரண்டும்  சேர்த்தோ வழங்கப் படும். அந்த சட்டம் தான் தற்போது செல்லாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது. நீதிபதிகள் சொல்லும் காரணம் என்னவென்றால், 'அரசியல் சட்டப்படி மனிதனுக்கு உள்ள உரிமையினை முற்போக்குடன் நோக்க வேண்டும் என்பது தான்.   
            இந்த தீர்ப்பிற்கு முக நூலில் ஒருவர் கடுமையாக, 'தீர்ப்பு எழுதிய நீதிபதிகள் தங்கள் மனைவி, மகள்கள் அல்லது அவர்கள் கணவர்கள் இது போன்ற கூட கலவியலில் ஈடுபட அனுமதிப்பார்கள் என்று சில கணம் யோசித்திருந்தார்கள் என்றால் இதுபோன்ற தீர்ப்பினை எழுதி இருக்க மாட்டார்கள்' என்பது தான். நான் முன்பு எடுத்துக் கூறியபடி குடும்ப வாழ்வு, திருமண பந்தம் ஒரு சூரிய குடும்பத்தில் சுழலும் கிரகங்கள் போன்றது. அதனை விட்டு யார் விலகுகின்றார்களோ அவர்கள் பந்த, பாசத்தினை விட்டும் விலகி விடுகின்றார்கள் என்று அர்த்தம் தானே. மேலை நாட்டு கலாச்சாரத்தின் படி சாட்டிங், டேட்டிங் செய்து ஒன்றாக வாழ்ந்து குழந்தைகள் பெற்று பின்பு திருமணம் செய்யக்கூடிய சமுதாய அமைப்பினைக் கொண்டதா இந்திய கலாச்சாரம்? அல்லது பிடிக்காவிட்டால் பிரிந்து விடுவது என்றால் அந்த குழந்தைகளின் நிலை என்ன என்று யோசிக்க வேண்டாமா, வேற்று பெண்ணுடன் கலவியில் ஈடுபட்டு கர்ப்பமானாள் அந்த குழந்தை பற்றி சண்டை சச்சரவிற்கு, வழக்குகளுக்கு  வழி வகுக்காதா?
ஓசிப் பிரியாணிக்காக தன் உடலை விற்றது மட்டுமல்லாமல், இரண்டு அழகு தேவைதைகளான பிஞ்சு பாலகர்களை விஷம் வைத்து கொன்று விட்டு, ஓடி ஓடி குடும்பத்திற்காக உழைத்த கணவனையே கொல்ல எத்தனித்த கேளம்பாக்கம் அபிராமி கதைபோல பல குடும்பத்தில் நடந்த சம்பவங்கள்  படித்த உயர் பதவியுள்ள நீதிபதிகள் செய்யலாமா?
இந்திய தண்டனைச் சட்டம் 1860  ல் எழுதிய ஆங்கிலேயர் இந்திய கலாச்சாரத்தினை நன்கு புரிந்து தானே எழுதி உள்ளார்கள். அதனை பின் தொடர்ந்து வந்த இந்திய குடியரசில் ஆட்சி செய்த தலைவர்கள் என்ன பிற்போக்கு வாதிகளா அதனை மாற்றாமல் இருந்ததற்கு அல்லது இதற்கு முன்பு பணியாற்றிய நீதிபதிகள் அறிவீலிகளா என்று யோசித்துப் பார்க்க வேண்டாமா? இப்போது மட்டும் இந்திய தண்டனை சட்டம் 377 , 497 ஆகியவைகளை மாற்றியதிற்கு அப்படி என்ன அவசரம்.
நமது சமுதாயம் எப்படி கட்டுக் கோப்பானது என்பதினை சமீபத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் மூலம் விளக்கலாம் என்று நினைக்கின்றேன். தூத்துக்குடி மாவட்டம் சார்ந்த ஒருவர் குடும்பத்துடன் கேரளா திருவனந்தபுரத்தில் மளிகைக்கு கடை நடத்தி வருகின்றார். அவர் ஒரு நாள் தன் மனைவியுடன் அருகில் உள்ள சினிமா அரங்கத்திற்கு படம் பார்க்க சென்றுள்ளார். படத்தில் வருகின்ற கட்சியினைப் பார்த்து மனைவி சிரித்துள்ளார். அருகில் இருந்த ஒரு இளைஞனும் மனவியைப் பார்த்து சிரித்துள்ளார். இதனை கணவர் பார்த்து அங்கு ஒன்றும் கேட்கவில்லை. வீட்டிற்கு வந்ததும் மனவியினைப் பார்த்து 'ஏன் அந்த பையனைப் பார்த்து சிரித்தாய் என்று சண்டையில் ஆரம்பித்து மனவியினை சுத்தியலால் தலையில் அடித்து கொன்று விட்டு, வீட்டின் கதவை சாத்திவிட்டு சொந்த ஊருக்கு வந்து விட்டார்.  இதுபோன்ற சமுதாயத்தில் வாழும் நாம் மடையினை  திறந்து வெள்ளத்தினை வெளியில் விடுவதுபோல மூக்கணாம் கயிறில்லா காளைகளாக வெளியில் மேய அனுமதிக்கலாமா?
ஏன் மஹாபாரத யுத்தம் எப்படி ஏற்பட்டது. தருமர் ஒரு புது மாளிகை கட்டி இருந்தார். அதனை பார்வையிட துரியோதனனை அழைத்திருந்தார். துரியோதனனும் மாளிகை அடைந்து வாசல் படியில் தண்ணீர் போன்ற அமைப்பினை தெரியாமல், உண்மையான தண்ணீர் என்று தாண்டியுள்ளார். அதனை மாடத்திலிருந்து பார்த்த திரௌபதி சிரித்துள்ளார். அதனை கண்டு தன்னை ஏளனமாக பார்த்து சிரிக்கும் திரௌபதிக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டுமென்று தர்மரை தனது அரண்மனைக்கு அழைத்து சூதாட்டத்தில் தோற்கடித்து த்ரௌபதியினை அவமானப் படுத்தி பாரத யுத்தம் வந்ததாக இலக்கியம் கூறுகின்றது. நாகரீக பெண்கள் பார்த்தால் கையெடுத்து கும்பிடும் அளவிற்கு இருக்க வேண்டுமேயொழிய கை   தட்டி கூப்பிடும் அளவிற்கு கீழ்த்தரமான ஆடை அணிந்தும், ஆண்களை பார்த்தால் சிரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் பெண்கள் சீரழிந்து போக வழி வகுக்கும் என்று  என்று ஒரு நடிகை சொல்லி இருக்கின்றார்.  தலை குனிந்து நடந்து பிறர் மனைவி நோக்கா சமுதாயம்   ஆண், பெண்  மக்களை அவிழ்த்து விட்ட காளைகளாக இந்த தீர்ப்பு அமையும் என்பதினை நீங்கள் ஏற்பீர்களா? இதுபோன்ற தீர்ப்பிப்புகள் பன்முக சமுதாயம், அமைதி, ஒற்றுமை, கட்டுக்கோப்பு, ஒழுக்கம் பிறழா வழி வகுக்குமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டுமா?
இந்த தீர்ப்பு வந்த உடன் நடந்த உண்மை சம்பவத்தினை உங்களுக்கு சொல்லலாம் என நினைக்கின்றேன். 1 .10 .2018  சென்னை நெசப்பாக்கத்தில் பாரதி நகரில் வசிக்கும் பிராங்க்ளின் 2016 ல் தன் காதல் மனைவியினை கைபிடித்து ஒன்றரை வயது குழந்தையுடன் வசித்து வந்தார். பிராங்கிளின் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்க  மனைவி புஸ்பலதா கேட்டு சண்டை வந்துள்ளது. உடனே பிராங்க்ளின் நான் அப்படித்தான் எந்த சேற்றிலும் மிதித்து கால் கழுவும் ஆம்பிளை, நீதிபதிகள் இதுபோன்ற நடவடிக்கை குற்றமில்லை என்று சொன்னபோது, நீ என்ன சொல்வது என்று கூறி உள்ளார். புஸ்பலதா, உங்களை நம்பி வந்த என்னை தவிக்க விடலாமா என்று அழுதபோது, அந்த கைக்குழந்தையினை தூக்கிக் கொண்டு பிராங்க்ளின் வெளியே சென்று விட்டாராம். கணவன் இரவில் கோபம் தணிந்து திரும்பி வராது கண்டு விரக்தியடைந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக 2 10 2018 செய்தித்தாள்கள் படம் பிடித்துக் காட்டியுள்ளன. இந்த பாவம் யாரைச் சாரும்.
            ஆகவே தலை குனிந்து நடந்து பிறர் மனைவி நோக்க சமுதாயம் பிராங்க்ளின் போன்ற ஆண் மக்களை அவிழ்த்து விட்ட காளைகளாக இந்த தீர்ப்பு அமையும் என்பதினை நீங்கள் ஏற்பீர்களா? இதுபோன்ற தீர்ப்புகள் பன்முக சமுதாயம், அமைதி, ஒற்றுமை, கட்டுக்கோப்பு, ஒழுக்கம் பிறழா வழி வகுக்குமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டுமா?


Sunday 5 August, 2018

மனிதனை மனிதன் சாப்பிடுறானே தம்பிப் பயலே!’



(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
இந்திய உச்ச நீதி மன்றம் 17. 7 .2018 அன்று இந்திய துணை கண்டத்தில் ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்கண்ட், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அஸ்ஸாம், கர்நாடக, கேரளா போன்ற மாநிலங்களில் பசு மாடுகளை கடத்தினார்கள், குழந்தைகளை கடத்தும் கும்பல், செய்வினை செய்யும் கும்பல், வழிப்பறி செய்யும் கூட்டம் என்று சட்டத்தினை தங்கள் கையினில் சில வன்முறை கும்பல் எடுத்துக் கொண்டு அப்பாவிகளை தாக்கும் செயல்களை கண்டிக்கும் விதமாக இந்தியாவில் ஜனநாயகம் நடக்கின்றதா அல்லது ‘மாபோகிராசி’ என்ற ஒரு சில  வன்முறைக் கூட்டத்தால் நடக்கின்றதா என்று தனது கண்டனத்தினை தெரிவித்ததுடன், அவைகளை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது என்பதினை நீங்கள் அனைவரும் பத்திரிக்கை, தொலைக் காட்சி வாயிலாக தெரிந்திருப்பீர்கள்.
            நாகரீக உலகம் தோன்றுவதற்கு முன்பு உணவிற்காக, இருப்பிடத்திற்காக, தங்களின் துணைவிகளுக்காக  மனிதர்கள் உடன்பிறப்புகள் என்று பாராது கொன்று குவிக்கும்  வல்லமை உள்ளவர்கள்  வெற்றிக் கொடி நாட்டும் வரலாறுகளை படித்திருப்பீர்கள். அதனையே சிலர் நாகரீக உலகிலும் அமல் செய்யும் செயலினை பாட்டாக கவிஞர், 'மனிசனை மனிசன் சாப்பிடுறான்டா' என்று பாடியுள்ளது உச்ச நீதி மன்ற கண்டணக்கனை விடும் அளவிற்கு சென்றுள்ளது.
            ஏன் அவ்வாறு உச்ச நீதி மன்ற நீதி அரசர்கள், ஏ.எம். கன்வில்கர், டி.ஒய். சந்தராசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியிருக்கின்றார்கள் என்றால் இந்தியாவில் சமீப காலங்களில் வன்முறைக் கும்பலின் வெறியாட்டக் காட்டு தர்பார் 20 விழுக்காடு அதிகரித்து இருக்கின்றது என்ற ஆய்வினை பார்த்தால் தெரியும். மாட்டு வியாபாரிகள் மாடுகளை வாங்கி வண்டிகளில் கொண்டு செல்லும்போது மாடுகளை பலியிடுவதற்காக கொண்டு செல்கிறார்கள் என்றும்,  பசு மாடுகளை வளர்பவர்களை மாட்டுக் கறிக்காக வளர்க்கிறார்கள் என்ற போர்வையிலும், வீடுகளில் புகுந்து சமையலுக்காக வைத்திருந்த ஆட்டுக்கறியினை மாட்டுக் கறி என்று அக்லாக் கான் போன்றவர்களை கொடூரமாக கொன்ற செயலும், குழந்தைகளின் கிட்னி, லிவர் போன்றவைகளை திருட குழந்தைகளை கடத்தும் கும்பல் என்று ஆசம் கான் போன்ற என்ஜினீயர், மற்றும் பிட்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள், மனநிலை பாதித்த மக்கள், வழிப்பறி கும்பல் என்று வெளியிட தொழிலாளர்களை தாக்கி கொல்லும் சம்பவங்கள் தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை திகைக்க வைத்து தனது கடுமையான கண்டனத்தினையும் தெரிவிக்க செய்துள்ளது.
            'டெமாக்ரசி' என்றால்  ஜனநாயக அரசியல் சட்ட முன்வரைவு மக்கள் அத்தனை  மக்களாலும், அவர்களுடைய பிரதிநிதிகள் மூலம், மக்கள் நல் வாழ்விற்கு அமைக்கப் பட்ட ஒரு அமைப்பே ஆகும். உலகில் மன்னராட்சி, சில மாண்புமிகு பெருமக்கள் கொண்ட அரிஸ்டோக்ரசி, சில அறிவு ஜீவிகள் கொண்ட ஆலிகார்க்கி, கொடுங்கோலாட்சி  என்ற அமைப்புக் கெல்லாம் சாவுமணி அடித்து விட்டு நாட்டின் முழு மக்களின் நலனுக்காக, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் அவர்களுக்குள் ஜாதி, மதம், இனம், மொழி போன்றவற்றால் பிரிவு எதுவுமில்லாமல் யாரும், எங்கேயும் தன்னிச்சையாக உலா வரவும், வேலை வாய்ப்பினை தேடிக் கொள்ளவும், பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை கொண்டு வாழவும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஜனநாயக நாடு இந்தியாவில் 1950 ன் அரசியல் சட்டத்தால் வழிவகை செய்யப் பட்டது.
            ஆனால் உச்ச நீதிமன்றம் சொன்ன 'மாபாக்ரசி' என்பது அரசின் அதிகாரத்தினை ஒரு சிறு வன்முறைக்கு கும்பல் தங்களுக்கென்று தனி அதிகாரத்தினை கையிலெடுத்துக் கொண்டு அரசின் சட்ட திட்டங்கள், அரசு எந்திரம், உளவுப் படை, காவல் படை போன்றவற்றின் செயல் பாடுகளை  காலில் போட்டு மிதித்து விட்டு தங்களுக்கென்று தனி சாம்ராஜ்யம் அமைத்து செயலாற்றுவது என்ன நியாயம் என்று உங்களுக்கு கேட்கத் தோணுவது நியாயம் தானே!
            இதே போன்ற முறையினை பதினெட்டாம் நூற்றாண்டின் கிரேக்க நாட்டில் 'அகிலோகிராசி' என்ற கும்பல் செய்து வந்தது. ஒரு நாட்டில் எங்கெல்லாம் 'அனார்கி' என்ற குழப்பமான சூழ்நிலை ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் சமத்துவம் சாகடிக்கப் படும்.  அமெரிக்காவில் கூட 1837 ம் ஆண்டில் மனிதர்களை கொல்லும், 'லின்சிங்' என்ற கும்பலின் செயலினை அந்த நாட்டின் ஜனநாயகத்தின் தந்தை ஆப்ரஹாம் லிங்கன் அது ஒரு மிருகத்தனமான செயல் என்று கண்டித்திருக்கின்றார்.
            ஆனால் சில சமயங்களில் சில நாடுகளில் மொபாக்ரசி நன்மைக்காவும், வேடிக்கையாகவும் நடந்துள்ளது என்று கீழ்கண்ட சம்பவங்கள் மூலம் காணலாம்:
1 ) இரண்டாம் நூற்றாண்டில் ரோமா நாட்டின் அதிகார கும்பல்கள் தவறான ஆட்சி முறைகளைக் கண்டு மக்கள் சிலிர்த்து எழுந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது, 'கிளிண்டன்' என்ற அதிகாரி அவர்கள் மீது கொடூர தாக்குதலை ஏவினான். இருந்தாலும் மக்கள் புரட்சியினை அடக்க முடியவில்லை. ரோம் அரசு மக்கள் புரட்சியினை அடக்க என்ன செய்ய வேண்டும் என்று புரட்சியாளர்களிடம் கேட்டபோது தங்கள் மீது அடக்கு முறையினை ஏவிவிட்ட கிளிண்டன் தலையினை எடுக்க வேண்டும் என்று சொன்னதும் அவன் தலை வாங்கியபின்பு மக்கள் போராட்டம் ஓய்ந்ததாக வரலாறு.  ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், 'ரிமூவ் தி கார்ப்ஸ்' என்று. அது எதற்காக என்றால் ஒரு பிரட்சனை  பொருளாலோ அல்லது நபராலோ ஏற்பட்டது என்றால் அதனை நீக்கினால் அது ஒழிந்து விடுமாம். அதுபோல தான் தூத்துக்குடி ‘ஸ்டெர்லிட்’ ஆலையினை மூடியதும் ஆர்ப்பாட்டம் நின்று விட்டது ஒரு எடுத்துக் காட்டு.
            2) அமெரிக்காவின் மாசாச்சூசெட் மாநிலத்தில் ஒரு சமயத்தில் மந்திரவாதிகள் செய்வினைகள் அதிகமாகிவிட்டது அதனை தடுக்க வேண்டும் என்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அவ்வாறு சந்தேகிக்கின்றவர்களையெல்லாம் பிடித்து அவர்களை குற்றங்களை ஒத்துக் கொள்ள செய்து தூக்குத்தண்டனைகள் நிறைவேற்றியது, 'சேலம் விட்ச் ட்ரயல்' என்ற கரும்புள்ளி 1662 ம் ஆண்டு நிறைவேற்றப் பட்டதாக சரித்திரம் கூறுகிறது.
            3) அமெரிக்காவின் ஆளுமை செய்த ஆங்கிலேய ஆட்சியினர் அமெரிக்க மக்களிடம் வரி வசூல் செய்ய 'ஸ்டாம்ப் டூட்டி' என்ற ஒரு வரி விதித்தனர். அதனை எதிர்த்து மக்கள் வெகுண்டெழுந்து அரசு கட்டிடங்களை 1765 ல்   தகர்த்தெறிந்தனர். அதன் பின்பு ஆங்கிலேய அரசு அந்த கறுப்புச் சட்டத்தினை நீக்கியது. ஆனால் அமைதி பாரம்பரிய  மிக்க நாம் ஆங்கிலேயர் உப்பு எடுக்க வரி விதித்ததினை அமைதியான முறையில் சத்தியாகிரகம் நடத்தி அதனை திரும்பப் பெறச் செய்த பெருமை இந்திய மக்களை சாரும்.
            4) அதேபோன்று தான் பிரான்ஸ் நாட்டில் பிரபுக்கள் ஆட்சி சர்வாதிகாரமாகி எதிர்ப்பாளர்களை எல்லாம் மக்களின் துயரம் என்று அழைக்கப் பட்ட 'பஸ்லே' என்ற சிறையில் தள்ளி கொடுமைப் படுத்தியபோது 1789 ல்   மக்கள் அந்த சிறையினை தகர்த்து அவர்களை எல்லாம் விடுதலை செய்தார்கள், அதோடு பிரபுக்களின் ஆட்சியையும் அகற்றப் பட்டது.
            5) பிலிபைன்ஸ் நாட்டில் அதிபர் மார்கோஸ் அதிகார மீறல் ஏற்படுத்தி ஊழல் செய்தபோது 'மக்கள் எடிசா என்ற மஞ்சள் புரட்சியினை 1986 ல் நடத்தி அகற்றியும், 1991 ல் மிகில் கோபர்ச்சேவ் அரசினை மாற்றியும், தாய்லாந்தில் 'தக்ஷின்' ஆட்சியையும், எகிப்த்தில் 2006 ம் ஆண்டு கோசிமின் முபாரக் ஆட்சியையும், 2011 ல் யுக்ரைனிலும், 2018 ம் ஆண்டு பக்கத்து மலேசியாவில் அரசு வங்கி கணக்கை அதிகாரத்தால் தனது சொந்த வங்கி கணக்கில் மாற்றியும் வரம்பு மீறிய அதிபர்கள் நீக்க மக்கள் புரட்சிகள் உதவின.
            6) சில கடை திறப்பில், விளையாட்டு போட்டிகளில்  நடிகை நடிகர்களை பார்க்க கூடும் கூட்டம் கட்டுக் கடங்காமல் போகும்போது சில சம்பவங்கள் நடக்கலாம். ஆனால் அவையெல்லாம் கொண்டாட்டங்களின் அத்துமீறல் ஆகும்.
சமீப காலங்களில் செய்திகளை உடனுக்குடன் காட்டுத் தீபோல பரப்பும் முகநூல், வாட்சப் , இன்ஸ்டாங்க்ராம், ஆர்குட் போன்றவைகள் நல்ல செய்திகளை பரப்புவதற்கு பதிலாக பசுக்களை கடத்துகிறார்கள், பசுக்களை கொள்கிறார்கள், மாட்டுக் கறி சாப்பிடுகிறார்கள், கலப்புத் திருமண தம்பதிகள் என்றும் , பிள்ளை பிடிக்கும் ஆசாமிகள், வழிப் பறி கொள்ளையர்கள், ஆடு கடத்தும் ஆசாமிகள், திருடர்கள் என்று அப்பாவி மக்களை அவர்கள் தனி நபர்  சுதந்திரத்தினை பறிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் தாக்கிக் கொல்லும் அளவிற்கு அத்து மீறலும், அதற்கு துணையாக தடுக்க வேண்டிய காவல் துறையே ஏவல் துறையாக மாறுவதற்கு யார் அவர்களுக்குத் தைரியம் கொடுத்தது. அதனையே தான் உச்ச நீதி மன்றமும் கேட்டுள்ளது என்பது சாமானிய மக்கள் எழுப்பும் கேள்வியும் அது தானே!
புது டெல்லி ஜும்மா மஸ்ஜித் இமாம் புஹாரி 31 .7 . 2018  அன்று, 'முஸ்லிம்கள் தொப்பி, தாடி வைத்துக் கொண்டு வெளியில் போய் வீட்டுக்கு திரும்பி  வர பயப்படுகிறார்கள் என்று கூறியிருப்பதினை மெய்ப்பிக்கும் விதமாக 3 .8  2018  ல் ஹரியானா மாநிலம் குறுகிராம் என்ற இடத்தில் தாபா உணவகம் நடத்தும் 'ஜபாருடீன்' என்ற நபர் கடையில் இருக்கும் போது அவர் தாடி வைத்திருக்கின்றார் என்று, அங்குள்ள சேரில் கயிற்றைக் கொண்டு கட்டி அவர் வைத்திருந்த தாடியினை சிரைத்துவிட்டு ஓடியிருக்கின்றார்கள் அந்த பார்பர்களான காலிக் கூட்டத்தினைச் சார்ந்தவர்கள் என்றால் எந்தளவிற்கு கொடியவர்கள் அவர்கள் என்று பாருங்களேன்.
வன்முறை கும்பலால் பாதிக்கப் பட்ட முஸாபிர் நகர், மீரட் நகர் முஸ்லிம்கள் இன்னும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அச்சப்ப படுகிறார்கள் என்றால் எந்தளவிற்கு அவர்களை பயமுறுத்தி இருக்கின்றார் என்று அறியலாம்.
காஸ்மீர் எல்லையோர கிராமமான காத்துவாவில் குதிரை மேய்ப்பில் ஈடுபட்டிருந்த ஆசிபா பானு ஜனவரி 2018 ல் கற்பழித்து கொலை செய்ததின் நோக்கமே அந்த கிராமத்தினை விட்டு முஸ்லிம்கள் வெளியேற்றி அதனை காலி கூட்டம் தாங்கள் குடியேற செய்த சதியாக பத்திரிக்கைகள் கூறுகின்றன. அதனைத் தான் 'லேண்ட் ஜிஹாத்' என்று கூறுகிறார்கள்.
மாபாக்ரசி என்ற வன்முறைகளைத் தடுக்க உச்ச நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு 21 வழிமுறைகள் கோடிட்டு காட்டியுள்ளன. அதில் 12 வழிமுறைகள் வன்முறைகளைத் தடுப்பதும், 9 வழிமுறைகள் வன்முறை கும்பலுக்கு பரிகாரம் காணவும், ஒன்று அதற்கு துணைபோகும் காவல் துறையினரை தண்டனைக்கு உட்படுத்தியும் கொண்டதாக அமைந்துள்ளது.
இது போன்ற வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவதினைப் பார்க்கும்போது வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு முஸ்லிம்கள், கிறித்துவர்கள், பழங்குடியினர், தலித் மக்கள் ஆகியோரை பயமுறுத்தி சில கட்சிகளுக்கு ஆதரவாக வோட்டுப் போட வைக்கும் தந்தரம்போல் இருக்கின்றது என்று நடுநிலையாளர்கள் கூறுகின்றனர். ஆகவே சமுதாய மக்கள் தங்களை தாங்களே ஆபத்திலிருந்தும், வன்முறைக்கு கும்பலிருந்தும் பாது காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் நல்லது என்று கூறலாமா!

           

Thursday 28 June, 2018

இந்தியாவில் அறிவிக்கப் படாத எமர்ஜென்சியா?



(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ .பீ.எஸ்(ஓ)
இந்திய நாடு பல்வேறு இனம், மொழி, மதம் உள்ளடக்கிய, அனைவருக்கும் பேச்சுரிமை, எழுத்துரிமை, வாழும் உரிமை கொண்ட ஒரு ஜனநாயக நாடு என்று அரசியலமைப்பு சட்டம், 1950 சொல்கிறது. அந்த சட்டங்களை காலடியில் போட்டு மிதித்த எமெர்ஜென்சி என்ற அவசர காலம் 1975  -1977 வரை 21 மாத காலங்கள் இருந்தன. அந்த காலச் சுவடுகள் அழிந்து 41 ஆண்டுகள் ஆகின்றன. அதனைக் கொண்டாடும் விதமாக இன்றைய மத்தியில் ஆளும் அரசு ‘கருப்பு நாள்’ கொண்டாடுகிறது. ஆனால் அந்த நாட்கள் இன்னும் மறையாமல் இருக்கின்றது என்று சமீபகால நடவடிக்கைகள் சொல்கின்றன. யார் எமெர்ஜென்ஸிக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடினார்களோ அவர்களே இன்று  மக்கள் தங்கள் உரிமைக்காக, உயிர் வாழ்வதற்காக போராடும்போது அவர்களை தீவிரவாதிகளாக வர்ணம் பூச நிணைப்பது ஒரு அதிகார மமதையில் செய்யும் செயலாகவே கருத வேண்டியுள்ளது.
            எதிர்க் கட்சியில் இருந்தபோது போராடியவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்ததும் அவர்களுடைய ஊரையடித்து உலையில் போடும் செயலையும், அடாவடி அரசியலையும் எதிர்க்கும் தன்னுடைய சொந்த மக்கள் மீது காவல் துறையினர், ராணுவத்தினர் கொண்டு அடக்குமுறை செயலில் ஈடுபடுவது உலகெங்கும் நடந்து கொண்டு தான்  உள்ளது. மக்கள் போராட்டங்களால் மகுடங்கள் உருண்ட பல சம்பவங்கள்  உள்ளன. அவை எவை எனப் பார்க்கலாம்:
1)    ஐரோப்பிய நாடுகளில் தொழில் புரட்சி 1760  ல் ஏற்பட்டு தொழிலாளி-முதலாளி என்ற வர்க்க யுத்தம் ஏற்படும் போ து முதலாளி வர்க்கத்திற்கான எதிரான  புரட்சிக்கு வித்திட்டது. 1789 ல் மன்னர் ஆட்சிக்கு எதிரான புரட்சி பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்டு மன்னராட்சி அகற்றப் பட்டது. 1917 ம் ஆண்டு அக்டோபர் புரட்சி மூலம் ரஷியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
2)    1989 ம் ஆண்டு சீனாவில் மாணவர் எழுச்சியில் அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க ‘டினமென்’ மைதானத்தில் கூடி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த மாணவர் 10000 பேர்களை ராணுவ டேங்குகளை கொண்டு நசுக்கியது ஒரு வரலாற்று அடக்குமுறையாக கருதப் படுகிறது.
3)    ஜப்பானில் உள்ள புகிஷிமாவில் அணு சோதனை நிலையத்தில் ஏற்பட்ட சேதத்தினைத் தொடர்ந்து அங்குள்ள மக்கள் அணு நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆரம்பித்து அது ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகளிலும் பரவியது.
4)    அதே போன்ற எழுச்சிகள்  வட அமெரிக்கா, ‘அரப் ஸ்பிரிங்’ என்ற புரட்சி டூனிஷிய, எகிப்த், சிரியா போன்ற நாடுகளில் ஏற்பட்டது. 2001 ம் ஆண்டு ஆப்கான் மக்கள் மன்னர் சாகிர் சாவிற்கு எதிராக புரட்சி செய்தார் என்பதும் வரலாறு.
5)    இந்திய வரலாற்றில் பிரிட்டிஷ் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான புரட்சி 1857 ல் சிப்பாய் கலகமாக துவங்கி ஆட்சி மாற்றத்தினை 1947ல் காண முடிந்தது. சுதந்திரம் அடைந்த பின்பு 1975 ம் ஆண்டு எமெர்ஜென்சி என்ற அவசரகால நடவடிக்கை துவங்கியபோது அனைத்து மக்களும், எதிர்கட்சிகளும் போராட்டத்தினை துவங்கின. அதன் பயனாக 1977 ல் ஆட்சி மாற்றத்தினைக் காண முடிந்தது. அப்போது போராடிய தலைவர் கள் ஜெயப்ரகாஷ் நாராயணன் மற்றும் மேராஜி தேசாய்  யாரையும் தீவிர வாதிகள் என்று இன்றைய ஆட்சியினர் சொன்னதில்லையே அது ஏன்? அது மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தல் நெய்குடம் என்று சொல்லுவது போன்ற செயலாகாதா?
6)    2018 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ல் புது டெல்லி ஆம் ஆத்மீ  அரசினை கண்டித்து ப.ஜ.க ஆர்ப்பாட்டம் செய்ததே அது தீவிர வாத செயலா?
7)    அல்லது தற்போதைய ராஜஸ்தான் ப. ஜ. க அரசு டாக்டர்களை பழி வாங்குகிறது என்று போராடுகிறார்கள் அது தீவிரவாத செயலா?
8)    உ.பி.ஏ. என்ற காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் இருக்கும்போது அரசுக்கு எதிராக அண்ணா ஹஜாரே போராடியபோது அவருக்கு ஆதரவு தெரிவித்து மேடையில் ஆர்ப்பாட்டம் செய்தும், பிரதமர், காங்கிரஸ் தலைவி வீட்டிலும் மறியலில் ஈடுபட்ட இன்றைய மக்கிய அமைச்சர் தளபதி வி.கே.சிங், இன்றைய புதுச்சேரி ஆளுநர் கிரேன் பேடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜராவால், ராம்தேவ் போன்றோர் தீவிர வாதிகளா?
9)    1)    கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கோடு சேர மன்னர் ஆட்சியிலிருந்து. அதன் பின்பு கேரளா நம்பூதிரி நாயர்கள் ஆளுமையில் தமிழ் மக்கள் மிகவும் கொடுமைப் படுத்தப் பட்டார்கள். அவர்களைக் காப்பாற்ற குமரித் தந்தை மார்ஷல் நேசமணி தலைமையில் பெரிய போராட்டம் நடந்தது. அவருக்கு தளபதியாக இருந்த வழக்கறிஞர் பொன்னப் நாடார் இருந்து மறுக்க முடியாது. அவர்களை தீவிர வாதிகள் என்று முத்திரை குத்தமுடியுமா? அவருடைய மாவட்டத்தினைச் சார்ந்த மத்திய அமைச்சர் அவர்கள் மட்டும் எப்படி தமிழ் மக்கள் கலாச்சார விளையாட்டான ஜல்லிக் கட்டுக்கு ஆதரவானவர்களையும், தூத்துக்குடி மக்களை விஷ வாயு ஆபத்திலிருந்து காப்பாற்ற ஏற்பட்ட மக்கள் எழுச்சியாளர்களையும் தீவிர வாதிகள் என்று முத்திரை குத்த முடியும் ?
10)  அவ்வாறு மக்கள் போராட்டங்களை தீவிர வாத செயல்கள் என்றால் 1947 சுதந்திரத்திற்காக போராடியவர்களை தீவிர வாதிகள் என்று முத்திரை குத்தமுடியுமா?
11) 1965 ல் ஹிந்தி திணிப்பினை எதிர்த்து போராடியவர்களை தீவிர வாதிகள் என்று முத்திரை குத்தமுடியுமா?
12)  1972 ம் ஆண்டு தி.மு.க. பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். பொதுக் கூட்ட மேடையில் அந்தக் கட்சியின் வரவு செலவு கேட்டு தி.மு.காவிலிருந்து நீக்கப் பட்டபோது தமிழகம் முழுவதும் மக்களிடம் நீதியினை கேட்கப் போகிறேன் என்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார் அவர் என்ன தீவிரவாதியா?
இந்திய நாடு சுதந்திரத்திற்கு முன்பு 85 சதவீதம் விவசாயிகள் நாடாக இருந்தது. மக்கள் பசி,பட்டினி இல்லாமல் வாழ்ந்தனர். ஆனால் இன்று வெறுமனே 55 சதவீத மக்களே விவசாயம் செய்யும் மக்களாக உள்ளனர். ஏனென்றால் அவர்கள் வாழ்வாதாரம், பருவமழை பொய்த்ததாலும், அதிக வட்டி வாங்கி விவசாயம் செய்வதாலும், அரசு விவசாயிகளை மானியம் மூலம் ஊக்குவிக்க முடியாததாலும், பம்ப் செட்டுகளுக்கு தேவையான மின்சாரம் கொடுக்க முடியாததாலும், மோட்டாருக்கு தேவையான டீசல் விலை அதிகரித்ததாலும், விவசாயத்திற்கான விதை, யூரியா போன்ற பொருள்கள் விலை ஏற்றத்தாலும், பல்வேறு சாலை அமைக்க விவசாயிகள் நிலம் கையகப் படுத்துவதாலும் விவசாயிகள் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது.
விவசாயிகள் நிலங்கள் இயற்கை வாய்வு, நியூட்ரினோ போன்ற திட்டங்களால் கையாகப் பட்டபோது தங்கள் நிலங்கள், நீர் ஆதாரங்கள் பாதிக்கப் படுமே என்று ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் தீவிரவாதிகளா?
இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் நடந்தபோதும், அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை முடக்கப் பட்டபோதும், ரயில் நிலையங்கள் மறிக்கப் பட்ட போதும் யாரும் அவர்களை தீவிர வாதிகள் என்று முத்திரை குத்தவில்லை
மத்திய பிரதேச 'கிசான் மஸ்துர் சங்கம்' அது ஒரு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. அதன் தலைவர் ‘திரிலோக கோதி’ தலைமையில் அங்கு விவசாயிகள் மீது நடந்த துப்பாக்கி சூட்டினை கண்டித்து நடத்தப் பட்ட ‘மண்டேசர்’ ரோடு மறியலை ஒரு தீவிரவாத செயலாக சித்தரிக்க வில்லையே, அது ஏன் என்று மக்களுக்கு கேட்க உரிமை இல்லையா?
ஆனால் தமிழர்கள் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக் கட்டு, சுற்றுப் புறசூழல் பாதிக்கும் தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலை போன்றவற்றிக்கு எதிரான போராட்டங்களை பொறுப்பிலுள்ளவர்கள் தீவிரவாத செயல் என்று கொச்சைப் படுத்தலாமா?
நமது நாட்டின்  அரசியல் நடவடிக்கைகளாக நோட்டுக்கள் செல்லாத அறிவிப்பான நடவடிக்கைகள் தொடர்ந்து குஜராத் கூட்டுறவு வங்கிகள் மூலம் கிட்டத்தட்ட 17 ,000 கோடி பழைய நோட்டுக்கள் மாற்றப் பட்டுள்ளன அதில் பி.ஜே.பி. முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உண்டு என்ற அதிர்ச்சி செய்திகள், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, நாள் தோறும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், தலித், கிறிஸ்டின் மற்றும் முஸ்லிம்கள் மீது பசுவைக் காப்பாற்றுகிறோம் என்று நடத்தப் படும் தாக்குதல், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை உலக அளவில் முதலிடம் பிடித்த பெருமை, நடு நிலை எழுத்தாளர்கள் மீது தாக்கப் படும் வன்முறை ஆகியவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பது அவர்களுடைய மனக்குமுறல் மற்றும் பத்திரிக்கை, தொலைக் காட்சிகள் மூலம் அறிந்துள்ளீர்கள். அதுபோன்று நடக்கவில்லை என்று எந்த நபரோ, அரசோ கூறுமேயானால் அது முழு பூசணிக்காயினை சோற்றில் மறைக்கும் செயலாகவே கருதவேண்டும்.
ப.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஸ்வத் சின்ஹா, 'இந்தியாவில் அறிவிக்கப் படாத எமெர்ஜென்சி நடக்கின்றது, அது ஜனநாயகத்திற்கு ஆபத்து' என்று 25 6 .2018 பேட்டியில் கூறியுள்ளார். அதனை நிரூபிக்கும் விதமாக, 'இம் என்றால் கைது நடவடிக்கை, இச் என்றால் குண்டர் சட்டம்' என்று அடக்குமுறை ஆட்சி நடத்துவது நியாயம் தானா என்று நடு நிலையாளர்களும், மக்களும் கேள்வியினை எழுப்புவது நியாயம் தானே! மக்களிடம் முந்தைய ஆட்சி காலங்களில் குறைகளை சுட்டிக் காட்டி அரியணையில் ஏறியதும் அதே குறைகளை இன்றைய ஆட்சியினர் செய்ததும் அதனை தட்டிக் கேட்கும் மக்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற செயலாக என்ற கேள்விக்கு பதிலினை உங்களிடமே விட்டு விடுகிறேன்!

Monday 4 June, 2018

அச்சம் என்பது மடமையடா அல்லாஹ்வின் துணை இருக்கையிலே!



27.5. 2018 .அன்று உலக தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒரு செய்தியினை மட்டும் திரும்பத் திரும்பத் வெளிச்சம் போட்டுக் காட்டின. நீங்களும் பார்த்திருப்பீர்கள். ஒரு மாலி தீவின் வாலிபர் செய்த ரத்தம் உறைய வைக்கும் அதிசயத்தை.
மேற்கு ஆப்ரிக்காவின்  குட்டித் தீவான மாலி சமீப காலங்களில் உள் நாட்டு போரில் உழன்று கொண்டிருக்கின்றது என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன அதனைத் தடுக்க உலக நாடுகள் சபை அமைதி காக்கும் படையும் அங்கே நிறுத்தப் பட்டிருக்கிறது என்ற செய்தியும் அறிந்திருப்பீர்கள். மாலி தீவானது பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்தது. 1960 ம் ஆண்டு மாலி தீவு பிரான்ஸ் பிடியிலிருந்து மீண்டு விடுதலை பெற்றது. அந்த நாட்டின் 90 விழுக்காடு மக்கள் முஸ்லிம்கள் ஆவர். ஆனால் உள்நாட்டுப் போரில் பல மக்கள் கள்ளத் தோனியில் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுகின்றனர். அப்படி தஞ்சம் புக வந்தவர்தான் 22 வயதான மோமோது கசமா என்ற இளைஞர்.
27 .5 .2018 அன்று பாரிஸ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வீதியில் சென்று கொண்டிருந்தவர் அனைவரும் மேல் நோக்கி கூக்குரலுடன் பார்த்துக் கொண்டு பரபரப்பாக இருந்தனர். அப்போது அந்த குடியிருப்பு பகுதியில் தனது முதுகில் ஏற்றப் பட்ட சிறிய பையுடன் ஹோட்டலில் தேநீர் அருந்த வந்திருந்த மோமது அவர்கள் பார்க்கும் திசை நோக்கி தனது கண்ணை நோக்கினார். அங்கே நான்காவது மாடியில் வெளியில் உள்ள கண்ணாடி பால்கனி விளிம்பை பிடித்துக் கொண்டு நான்கு வயது சிறுவன் தொங்கி கொண்டு இருப்பதனை பார்த்து அதிர்ச்சியுற்று சிறிதும் யோசிக்காது தனது முதுகுப் பையனை வைத்து விட்டு மட மட என்று 38 வினாடியில் நான்காவது மாடியினை எந்த உறுதுணையுமின்றி ஏறி அந்த சிறுவனை அலாக்காக தூக்கி பால்கனி உள்ளே இழுத்து காப்பாற்றி விட்டான். உலகில் 'ஸ்பைடர் மேன்' சாகசங்கள் என்று வரும் தொலைக் காட்சி செய்திகளை கண்டுள்ளோம். ஆனால் அவையெல்லாம் திட்டமிட்டு செய்யப் படுகின்ற அதிசயங்கள். மாலி தீவின் மோமோது செய்தது யாரும் எதிர் பார்க்காத நேரத்தில் செய்த சாதனையாகும் என்றால் அதிசத்திலும் அதிசய சாதனைதானே. அதுவும் கள்ளத்தோணியில் தஞ்சம் புக வந்த வாலிபருக்கு உள்ள வீரமும் தீரமும் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தானே.
            அந்த சிறுவனின் தாயார் தனது தாயாரைப் பார்க்க பக்கத்து நகருக்கு கணவரின் பொறுப்பில் விட்டு விட்டு சென்றிருக்கின்றார். தந்தையோ தனது 4 வயது தனயனை வீட்டில் வைத்து  பூட்டிவிட்டு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றிருக்கிறார். கடையில் சாமான்கள் வாங்கி விட்டு நேரே வீட்டுக்கு வராமல் வரும் வழியில் உள்ள வீடியோ கேம்ஸ் கடையில் விளையாடிக் கொண்டிருந்ததால் சிறுவனைப் பற்றிய கவலை அவருக்கு தெரியவில்லை. சிறுவனோ எவ்வளவு நேரம் வீட்டில் அடைபட்டு இருப்பான். ஆகவே அந்த அறியா பாலகன் வேடிக்கை பார்க்க பால்கனியியை திறந்து கொண்டு வந்தவன் அதன் வழியே அப்பாவை தேடி போய் விடலாம் என்று எத்தனித்தபோது அந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. தொலைக் காட்சி நிகழ்ச்சியினைப் பார்த்து அலறிய தாய், தன் தாய் வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு வந்து அன்பு மகனை அள்ளிக் கொஞ்சி அவனைப் காப்பாற்றிய மோமோதை வானளாவ பாராட்டியுள்ளார். அவர் மட்டுமா தொலைக் காட்சி நேரலையினைக் கண்ட லட்சோப லட்சோப  பாரிஸ் நகர மக்கள் பாராட்டியுள்ளனர். இதனை அறிந்த பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி மக்ரோன், மோமோதை தன்னுடைய மாளிகைக்கு அழைத்து நாட்டின் உயர்ந்த விருது வழங்கி, குடியுரிமையும் கொடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்சி பணியில் ஒரு வேலையும் வழங்கி யுள்ளார்.  தமிழில் ஓர் பழமொழி உண்டு. 'கும்பிடபோன தெய்வம் கூரையினை பிய்த்துக் கொண்டு கொட்டும்' என்று. புகலிடம் தேடி கள்ளத்தோணியில் வந்த மோமோதுக்கு அந்த சிறுவன் உருவில் இறைவன் அருள் கிடைத்து அவன் புகழின் உச்சாணிக்கே சென்று விட்டான். அப்போது அங்கே வந்த நிருபர்கள் மோமோதை சூழ்ந்து கொண்டு, 'நீங்கள் எப்படி இந்த அதிசயத்தினை செய்தீர்கள்' என்று கேட்க, அதற்கு அவர், 'கூக்குரல் கேட்டு தேநீர் அருந்திய நான் ஓடி வந்து பார்த்தபோது அந்த சிறுவன் தொங்கி கொண்டு இருந்தான், எனக்கு உடனே அவனை காப்பாற்ற வேண்டும் என்று எந்த உறுதுணையும் இல்லாமல் உயிரை பணயம் வைத்து ஏறினேன், அதற்கு என் இறைவன் உறுதுணையாக இருந்தான்' என்று கூறி இருப்பது எப்படி ஒரு முஸ்லிம் இறைவன் மீது அசையா நம்பிக்கை வைத்து வாழவேண்டும் என்று ஒரு சிறந்த உதாரணமாக உங்களுக்கு தெரியவில்லையா? சிலர் ஒரு காரியத்தில் தோல்வி அடைந்தால் உலகமே இருண்டு விட்டதாக நினைக்கின்றார்கள், சிலர் வசதி இல்லையென்றால் வாழ்க்கையே இல்லையென்று வருத்தப் படுகிறார்கள் அவர்கள்  இறை பக்தியுடன் சோம்பேறித்தனமாக இல்லாமல் எந்த வேலையும் ஆரம்பித்தால், 'வெற்றிமேல் வெற்றி வந்து அவர்களை சேராதா சகோதர, சகோதரிகளே!
            உலகப் புகழ் கால்பந்தாட்ட வீரர் வெற்றி நேரத்தில் யாரை நினைத்தார்!
கால் பந்தாட்ட ரசிகர்களுக்கெல்லாம் தெரியும் ‘போக்பா’ என்ற வீரரை தெரியாமல் இருக்க முடியாது.. அவர் பிரான்ஸ் நாட்டில் 15 மார்ச் 1993 ல் பிறந்த ஆப்ரிக்க இனத்தவர். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல அவர் உலக 21 வயதிற்குட்டபட்ட வர்களின் கால்பந்தாட்டத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு சாம்பியன் பட்டத்தினை பெற்றுத் தந்த சிறப்புப் பெட்டவர். அதன் மூலம் கோல்டன் பாய் விருதை 2013  னிலும், பிராவோ விருதினை 2014 லிலும் பெற்றவர். அவருடைய கால்கள் ‘ஆக்டொபஸ்’ போன்று நீளமாக இருப்பதால் எதிரிகள் கொண்டு செல்லும் பந்தினை லாவகமாக கைப்பற்றி அதனை எதிரி வீரர்கள் பறிக்காமல் தட்டி சென்று கோலில் தள்ளும் வெற்றி வீரரானதால் அவரை ‘பொலபொ பால்’ என்று பிரான்ஸ் மக்கள் அழைப்பார்களாம்.
அப்படி பெயரும், புகழும் பெற்ற வீரர் சமீபத்தில்(மே 2018)  இஸ்லாமிய மார்க்கத்தினை தழுவி மக்காவிற்கு உம்ரா ஆர்ப்பாட்டமில்லாமல் சென்ற புகைப்படம் ஊடகங்களில் வெளியானது.
அவருக்கு கால்பந்தாட்டத்தில் விளையாட ரூ 811 கோடிகள் கொடுக்கப் படுகின்றது. இப்போது அவர் மாஞ்செஸ்டர் யுனைடெட் என்ற அணியில் விளையாடி வருகிறார். அவர் 29 3 2018 ல் ரசியாவிற்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான கோலினை அடித்ததும் தனது மேல் சட்டையினை கீழிலிருந்து மேலே தூக்கி காட்டினார். அதனில், என்ன எழுதியிருந்தது என்றால், தனது தந்தை பிறந்த தின வாழ்த்தும், அல்லாஹ் அவருக்கு கருணை காட்டும்படியும் எழுதியிருந்தது. அவருடைய தகப்பனார் தனது 80 வது வயதில் நோயால் இறைவனடி சேர்ந்ததினை நினைவூட்டுவதாகவும் அது இருந்ததாம்.
ஒரு சிறந்த விளையாட்டு வீரர் தான் எப்படியும் கோல் அடித்துவிடுவோம் என்றும் அதனை தந்தை நினைவாக இருக்க வேண்டும் என்றும், அவர் எல்லாம் வல்ல அல்லாஹ் கருணையுனடன் சுவர்க்கத்தில் இருக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டது  வருங்கால இளைஞர்களுக்கு ஒரு சிறந்த பாடமாகும் என்றால் சரிதானே!




Sunday 20 May, 2018

வலியவனுக்கு வட்டலப்பம், இளைத்தவனுக்கு புளிச்சேப்பமா?



(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
தென்  கொரியா பியாங் சங்கில்  2018 குளிர் கால ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பின்பு தென் கொரியா-வட கொரியா இணைந்து பணியாற்ற முடிவெடுத்து விட்டது என்ற செய்தியும், அதனைத் தொடர்ந்து இரு நாட்டு அதிபர்களும் சந்தித்தது உலகமே அதிசயமாக திரும்பி பார்க்க வைத்தது. ஏனென்றால்  தென் கொரியா அமெரிக்கா ஆதரவுடன்  இருக்கும் நாடு. வட கொரியா கிம் ஜோங் என்ற ஒரு இரும்பு மனிதன் பிடியில் இருக்கும் கம்யூனிஸ்ட் சர்வாதிகார சந்ததியார் நாடு. இரு துருவங்களை இணைத்தது அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தான் என்று அவருடைய ஆதரவாளர்கள் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசை அறிவிக்க வேண்டும் என்றும் பறை சாற்றினர் என்று உங்களுக்குத் தெரியும். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா-வட கொரியா ஜனாதிபதிகள் வருகிற ஜூன் மாதம் 12 ந் தேதி சிங்கப்பூரில் சந்திக்கப் போவதாக அதிகாரப் பூர்வ செய்திகளும் அறிவிக்கின்றன.
இது எவ்வாறு நேர்ந்தது என்று சிறிது பின் நோக்கி பார்ப்போமேயானால் தெரியும் வட கொரியாவின் வலிமைப் பற்றி. நுகிளர் அணு ஆயுதங்கள் சோதனைகள் தடை இருக்கும் போது உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆயுத பரிசோதனைகள் எத்தனை முறை அமெரிக்கா எச்சரிக்கை செய்தாலும் அதனை நடத்திக் காட்டி,  அமெரிக்கா ஹவாய்  தீவினையே அழிக்கும் திறமை தன்னிடம் உள்ள அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்று வெறும் பயமுறுத்தல் மட்டுமல்ல மாறாக அத்தனை சக்தி வாய்ந்த ஆயுதத்தினையும் வெடித்து உலகமே மூக்கில் விரல் வைக்கக் கூடிய அளவிற்கு மாபெரும் சக்தியாக வட கொரியா விளங்குகிறது. இவ்வளவிற்கும் அந்த நாடு பணக்கார நாடு அல்ல. மாறாக மக்கள் உடல் உழைப்பினால் முன்னேறி அமெரிக்கா எத்தனை தடை விதித்தாலும் தன்னிறைவு பெற்ற நாடாகா திகழ்கிறது. ஆகவே தான் அமெரிக்காவும் வட கொரியாவிடம் சமரச பேச்சுக்கு அழைப்பு விட்டுள்ளது.
இதனையே சற்று இஸ்லாமிய நாடுகளின் பரிதாப நிலைகளை எண்ணிப் பாருங்கள். இஸ்லாமிய நாடுகளில் எண்ணெய் வளம் பெருக்கி ஓடுகிறது. வெளிநாடுகளுக்கு எண்ணெய்களை விற்பது மூலம் வருமானம் மூலம் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொகுசு கப்பல்களும், ஆடம்பர வில்லாக்களும், ஆடை ஆபரணங்களும், செல்வ குளிப்பில் மூழ்கிக் கிடக்கின்றனர். தங்களுடைய நாட்டின் பாதுகாப்பிற்கு வெளிநாட்டினர் உதவி தேட வேண்டிய நிலையில் உள்ளனர். ஏன் அரச குடும்பத்தினர் உபயோகிக்கும்  கார்களை ஜொலிக்கும் தங்க-வைர வைடூரியங்கள் கொண்டு அலங்கரித்தும், தங்கள் கழிவு டாய்லட்டுக்கு தங்க முலாம் பூசும் அளவிற்கு கோடீஸ்வராக இருக்கின்றார்கள். ஆனால் சாதாரண உலக முஸ்லிம் ஒருவேளை கஞ்சிக்கே தகிடு தத்தம் போடுகிறான் என்ற நிலை ஒரு பக்கம் இருந்தாலும், அந்த பணக்கார முஸ்லிம் நாடுகள் கூட அணுவினை கொண்டு ஆக்கப் பூர்வமான செயல்களுக்கு ஈடுபடுத்த முடியாத பரிதாப நிலை உள்ளனர். அங்குள்ள முஸ்லிம்கள் வெளி நாட்டுக் கல்விகள் கற்றாலும் அதனை பயன் படுத்துவதில்லை. ஏனென்றால் பாட்டன், பூட்டன் செல்வம் கொட்டிக் கிடக்கின்றது என்ற ஆணவத்தால். அவ்வாறு எண்ணியதால் தான் இராக், லிபியா போன்ற நாடுகள் அழிந்து கொண்டுள்ளது. சிரியா போன்ற நாடுகள் ஈரான், ரஷியா போன்ற நாடுகளின் உதவியால் நிலைத்து நிற்க முடிகிறது. வட கொரியா  போன்று சொந்தக் காலில் பலம் பெறமுடியா நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் உலக நாடுகளை ஆட்டிப் படைக்க இரு துருவங்களாக ரஷியாவும், அமெரிக்காவும் திகழ்வதால் தான். சீன நெடுங்காலம் இரும்புத்திரையில் இருந்து இப்போது தான் தன் வலிமையினை அடைந்துள்ளது. இனி வரும் காலங்களில் சீனாவும் மூன்றாவது வல்லரசுக்கு சி ஜின்பிங் தலைமையில் கோலோச்சும் என்றால் மிகையாகாது.
இரு துருவங்களாக இருந்த ரஷியாவும், அமெரிக்காவும் ஆயுத போட்டியில் இறங்கியதால் ‘கோல்டு வார்’ என்ற சகாப்தம் ஆரம்பமானது. அமரிக்காவினை ஆண்ட ரீகன் காலத்தில் அமெரிக்கா வல்லமை பெற்றதால் ரஷியா ஜனாதிபதி கோபர்ச்சேவ் ஈடு கொடுக்கமுடியாமல் டிசம்பர் 25, 1991அன்று சோவியத் யூனியன் கலைக்கப் பட்டதாக அறிவித்தார். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் அமெரிக்கா உலக வல்லமை பெற்ற முடிசூடா மன்னராக திகழ்ந்தது. ஆனால் 2000 ஆண்டு புடின் ரசியாவின் ஆட்சிக்கு வந்த பிறகு பக்கத்து செச்சென்யா முஸ்லிம்  குடியரசு  ரசியாவால் கைப்பற்றப்பட்டது. அத்தோடு நில்லாமல் அமெரிக்கா ராணுவம் ஈராக்  சதாம் ஹுசைன் மனிதக்கொல்லி ஆயுதம் வைத்திருப்பதாக கூறி ஈராக்கினை கைப்பற்றி, சதாம் ஹுசைன் சிறைப்பிடிக்கப் பட்டபோது ஜார்ஜ் புஸ்ஸை ரசிய புடின் உங்களது போரை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள், அண்டை நாடான  ஈரானுக்கோ, குவைத்துக்கோ, வட கொரியாவிற்கோ நீடிக்கக் கூடாது என்று எச்சரிக்கை செய்யும் அளவிற்கு ரசியாவினை வலிமை உள்ள நாடாக ஆக்கினார்.

இதுதான் சமயமென்று இரான் ரசியாவுடன் 27 பிப், 2005 அன்று அணு உற்பத்தி சம்பந்தமாக ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டது. அதன் பின்பு அமெரிக்கா-பிரான்ஸ் கூட்டுப் படை லிபியாவின் மீது தன் கவனத்தினைத் திருப்பி 2011 லிபிய நாடு பிடிக்கப் பட்டதோடு அதிபர் கடாபியும் கொல்லப் பட்ட கதை உங்களுக்குத் தெரியும்.
ருசியாவின் புடின் தனது அண்டை நாடான உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை 2014 ஆண்டு கைப் பற்றியதோடு மட்டுமல்லாமல், பக்கத்து நாடான  போலந்து நாட்டையும் ஐரோப்பிய யூனியனிலிருந்து விலக வேண்டும் இல்லையென்றால் உங்கள் நாட்டினை ஒரு வார காலத்திற்குள் தன்னால் பிடிக்க முடியும் என்று அறைகூவல் விட்டது, அதனை கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கைப் பார்த்தது ஐ.நா.பொது சபை மட்டுமல்ல, வல்லரசு நாடான அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் தான் என்றால் மிகையாகாது.
ரசிய,அமரிக்கா ஆயுத போட்டியால் அழிந்தது ஈராக், லிபியா மற்றும் சிரியா நாடுகள். ஈராக்கில் ஷியா ஆட்சி ஈரான் ஷியா அரசு ஆதரவுடன் நிலை நாட்டியதையும், சிரியா நாடு  ஈரான் மற்றும் லெபனான் கொசுபுல்லாஹ் அமைப்புடன் கூடிய ஷியா ஆட்சி நடத்தியும், லிபியாவில் நிலையில்லா மகனே சமத்து என்று பல பிரிவு ஆட்சியையும் நடத்த வழிவகுத்தது.
ஐநா பொதுச்சபை 29 நவம்பர் மாதம், 1947 பாலஸ்தீன நாட்டினை இரண்டாக பிளந்து இஸ்ரேல் என்ற யூத நாட்டினை உருவாக்கியதில் மூலம் பாலஸ்தீன மக்கள் தங்கள் நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப் பட்ட பரிதாப நிலை வந்து விட்டது. இன்னும் பாலஸ்தீன தனி நாடாக ஐநா அங்கீகரிக்க முடியாத கை எழாத நிலை உள்ளது. இதுவரை ஜெருசலம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பொது வழிபாடும் இடமாக இருந்ததினை மாற்றி ஜெருசலத்தில் அமெரிக்கா தூதரகம் அமைத்தது மூலம் ஜெருசலம் இஸ்ரேல் நாட்டிற்கு சொந்தம் போல ஆக்கி விட்டது. அந்த முடிவை எதிர்த்த ஆயிதமில்லா நிராயுத பாணியா பாலஸ்தீன மக்களை 65 பேர்களை கொன்றும், ஆயிரக்கணக்கில் காயம் ஏற்படுத்தியும் செய்துள்ளது இஸ்ரேல், அதனை தட்டிக் கேட்க எந்த நாடும் முன் வரவில்லை. முஸ்லிம் செல்வ நாடான சவுதி அராபியா இளவரசரோ, பாலஸ்தீனர்களைப் பார்த்து ‘நீங்கள் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் சொல்படி கேளுங்கள் இல்லையென்றால் வாயைப் பொத்திக் கொண்டு இருங்கள்  என்று அறிவுரை கொடுக்கின்றார்’. இதைவிட அந்த நாடு வாயை பொத்திக் கொண்டு இருந்திருக்கலாம்.

ரசிய ஆயுதப் போட்டியால் சிரியாவிற்கு ஆதரவு கொடுப்பதின் மூலம் ஷியா அரசு அங்குள்ள மற்ற பிரிவினரை மனித கொல்லி ஆயுதங்கள் மூலம் கொன்றும், குண்டு மழை பொழிந்தும், மாட மாளிகைகள் தகர்க்கப்பட்டும், காயம்பட்டோர் சிகிச்சை பெரும் மருத்துவ மனை தகர்க்கப்பட்டும், மின்சாரம் நிறுத்தப் பட்டும், குடிக்கக் கூட தண்ணீர் இல்லை என்ற நிலை உண்டாக்கியும், தன் நாட்டு மக்கள் கடலை நோக்கி ஆபத்தான பயணங்கள் மேற்கொண்டு காடோ செடியோ என்று ஓடும் பரிதாப நிலை காண நேரும்போது கல்நெஞ்சையும் கரைக்கின்றது. இஸ்ரேல் குண்டு வீச்சில் பத்து மாத பாலஸ்தீன பிஞ்சு குழந்தை இறந்த செய்தி கேட்டு ரத்தக் கண்ணீர் சிந்த வேண்டியுள்ளது. ஈராக், சிரியா, லிபிய, பலஸ்தீன மக்கள் படகுகளில் பொதிமூட்டைபோல ஆழமான கடலில் பயணம் மேற்கொள்ளும்போது படகு பாரந்தாங்காது கவிழ்ந்து கடலே கபர்ஸ்தானாக ஆகும் காட்சி காண்போர்  நெஞ்சை உறுக்கிவிடுகிறது.
அந்த நாட்டிலுள்ள பச்சிளம்  பாலகர்கள் தங்களுக்கென்று ஒரு புகலிடம் இல்லையே, நல்ல உடை இல்லையே, உண்ண ஒரு வாய் உணவு இல்லையே,' ஓதுக'  என்று அல்லாஹ் சொன்னானே அந்த கல்வியைக் கற்க ஒரு பள்ளி இல்லையே என்று ஏங்கி அழும்போது தாயுள்ளம் படைத்த யாருக்கும் இரக்கம் வரும் ஆனால் ஏன் அந்த அதிகார கும்பலுக்குத் தெரியவில்லை என்று இன்னும் புரியாத புதிராக உள்ளதே!
அந்த அதிகார கும்பலுக்குப் புரிய வேண்டும் என்று தான், வட கொரியா அதிபர் தானும் வல்லரசு நாடாக உருவெடுத்தால் தான் தன்னை மதிப்பார்கள் என்று தனது மக்கள் தேவையினை சுருக்கி நாட்டினை வலிமைப் படுத்த அதி நவீன ஆயுதங்களை தயாரித்து ஆதிக்க நாடான அமெரிக்காவிற்கு சவால் விட்டார். அதன் பயன் தான் அவருக்கு தென் கொரியாவில் சிகப்பு கம்பள வரவேற்பு, சிங்கப்பூரில் அமெரிக்கா ட்ரம்ப் அங்கே வந்து வட கொரிய அதிபரை சந்தித்து சமரச பேச்சு என்ற செய்தி.
முஸ்லிம் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவு வட்டலப்பம் ஆகும். அது முட்டை, தேங்காய் பால், சீனி ஆகியவற்றினை கொண்டு சமைத்து சுவையாக உண்ணக்  கூடிய உணவு. அந்த உணவு போல உணவு உண்ணும் விதமாக வட கோரிய அதிபருக்கு சிங்கப்பூரில் சிவப்பு கம்பள வரவேற்பு. அதுவும் யார் சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்கா அதிபர். ஆனால் சொந்த வீட்டினை, நாட்டினை, உண்ண உணவு, உடுக்க உடை, படிக்க பள்ளிக்கூடம், காயம்பட்டோர் சிகிச்சை பெற மருத்துவமனை இல்லாமல் தவிக்கும் முஸ்லிம் மக்களுக்கு வயிறு முட்ட உண்டவன் செமிக்காமல் போடும் புளிச்சேப்பம் தான் என்றால் அந்த நிலை மாற வேண்டுமா என்று கேட்கப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது முஸ்லிம் நாடுகளுக்கு,
எவ்வாறு ரசூலுல்லாஹ் தனி மரமாக இருந்து இஸ்லாமிய மார்க்கம் ஆட்சி நிலை நிறுத்தி  அராபிய, ஆப்ரிக்க, ஆசிய, ஐரோப்பா போன்ற நாடுகள் வரை முஸ்லிம் ஆட்சி நிலை நிறுத்தப் பட்டது என்று சிறிது சிந்திக்க வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் 'ஓதுக' என்று கட்டளையிட்டான் எதற்காக, முஸ்லிம் நாடுகள் தங்களுடைய செல்வத்தினை விஞ்ஞான அறிவியல் வளர்ச்சியில் ஈடுபடுத்தி வட கொரிய நாடு  போன்று  நவீன ஆயுதங்கள் தயாரித்து, பொறியிலில் நவீனங்கள் செயல் படுத்தி தன்னிறைவு நாடுகளாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றினால் மட்டும் தான் முஸ்லிம்கள் உலகில் தலை நிமிர்ந்து நடமாட முடியும் என்றால் மிகையாகுமா!